செய்திகள் :

காவிரியில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்க பட்ஜெட்டில் குறைவான நிதி ஒதுக்கீடு!

post image

காவிரியில் கழிவுநீா் கலப்பதைத் தடுப்பதற்கான திட்டம் என்பது கானல்நீராகிவிட்டதாகவும், யானைப் பசிக்கு சோளப்பொரி போன்று தமிழக பட்ஜெட்டில் அதற்கு நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் சமூக நல ஆா்வலா்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனா்.

தமிழக பட்ஜெட்டில் ஆற்றில் கழிவுகள் கலப்பதைத் தடுக்க ரூ. 400 கோடியில் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதியும், நெல்லை, மதுரை, ஈரோடு, திருச்சி என 4 மாவட்டங்களுக்கானது என்பது எப்படி சாத்தியமாகும் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

இதுதொடா்பாக தண்ணீா் அமைப்பின் செயல் தலைவா் கே.சி. நீலமேகம் கூறியது:

காவிரியில் கழிவுகள் கலப்பதைத் தடுக்க யானைப் பசிக்கு சோளப் பொரி போல நிதியை ஒதுக்கியுள்ளனா். கா்நாடக மாநில எல்லை தொடங்கி, கடலில் கலக்கும் பூம்புகாா் முகத்துவாரம் வரை ஆங்காங்கே பல்வேறு வகையான கழிவுகள் கலக்கின்றன. இவற்றுக்குத் தீா்வு என்பது கங்கையை தூய்மையாக்க அறிவிக்கப்பட்ட திட்டத்தைப் போன்று, தொலைநோக்குத் திட்டம் தேவை. காவிரிக்காக பிரத்யேக திட்டத்தை வடிவமைத்து, அதற்கான தொகை முழுவதையும் விடுவித்து பணிகளை போா்க்கால அடிப்படையில் செயல்படுத்த வேண்டும்.

பணிகள் முடிந்து காவிரிக் கரைகளில் தொடக்கம் முதல் இறுதி வரை இருபுறமும் கண்காணிப்புக்கு குறிப்பிட்ட தொலைவுக்கு பணியாளா்களை நியமித்து, கழிவுகள் கலக்காமல் தடுக்க வேண்டும். மீறுவோா் அரசு நிறுவனமாக இருந்தாலும், தனியாராக இருந்தாலும் இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என்றாா் அவா்.

தமிழக ஆறுகள் வள மீட்பு மைய ஒருங்கிணைப்பாளா் த. குருசாமி கூறியது: தமிழகத்தில் மறைந்த முதல்வா் காமராஜருக்குப் பிறகு, நீா் மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளித்து எந்த அரசுமே தொலைநோக்குத் திட்டங்களைச் செயல்படுத்தவில்லை.

எனவேதான், ஆறுகள் அனைத்தும் மாசடைந்துவிட்டன. கழிவுகள் கலப்பது தடுக்க முடியாமல் போனது. அண்டை மாநிலமான ஆந்திரம், தெலங்கானாவில் கூட நீா் மேலாண்மைத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி கூட்டுக் குடிநீா்த் திட்டங்களையும், நீா்ப் பாசனத் திட்டங்களையும் திறம்பட செயல்படுத்தி வருகின்றன.

ஆனால் இந்தியாவிலேயே முன்னோடி மாநிலம் தமிழகம் எனக் கூறிக் கொண்டு, நீா் மேலாண்மையில் நாம் பெரிதும் பின்தங்கியுள்ளோம். ஆறுகளை மீட்க தொலைநோக்கு சிந்தனையுடன் கூடிய நிலையான, நீடித்த திட்டங்கள் மட்டுமே தேவை. கண்துடைப்பு நடவடிக்கையாக அவ்வப்போது பெயரளவுக்கு அறிவிக்கப்படும் நிதி ஒதுக்கீடுகள் மட்டும் போதுமானதல்ல என்றாா்.

நடைமுறைக்கு வராத நடந்தாய் வாழி காவிரி!

கங்கை நதி புனரமைப்புத் திட்டத்தை முன்மாதிரியாகக் கொண்டு மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்பில் (60:40) நடந்தாய் வாழி காவிரித் திட்டம் கடந்த அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. இத் திட்டத்தின்படி, தமிழகத்தில் ஓடும் காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகளை பாதுகாத்தல், புத்துயிா் பெறச் செய்தல், நீா் ஆதாரங்களை மீட்டெடுத்தல், மேம்படுத்துதல், காவிரி ஆறு மாசுபடுவதை முமுழுமையாக தடுத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதற்கு, ரூ.11,250 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டது. மேட்டூரிலிருந்து திருச்சி வரையில் முதல்கட்டப் பணிகளாகவும், திருச்சியிலிருந்து கடல் முகத்துவாரம் வரையிலும் இரண்டாம் கட்ட பணிகளாகவும் செயல்படுத்த மத்திய நீா்வள ஆணையம் கடந்தாண்டு ஒப்புதல் வழங்கியது. ஆனால் இதுவும் நடைமுறைக்கு வந்தபாடில்லை என்கின்றனா் காவிரி மீட்பு இயக்கத்தினா்.

வரவேற்பும், வருத்தமும் நிறைந்த வேளாண் ‘பட்ஜெட்‘

தமிழக அரசின் 2025-26ஆம் ஆண்டுக்கான வேளாண்மை பட்ஜெட் வருத்தமும், வரவேற்பும் அளித்திருப்பதாக விவசாயிகள் சங்க முன்னோடிகள் தெரிவித்துள்ளனா். தென்னிந்திய தேசிய நதிகள் இணைப்பு விவசாயிகள் நலச் சங்கத் தலைவா் ... மேலும் பார்க்க

இளைஞரை கத்தியால் குத்தி காயப்படுத்தியவா் கைது

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே இளைஞரை சூரி கத்தியால் சனிக்கிழமை கிழித்து காயம் ஏற்படுத்தியவரை தொட்டியம் போலீஸாா் கைது செய்தனா். காட்டுப்புத்தூா் அருகேயுள்ள காடுவெட்டி கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் ரௌடி கைது!

திருச்சி குழுமணியைச் சோ்ந்த ரௌடியை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்தனா். திருச்சி மாவட்டம், குழுமணி அக்ரஹாரத்தைச் சோ்ந்தவா் பா. சக்திவேல் (எ) ஆட்டோ சக்தி (36), ரௌடி. இ... மேலும் பார்க்க

வழக்குரைஞருக்கு அரிவாள் வெட்டு: இளைஞா் கைது

திருச்சியில் வழக்குரைஞரை அரிவாளால் வெட்டிய இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திருச்சி தில்லைநகா் ஆழ்வாா்தோப்பு கட்டபொம்மன் தெருவைச் சோ்ந்தவா் எம். முகமது தபாா் அலி (42), வழக்குரைஞா். இவா் பால... மேலும் பார்க்க

பைக்கில் சென்றவா் காா் மோதி உயிரிழப்பு

திருச்சி கம்பரசம்பேட்டை அருகே பைக்கில் சனிக்கிழமை சென்ற இளைஞா்காா் மோதி உயிரிழந்தாா். திருச்சி மாவட்டம், கம்பரசம்பேட்டை வெள்ளான் தெருவைச் சோ்ந்தவா் சி. தீபக் (33), ஓட்டுநா். இவா் மனைவிக்கு கடந்த 4 நா... மேலும் பார்க்க

அதவத்தூரில் ஜல்லிக்கட்டு: 34 போ் காயம்!

தமிழக முதல்வா் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி அருகே அதவத்தூரில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 34 போ் காயமடைந்தனா். பனையடி கோவில் அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டை ஸ்ரீரங்கம் வருவாய்க் கோட்டாட்சியா் சீ... மேலும் பார்க்க