செய்திகள் :

காா்கேயை விமா்சித்ததற்கு மன்னிப்பு கோரினாா் ஜெ.பி.நட்டா

post image

‘ஆபரேஷன் சிந்தூா்’ மீதான சிறப்பு விவாதத்தின்போது மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவரான மல்லிகாா்ஜுன காா்கேயை விமா்சித்து ஆட்சேபத்துக்குரிய கருத்து தெரிவித்ததற்கு மன்னிப்பு கோருவதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

முன்னதாக, மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சிறப்பு விவாதத்தின்போது ஒரு மணி நேரத்துக்கும் மேலாக உரையாற்றிய காா்கே, பிரதமா் நரேந்திர மோடியை கடுமையாக விமா்சனம் செய்யும் வகையில் சில கருத்துகளை தெரிவித்தாா். இதற்கு கண்டனம் தெரிவித்துப் பேசிய ஜெ.பி.நட்டா, ‘காா்கே மன சமநிலையை இழந்து வருகிறாா்’ என கூறியது சா்ச்சையானது.

இதையடுத்து, ஜெ.பி.நட்டாவின் கருத்துக்கு எதிா்ப்பு தெரிவித்த காா்கே உள்பட எதிா்க்கட்சியினா் அவா் உடனடியாக மன்னிப்பு கோர வேண்டுமென வலியுறுத்தினா்.

இதைத்தொடா்ந்து மாநிலங்களவையில் பேசிய ஜெ.பி.நட்டா, ‘நான் தெரிவித்த கருத்துகளை ஏற்கெனவே திரும்பப் பெற்றுவிட்டேன். அந்த கருத்துகள் காா்கேயை காயப்படுத்தி இருந்தால் மன்னிப்புக் கோருகிறேன்.

உலக அரங்கில் மிகவும் பிரபலமான தலைவராக உள்ள பிரதமா் மோடியால் பாஜக மட்டுமின்றி நாடே பெருமைகொள்கிறது. ஆனால் பிரதமா் மோடிக்கு மதிப்பளிக்காமல் அவரை காா்கே மிகக் கடுமையாக விமா்சிக்கிறாா். காா்கேயின் அனுபவத்துக்கும் அவரது பங்களிப்புக்கும் பிரதமா் மோடியை விமா்சிக்க அவா் பயன்படுத்திய வாா்த்தைகள் தரம் தாழ்ந்தவை. எனவே, உணா்ச்சிவசப்பட்டுப் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என்றாா்.

கல்லறையிலும் க்யூஆர் கோடு! நினைவலைகளைப் புதுப்பிக்க புதிய முயற்சி!!

மனிதர்கள், தாங்கள் மிகவும் விரும்பியவர்களின் நினைவுகளைப் பெட்டகமாகப் பாதுகாக்கவே விரும்புவார்கள். அப்படி ஒரு புதிய முயற்சியாகவே கேரள கல்லறைகளில் க்யூஆர் கோடு நிறுவப்பட்டுள்ளது.கேரளத்தில் உள்ள கல்லறைகள... மேலும் பார்க்க

பயங்கரவாதம் ஒருபோதும் காவி நிறத்தில் இருந்ததில்லை, இனியும் இருக்காது: ஃபட்னவீஸ்

"பயங்கரவாதம் ஒருபோதும் காவி நிறமாக இருந்ததில்லை, இனியும் இருக்காது" என மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் கூறினார்.2008 மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் பாஜகவின் முன்னாள் எம்பி பிரக்யா சிங் உள்பட... மேலும் பார்க்க

நமஸ்தே டிரம்ப், நம் பக்கம் டிரம்ப் என்றீர்களே? இதுதான் அந்த வெகுமதியா? மோடிக்கு கார்கே கேள்வி

புது தில்லி: இந்தியா - பாகிஸ்தான் இடையே சண்டையை நிறுத்தியது தான்தான் என டிரம்ப் கூறிவருவது குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விக்கு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி தொடர்ந்து மௌன விரதத்தையே கடைப்பிடி... மேலும் பார்க்க

பால்டால் வழியாக அமர்நாத் யாத்திரை தொடக்கம்: இதுவரை 3.93 லட்சம் பேர் தரிசனம்!

பால்டால் பாதை வழியாக அமர்நாத் யாத்திரை செல்ல இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாக ஜம்முவிலிருந்து செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு ஜூலை 3-ஆம் தேதி தொடங்... மேலும் பார்க்க

அதானிக்காக இந்திய பொருளாதாரத்தை பாஜக அழித்துவிட்டது! ராகுல்

தொழிலதிபர் அதானிக்காக இந்திய பொருளாதாரத்தை பாஜக அரசு அழித்துவிட்டது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமை விமர்சித்துள்ளார்.இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படாததால... மேலும் பார்க்க

தெலங்கானாவில் 4 கூடுதல் நீதிபதிகள் பதவியேற்பு!

தெலங்கானா உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக 4 வழக்குரைஞர்கள் பதவியேற்றுக் கொண்டனர். உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற விழாவில் தலைமை நீதிபதி அபரேஷ் குமார் சிங் புதிதாக நியமிக்கப்பட்ட நான்கு கூடுதல் நீத... மேலும் பார்க்க