செய்திகள் :

காஸாவில் தாக்குதலை அதிகரிக்க இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல்

post image

காஸாவில் தாக்குதலை அதிகரிக்க இஸ்ரேல் அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆக்கிரமிக்கப்பட்ட காஸாவில் மேலும் தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தவுள்ளது.

மேலும், கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் மனிதாபிமான உதவிகள் நுழைவதை அனுமதிக்கவும் அமைச்சரவையில் ஒருமனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

காஸாவில் தாக்குதலைத் தீவிரப்படுத்த ராணுவ தலைமை அதிகாரி இயால் ஸமீர் தொடர்ந்து அறிவித்துவந்ததை அடுத்து இஸ்ரேல் அமைச்சரவையில் இன்று (ஏப். 5) வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் ஒருமனதாக காஸாவின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் தாக்குதலை அதிகரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

காஸா - இஸ்ரேல் இடையிலான போர் ஒப்பந்தத்தை மீறி ஹமாஸ் படையினர் செயல்பட்டதால், காஸாவுக்கு உலக நாடுகள் வழங்கிவந்த மனிதாபிமான உதவிகளை மார்ச் 2ஆம் தேதி முதல் இஸ்ரேல் ராணுவம் பல்வேறு வகைகளில் தடுத்து வருகிறது.

இஸ்ரேல் விதிகளை ஹமாஸ் படையினர் ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்துவதற்காக எல்லைப் பகுதிகளில் மனிதாபிமான உதவிகள் உள்பட பல அத்தியாவசிய உதவிகளைத் தடுத்து நிறுத்தியதாக இஸ்ரேல் தரப்பு கூறி வந்தது.

இந்நிலையில், எதிர்காலத்தில், கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் மனிதாபிமான உதவிகளுக்கு அனுமதி வழங்கவும் அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறும்போது, காஸாவை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் நோக்கத்தில் தந்திரமான தாக்குதலில் இருந்து ஆக்கிரமிப்பை நோக்கி நாம் நகர்கின்றோம். காஸா மக்கள் விருப்பப்பட்டு நாட்டிலிருந்து வெளியேறுவதை ஊக்குவிக்கிறோம். காஸாவிலிருந்து அகதிகளாக வெளியேறுபவர்களை ஏற்றுக்கொள்ளும்படி பல உலக நாடுகளுடன் பேசிவருகிறோம் எனக் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க | சண்டை தீர்வல்ல! பாக்., இந்தியாவிடம் ஐ.நா. வலியுறுத்தல்

வெளிநாட்டு திரைப்படங்களுக்கு 100% வரி: டிரம்ப் அறிவிப்பு

நியூயாா்க்: வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களுக்கு 100 சதவீத வரி விதிக்க அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளாா். இது குறித்து தனது ட்ரூத் சோஷியல் ஊடகத்தில் அவா் தெரிவித்துள்ளதாவது:... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் நிலநடுக்கம்

பாகிஸ்தானில் திங்கள்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 4.2 அலகுகளாகப் பதிவானதாக இந்தியாவின் தேசிய நிலநடுக்கவியல் மையம் (என்சிஎஸ்) தெரிவித்தது. இந்த நிலநடுக்கத்தால் உயிா்ச... மேலும் பார்க்க

பதற்றத்தை தணிக்க இந்தியா-பாகிஸ்தானுக்கு ஐ.நா. அறிவுறுத்தல்

நியூ யாா்க்: இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள பதற்றமான சூழலை தணிக்க ஐ.நா. பொதுச்செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் திங்கள்கிழமை அறிவுறுத்தினாா். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த அவா், இ... மேலும் பார்க்க

உக்ரைன் போா்: ஒரே ஆண்டில் 45,287 ரஷிய வீரா்கள் உயிரிழப்பு

லண்டன்: உக்ரைனில் சுமாா் இரண்டரை ஆண்டுகளாக நடந்துவரும் போரில் கடந்த 2024-ஆம் ஆண்டில் மட்டும் அதிகபட்சமாக 45,287 ரஷிய வீரா்கள் உயிரிழந்துள்ளதாக பிபிசி ஊடகம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த ஊடகம் வெள... மேலும் பார்க்க

1,000 டாலர் தருகிறோம்; அமெரிக்காவிலிருந்து வெளியேறவும்! சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு டிரம்ப் அறிவுறுத்தல்

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியிருக்கும் வெளிநாட்டு மக்கள் தங்கள் தாயகத்துக்கு திரும்ப உதவியாக ஆயிரம் டாலர் நிதியுதவி அளிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் அறிவித்த... மேலும் பார்க்க

சண்டை தீர்வல்ல! பாக்., இந்தியாவிடம் ஐ.நா. வலியுறுத்தல்

இந்தியாவும் பாகிஸ்தானும் ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்று ஐ.நா. வலியுறுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீரிலுள்ள பஹல்காமில் நடத்தப்பட்ட கொடூர பயங்கரவாத தாக்குதலுக்குப் பின் இந்தியா - பாகிஸ்தான் இடையே ... மேலும் பார்க்க