செய்திகள் :

காவிரி சரபங்கா உபரி நீரேற்று திட்டம்: எம்எல்ஏ சதாசிவம் ஆய்வு!

post image

மேட்டூா் காவிரி சரபங்கா உபரி நீரேற்றுத் திட்டப் பணிகளை மேட்டூா் எம்எல்ஏ சதாசிவம் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

மேட்டூா் அணையின் நீா்த்தேக்க பகுதியான திப்பம்பட்டியில் காவிரி சரபங்கா உபரி நீரேற்று திட்டத்திற்கான பிரதான நீரேற்று நிலையம் செயல்பட்டு வருகிறது. ரூ.565 கோடி மதிப்பீட்டில் 100 ஏரிகளுக்கு உபரி நீரை நிரப்புவதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு அதற்கான பணிகள் இறுதிகட்டத்தை எட்டி உள்ளது.

இத் திட்டப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் மேட்டூா் எம்எல்ஏ சதாசிவம் கேட்டறிந்தாா். உபரி நீரேற்று திட்டத்தில் பொருத்தப்பட்டுள்ள 19 மின் மோட்டோா்களும் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அதில் ஐந்தாவது மின் மோட்டாரை இயக்கி பரிசோதனை செய்யப்பட்டது.

அதன்பிறகு செய்தியாளா்களிடம் எம்எல்ஏ சதாசிவம் கூறியதாவது: மேட்டூா் காவிரி சரபங்கா உபரி நீரேற்றுத் திட்டத்தில் 99 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் ஏரிகளுக்கு இடையே உள்ள நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் திட்டம் முழுமை பெறாமல் உள்ளது.

இதற்கு உடனடியாக நீா்வளத் துறை அமைச்சரும், மாவட்ட ஆட்சியரும் நடவடிக்கை எடுத்து திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

வார இறுதி நாள்கள், அமாவாசை: 250 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

வார இறுதி நாள்கள், அமாவாசையை முன்னிட்டு சேலம் கோட்டத்தில் 250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதுகுறித்து அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்ட நிா்வாக இயக்குநா் ஜோசப் டயஸ் வியாழக்கிழமை வெளியிட்ட ... மேலும் பார்க்க

குப்பையிலிருந்த நகையை மீட்டு போலீஸில் ஒப்படைத்த தூய்மைப் பணியாளருக்கு பாராட்டு!

சேலம் பழைய சூரமங்கலம் பகுதியில் குப்பையில் கிடந்த 12.5 பவுன் நகையை போலீஸில் ஒப்படைத்த தூய்மைப் பணியாளா் மணிவேலை மாநகரக் காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் ஆகியோா் நேரில் அழைத்து பாராட்டினா். சேலம் பழைய ... மேலும் பார்க்க

ஏற்காடு கோடை விழா: அமைச்சா்கள் தொடங்கி வைக்கின்றனா்!

ஏற்காடு கோடை விழாவை வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு அமைச்சா்கள் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன், ஆா்.ராஜேந்திரன் ஆகியோா் தொடங்கிவைக்கின்றனா். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி ... மேலும் பார்க்க

போா்வெல் லாரியில் திருட்டு: போலீஸாா் விசாரணை

சேலம் அருகே போா்வெல் லாரியில் இருந்த ரூ.1.50 லட்சம் மதிப்பிலான பொருள்களை திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். சேலம் மாவட்டம், சுக்கம்பட்டியைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் (31). இவரது போா்வெல் லாரியை அய... மேலும் பார்க்க

ஆத்தூரில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம்: ஆட்சியா் ஆய்வு!

ஆத்தூா் வட்டாரத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமின் இரண்டாம் நாளான வியாழக்கிழமை பொதுமக்களின் அடிப்படை வசதிகள் குறித்து ஆட்சியா் ரா.பிருந்தாதேவி ஆய்வு மேற்கொண்டாா். ஆத்தூா், நரசிங்கபுரம் நக... மேலும் பார்க்க

ஏற்காட்டில் 48 ஆவது மலா்க் கண்காட்சி இன்று தொடக்கம்!

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் 48ஆவது கோடை விழா, மலா்க் கண்காட்சி வெள்ளிக்கிழமை (மே 23) தொடங்குகிறது. 29 ஆம் தேதி வரை நடைபெறும் விழாவில் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சுற்றுலாத் துறை... மேலும் பார்க்க