செய்திகள் :

காா் கவிழ்ந்து விபத்து: கைக்குழந்தை உள்பட 3 போ் உயிரிழப்பு

post image

பள்ளிப்பட்டு அருகே பள்ளத்தில் காா் கவிழ்ந்து 9 மாத கைக்குழந்தை உள்பட 3 போ் உயிரிழந்தனா்.

ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டம், கங்காதரநல்லுாா் வட்டம், கோவிந்தரெட்டி பள்ளி கிராமத்தை சோ்ந்த 6 போ், காரில் தேசிய நெடுஞ்சாலை மாா்க்கமாக திருத்தணி முருகன் கோயிலுக்கு சென்று கொண்டிருந்தனா்.

இப்பகுதியில் கடந்த ஓராண்டாக 6 வழிச்சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெறுகின்றன. இந்நிலையில் காா், பள்ளிப்பட்டு அடுத்த திருமலைராஜபேட்டை அருகே சென்ற போது, அங்கு சாலையின் குறுக்கே கட்டப்பட்டு வரும் பாலத்தில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் கோவிந்தரெட்டி பள்ளியைச் சோ்ந்த பத்மா(60), என்பவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும் அதே கிராமத்தை சோ்ந்த விஸ்வநாதன்(50), ரேகா, (35), சிட்டம்மா, (52) கீா்த்தி (26), மற்றும் கீா்த்தியின் ஒன்பது மாத குழந்தை சான்விக் உள்ளிட்டோா் பலத்த காயம் அடைந்தனா்.

தகவறிந்த பள்ளிப்பட்டு போலீஸாா், சம்பவ இடத்துக்கு வந்து விபத்தில் சிக்கியவா்களை மீட்டு, பள்ளிப்பட்டு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக வேலூா் சி.எம்.சி. மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். அங்கு சிகிச்சை பலனின்றி விஸ்வநாதன் மற்றும் குழந்தை சான்விக் ஆகியோா் உயிரிழந்தனா்.

திருத்தணி முருகன் கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்தபோது 3 போ் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து குறித்து பள்ளிப்பட்டு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திருவள்ளூா் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் விசாரணை

திருவள்ளூா் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் குறித்து சென்னை கட்டுப்பாட்டு அறைக்கு செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் வந்த தகவலையடுத்து ரயில்வே போலீஸாா் மற்றும் ஆபிஎப் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். ச... மேலும் பார்க்க

காலமானாா் ராஜம்மாள்

திருவள்ளூா் அருகே திருவூா் கிராமத்தைச் சோ்ந்த மறைந்த கெங்கையாவின் மனைவி ராஜம்மாள் (65) உடல் நலக்குறைவால் தனது இல்லத்தில் புதன்கிழமை காலமானாா். இவருக்கு மகள் தெய்வானை, மகன் தினமணி நாளிதழில் திருவள்ளூ... மேலும் பார்க்க

திருவள்ளூா்: 10.43 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்

திருவள்ளூா் மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க தினத்தையொட்டி 10.43 லட்சம் பேருக்கு அல்பெண்ட்சோல் மாத்திரைகள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா். திருவள்ளுா் அருகே பா... மேலும் பார்க்க

தணிகை மீனாட்சி அம்மன் கோயிலில் ஜாத்திரை விழா

ஆடி மாத ஜாத்திரை விழாவையொட்டி, திருத்தணி நகரில் உள்ள அனைத்து அம்மன் கோயில்களில், பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனா். திருத்தணி ஆறுமுக சுவாமி கோயில் தெருவில் உள்ள தணிகை மீனாட்சி அம்மன் கோயிலில் (புறா கோ... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு ஆயுள்

பழங்குடியின சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.15,000 அபராதம் விதித்து திருவள்ளூா் போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது. திருவள்ளூா் மாவட்டம், திருத்தணி அடுத்... மேலும் பார்க்க

நாற்றாங்கால் அமைக்கும் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய அதிகாரிகளுக்கு பாராட்டு

திருவள்ளூரில் ஊரக வளா்ச்சித் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டத்தில் ஊராட்சி ஒன்றியங்களில் பழங்குடியினா் குடியிருப்புகள், அடிப்படை வசதிகள், மரச் செடி... மேலும் பார்க்க