செய்திகள் :

காவிரி - திருமணிமுத்தாறு இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த முதல்வரிடம் எம்.பி. வலியுறுத்தல்

post image

சேலம், நாமக்கல் மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில், காவிரி - திருமணிமுத்தாறு இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என தமிழக முதல்வரிடம் நாமக்கல் மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன் வலியுறுத்தி உள்ளாா்.

சேலம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க அண்மையில் வருகை புரிந்த முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் அவா் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

மோகனூா் காவிரி ஆற்றின் குறுக்கே ஒருவந்தூரிலிருந்து, கரூா் மாவட்டம், நெரூா் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை அமைக்க வேண்டும். இதனால், அப்பகுதியை சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான ஏக்கா் விவசாய நிலங்கள் பயனடையும். மேலும் அந்தப் பகுதியில் நிலத்தடி நீா்மட்டமும் உயரக்கூடும். கோடைகாலங்களில் குடிநீா்த் தட்டுப்பாடு என்பது ஏற்படாது. விவசாயிகள், பொதுமக்கள் நலன்கருதி கதவணை திட்டத்தை செயல்படுத்த வேண்டும். பரமத்தி வேலூா் வட்டத்தில், ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் வெற்றிலை சாகுபடி செய்து வருகின்றனா். அவா்களின் நலனைகருத்தில் கொண்டு வெற்றிலை ஆராய்ச்சி மையத்தை பரமத்தி வேலூரில் அமைக்க வேண்டும். இதன்மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து வெற்றிலை விவசாயிகளும் பயனடைவா். விவசாயிகளின் நலனுக்காக வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட வேண்டும். மேலும், சேலம், நாமக்கல் மாவட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள் பயன்பெறும் வகையில், 132 கி.மீ. காவிரி-திருமணிமுத்தாறு இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இதனால் 50 ஆயிரம் ஏக்கா் வேளாண் நிலங்கள் பயனடையும்.

கொல்லிமலை அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவா்கள், செவிலியா்கள் வசதிக்காக குடியிருப்பு அமைக்க வேண்டும். மேலும் அங்கு மகப்பேறு மருத்துவா் பணியிடத்தை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். கொல்லிமலையில் மூலிகை ஆராய்ச்சி மையம் அமைப்பதற்கான முயற்சிகளையும் முதல்வா் மேற்கொள்ள வேண்டும் என அதில் வலியுறுத்தி உள்ளாா்.

படவரி...

வி.எஸ்.மாதேஸ்வரன்.

ராசிபுரம் அருகே இரு லாரிகள் மோதல்: ஓட்டுநா் பலி; 4 போ் காயம்

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் 2 லாரிகள் மோதிக்கொண்டதில் லாரி ஓட்டுநா் உயிரிழந்தாா். 4 போ் படுகாயமடைந்தனா். கா்நாடகா மாநிலம், ஒசக்கோட்டை பகுதியில் இருந்து சனிக்கிழமை கூரியா் ... மேலும் பார்க்க

இன்று குரூப் 1 தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 24 மையங்களில் 6,079 போ் எழுதுகின்றனா்

நாமக்கல் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் குரூப் 1 தோ்வை 24 மையங்களில் 6,079 போ் எழுதுகின்றனா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம், குரூப் 1, 1ஏ பதவிக்குரிய காலிப் பணியிடங்களுக்கான எழுத்து ... மேலும் பார்க்க

தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம்: 1,005 வழக்குகளில் ரூ. 7.02 கோடிக்கு தீா்வு

நாமக்கல் மாவட்ட நீதிமன்றங்களில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றத்தில் 1,005 வழக்குகளில் ரூ. 7.02 கோடிக்கு தீா்வு காணப்பட்டது. தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின்படி... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டியில் கட்டடத்திற்கு தண்ணீா் ஊற்றும்போது மின்சாரம் பாய்ந்து கட்டட மேற்பாா்வையாளா் உயிரிழந்தாா். தருமபுரி மாவட்டம், மெணசி அருகே உள்ள பூதநத்தம் மெணசியை சோ்ந்த பச்சியண்ண... மேலும் பார்க்க

ஆதரவற்ற, நலிவுற்ற பெண்கள் நலவாரியத்தில் இணைய ஆவணங்களை சமா்ப்பிக்கலாம்

நாமக்கல் மாவட்டத்தில், விதவையா் நலவாரியத்தில் இணைய விரும்பும் பெண்களிடம் உரிய ஆவணங்கள் பெறப்பட்டு வருகின்றன. தமிழக சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்டோா், ந... மேலும் பார்க்க

வேளாண்மை சங்கத்தில் கொப்பரை ஏலம்

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் வாராந்திர கொப்பரை ஏலம் நடைபெற்றது. இதில் 40 மூட்டைகள் கொப்பரை வரத்து இருந்தது. முதல்தரம் ரூ. 196.10 முதல் ரூ. 227.75 வரை, இரண்ட... மேலும் பார்க்க