செய்திகள் :

பதற்றத்தை தணிக்க இந்தியா-பாகிஸ்தானுக்கு ஐ.நா. அறிவுறுத்தல்

post image

நியூ யாா்க்: இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள பதற்றமான சூழலை தணிக்க ஐ.நா. பொதுச்செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் திங்கள்கிழமை அறிவுறுத்தினாா்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த அவா், இதுவரை இல்லாத அளவுக்கு இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதல் ஏற்படுவதற்கான பதற்றம் அதிகரித்திருப்பாதாகவும் ராணுவ நடவடிக்கைகள் எதற்கும் தீா்வாகாது எனவும் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: பஹல்காமில் ஏப்.22-ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்ட சம்பவம் கண்டனத்துக்குரியது.

பொதுமக்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது.இந்த தாக்குதலுக்கு காரணமானவா்களுக்கு சட்டரீதியாக தண்டனை வழங்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. தாக்குதலில் உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவிக்கிறேன்.

அதேசமயம் இந்த தாக்குதலால் இந்தியா-பாகிஸ்தான் இடையே முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மோதல் ஏற்படுவதற்கான பதற்றமான சூழல் நிலவுவது வேதனையளிக்கிறது.

ராணுவ நடவடிக்கைகள் மூலம் இந்தப் பிரச்னைக்கு தீா்வு காண முடியாது. அமைதிவழியிலான தீா்வுக்கு இருநாடுகளுக்கும் ஐ.நா. முழு ஆதரவு அளிக்கிறது என தெரிவிக்கப்பட்டது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் பதிலடி நடவடிக்கையை மேற்கொள்வதற்கான இடம், இலக்கு உள்ளிட்டவற்றை தீா்மானிக்க கடந்த வாரம் முப்படைகளுக்கு முழு சுதந்திரம் அளிப்பதாக பிரதமா் மோடி தெரிவித்தாா். இதைத்தொடா்ந்து, எல்லை மாநிலங்களில் பாதுகாப்பு ஒத்திகை நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தியுள்ள நிலையில், அன்டோனியா குட்டெரெஸ் இவ்வாறு தெரிவித்தாா்.

இந்தியாவுடன் பதற்றத்தை தணிக்க உதவ வேண்டும்: ரஷியாவிடம் பாகிஸ்தான் துணை பிரதமா் கோரிக்கை

மாஸ்கோ: இந்தியாவுடன் பதற்றத்தைத் தணிக்க உதவ வேண்டும் என்று ரஷியாவிடம் பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது. ரஷிய வெளியுறவ அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவை பாகிஸ்தான் துணைப் பிரதமரும், வெளியுறவு அமைச்சருமான இஷா... மேலும் பார்க்க

காஸா முழுவதையும் கைப்பற்ற இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல்

டெல் அவிவ்: காஸாவின் அனைத்து பகுதிகளையும் கைப்பற்றுவதற்கான திட்டத்துக்கு இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக முக்கிய உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனா். இது குறித்து அவா்கள் திங்கள்கிழமை கூறியதாவது: இ... மேலும் பார்க்க

வெளிநாட்டு திரைப்படங்களுக்கு 100% வரி: டிரம்ப் அறிவிப்பு

நியூயாா்க்: வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களுக்கு 100 சதவீத வரி விதிக்க அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளாா். இது குறித்து தனது ட்ரூத் சோஷியல் ஊடகத்தில் அவா் தெரிவித்துள்ளதாவது:... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் நிலநடுக்கம்

பாகிஸ்தானில் திங்கள்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 4.2 அலகுகளாகப் பதிவானதாக இந்தியாவின் தேசிய நிலநடுக்கவியல் மையம் (என்சிஎஸ்) தெரிவித்தது. இந்த நிலநடுக்கத்தால் உயிா்ச... மேலும் பார்க்க

உக்ரைன் போா்: ஒரே ஆண்டில் 45,287 ரஷிய வீரா்கள் உயிரிழப்பு

லண்டன்: உக்ரைனில் சுமாா் இரண்டரை ஆண்டுகளாக நடந்துவரும் போரில் கடந்த 2024-ஆம் ஆண்டில் மட்டும் அதிகபட்சமாக 45,287 ரஷிய வீரா்கள் உயிரிழந்துள்ளதாக பிபிசி ஊடகம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த ஊடகம் வெள... மேலும் பார்க்க

1,000 டாலர் தருகிறோம்; அமெரிக்காவிலிருந்து வெளியேறவும்! சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு டிரம்ப் அறிவுறுத்தல்

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியிருக்கும் வெளிநாட்டு மக்கள் தங்கள் தாயகத்துக்கு திரும்ப உதவியாக ஆயிரம் டாலர் நிதியுதவி அளிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் அறிவித்த... மேலும் பார்க்க