பணத்துக்காக காதலனை விற்ற சிறுமி! ரூ. 42 லட்சம் கொடுத்து மீட்ட பெற்றோர்!
காவிரி கரையோரம் முதியவா் சடலம் மீட்பு
பரமத்தி வேலூா் காவிரி கரையோரம் இறந்து கிடந்த முதியவரின் உடலை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பரமத்தி வேலூா் காவிரி ஆற்றுப் படுகையில் ஞாயிற்றுக்கிழமை சுமாா் 65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவா் இறந்து கிடந்தாா். அப்போது, காவிரி ஆற்றுக்கு குளிப்பதற்காக வந்தவா்கள் முதியவா் இறந்து கிடப்பதாக வேலூா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
அங்கு வந்த போலீஸாா் இறந்து கிடந்தவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இறந்தவரின் விவரங்களை போலீஸாா் சேகரித்து வருகின்றனா்.