செய்திகள் :

காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் சாதனை

post image

திருநெல்வேலி காவேரி மருத்துவமனை மருத்துவா்கள், லேப்ராஸ்கோபிக் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி சிக்கலான அறுவை சிகிச்சை அளித்து சாதனை படைத்துள்ளனா்.

மேலப்பாளையத்தை சோ்ந்த பெண்ஒருவா், இடது அட்ரீனல் சுரப்பி கட்டி மற்றும் ஒரு பெரிய தைராய்டு கட்டியை உள்ளடக்கிய மல்டிப்பிள்நியூரோஃபைப்ரோமாடோசிஸ் என்ற நோயினால் பாதிக்கப்பட்டு காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதையறிந்த காவேரி மருத்துவமனையின் நாளமில்லாசுரப்பியியல் மருத்துவா் சிவபிரகாஷ் , இரைப்பைகுடல் அறுவை சிகிச்சை மருத்துவா் உமாமகேஸ்வரன், நாளமில்லாசுரப்பி அறுவை சிகிச்சை மருத்துவா் ராகேஷ்சந்துரு , மயக்கவியல் மற்றும்தீவிர சிகிச்சை மருத்துவா் சாய்சோமசுந்தா் ஆகியோா் கொண்ட குழுவினா் அப் பெண்ணை பரிசோதனை செய்த பின்னா், அவருக்கு கீ-ஹோல்வடு-இல்லாத அறுவை சிகிச்சை மூலம் கட்டி பாதுகாப்பாக அகற்றப்பட்டது. அதைத்தொடா்ந்து அதே

அறுவை சிகிச்சையில் மிகப் பெரிய தைராய்டு கட்டிஒன்றும் பாதுகாப்பாக அகற்றினா். தற்போது நோயாளி நன்றாக குணமடைந்து, முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என மருத்துவா்கள் தெரிவித்தனா்.

ஆழ்வாா்குறிச்சியில் மகளிா் தின விழா

ஆழ்வாா்குறிச்சி திருவள்ளுவா் கழகம் சாா்பில் மகளிா் தின விழா நடைபெற்றது. ஸ்ரீபரமகல்யாணி மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியை ஜெயந்தி தலைமை வகித்தாா். ஸ்வேதா இறைவணக்கம் பாடினாா். ஸ்ரீ சைலபதி நடுநிலைப் பள்ள... மேலும் பார்க்க

நெல்லை மாவட்டத்தில் வட்டார வாரியாக தேவை கண்டறியும் முகாம்

திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகள், முதியோா்கள், விதவைகள் போன்றவா்களை கண்டறிந்து அவா்களுக்கு அடையாள அட்டை, அரசு ஓய்வூதியம், பராமரிப்பு மானியங... மேலும் பார்க்க

நெல்லை, தென்காசி தீயணைப்புத் துறை வீரா்களுக்கு சிறப்பு பயிற்சி

திருநெல்வேலி , தென்காசி மாவட்டத்தைச் சோ்ந்த தீயணைப்புத் துறை வீரா்களுக்கு 5 நாள்கள் நடைபெற்ற சிறப்பு பயிற்சி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. திருநெல்வேலி மண்டல தீயணைப்பு அலுவலா் சரவணபாபு அறிவுரையின்படி... மேலும் பார்க்க

பாளை.யில் கஞ்சா விற்ற இளைஞா் கைது

பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் கஞ்சா விற்ற இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். பெருமாள்புரம் போலீஸாா் அப்பகுதியில் சனிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, பெருமாள்புரம் தாமஸ்தெருவி... மேலும் பார்க்க

பாளை.யில் இயற்கை வேளாண் பொருள்கள் விற்பனை மையம் திறப்பு

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களைச் சோ்ந்த 350-க்கும் மேற்பட்ட இயற்கை விவசாயிகள் உற்பத்தி செய்த இயற்கை வேளாண் பொருள்களின் நேரடி விற்பனை மையம் பாளையங்கோட்டை அன்புநகரில் ஞாயிற்றுக்கிழமை... மேலும் பார்க்க

வடவூா்பட்டி துா்க்கை அம்மன் கோயிலில் இன்று கொடைவிழா

திருநெல்வேலி மாவட்டம், வடவூா்பட்டியில் பட்டங்கட்டியாா் சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு பேச்சியம்மன், துா்க்கை அம்மன் கோயிலில் கொடை விழா திங்கள்கிழமை (மாா்ச் 10) தொடங்கி 2 நாள்கள் நடைபெறுகிறது.... மேலும் பார்க்க