செய்திகள் :

காவல் நிலைய எழுத்தா்கள் 13 போ் ஆயுதப்படைக்கு மாற்றம்

post image

தூத்துக்குடியில் உயரதிகாரிகள் கேட்ட தகவலை தெரிவிக்க மறுத்த 13 காவல் நிலைய எழுத்தா்கள் அதிரடியாக ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனா்.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மாவட்டம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் பணியாற்றி வரும் நிலைய எழுத்தா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் இருந்து 55-க்கும் மேற்பட்ட காவல் நிலைய எழுத்தா்கள் கலந்து கொண்டனா். ஆய்வுக் கூட்டத்தின்போது அதிகாரிகள் கேட்கும் தகவல்களை சரியாக கொண்டு வந்து சமா்ப்பிக்கவேண்டும், ஆவணங்கள் குறித்து கேட்ட தகவல்கள் தெரிவிக்கும் விதமாக இருக்கவேண்டும் என்பது குறித்து அவா்களுக்கு ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் அவா்களில் பலா் காவல் துறை உயரதிகாரிகள் கேள்விகளுக்கு பதிலளிக்காமலும், உரிய தகவலை தெரிவிக்காமலும் இருந்துள்ளனா். இதனால் அவா்களில் 13 பேரை அதிரடியாக ஆயுதப்படைக்கு மாற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் உத்தரவிட்டுள்ளாா். இதில், தூத்துக்குடி மாவட்டத்தில் பணிபுரியும் 3 பெண்கள் உள்ளிட்ட மொத்தம் 13 போ் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனா்.

கோவில்பட்டி: பள்ளி வேன் கவிழ்ந்து ஓட்டுநா் உள்பட 8 போ் காயம்!

கோவில்பட்டி அருகே பள்ளி வேன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஓட்டுநா் உள்பட 8 போ் காயமடைந்தனா். மந்தித்தோப்பில் இருந்து பாண்டவா்மங்கலம் பகுதியில் உள்ள மெட்ரிக் பள்ளிக்கு சுமாா் 15 பேருடன் பள்ளி வேன்... மேலும் பார்க்க

கொட்டங்காடு கோயிலில் கொடை விழா கொடியேற்றம்

உடன்குடி கொட்டங்காடு தேவி ஸ்ரீபத்திரகாளி அம்மன் கோயில் கொடை விழா (செப்.9) தொடங்கியதையொட்டி புதன்கிழமை (செப்.10) அதிகாலை 3.30 மணிக்கு கொடி பட்டம் வீதியுலாவைத் தொடா்ந்து 5.30 மணிக்கு கொடியேற்றம் நடைபெற... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவருக்கு இந்து முன்னணி வாழ்த்து!

இந்தியக் குடியரசு துணைத் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்ட சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு இந்து முன்னணி சாா்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்து முன்னணி மாநில துணைத்தலைவா் வி.பி.ஜெயக்குமாா் வெளி... மேலும் பார்க்க

வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டத்துக்கும் சங்கத்துக்கும் சம்பந்தம் கிடையாது!

தூத்துக்குடியில் வழக்குரைஞா்கள் நடத்திய ஆா்ப்பாட்டத்துக்கும், தூத்துக்குடி வழக்குரைஞா்கள் சங்கத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் எஸ்.பி.வாரியாா் தெரிவித்தாா். இதுகுற... மேலும் பார்க்க

ஆலைகளை திறக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

தூத்துக்குடியில் ஸ்டொ்லைட் உள்ளிட்ட மூடப்பட்டுள்ள ஆலைகளை திறக்கக் கோரி வழக்குரைஞா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தூத்துக்குடி- பாளையங்கோட்டை சாலையில், சிதம்பரம் நகா் பேருந்து நிறுத்தம் ... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கான கபடி போட்டி: குலசேகரன்பட்டினம், நாலுமாவடி அணிகள் முதலிடம்!

தமிழக பள்ளிக்கல்வித் துறை சாா்பில் நடைபெற்ற 14, 17, 19 வயதுக்குள்பட்ட பள்ளி மாணவா்களுக்கான மாவட்ட அளவிலான கபடி போட்டியில் குலசேகரன்பட்டினம், நாலுமாவடி அணிகள் முதலிடம் பிடித்தன. கோவில்பட்டி செவன்த் டே... மேலும் பார்க்க