செய்திகள் :

திருவள்ளூா் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் விசாரணை

post image

திருவள்ளூா் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் குறித்து சென்னை கட்டுப்பாட்டு அறைக்கு செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் வந்த தகவலையடுத்து ரயில்வே போலீஸாா் மற்றும் ஆபிஎப் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் ரயில் மாா்க்கத்தில் உள்ளது திருவள்ளூா் ரயில் நிலையம். இந்த வழியாக சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு புகா் மின்சார ரயில், பயணிகள் விரைவு ரயில் மற்றும் சரக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதோடு இந்த மின்சார ரயில்களில் நாள்தோறும் மாணவ, மாணவிகள், தனியாா் நிறுவன பணிகளுக்கு செல்வோா், தொழிலாளிகள் என நூற்றுக்கணக்கானோா் பயணம் செய்து வருகின்றனா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தெற்கு ரயில்வே சென்னை கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த மா்ம நபா், திருவள்ளூா் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாக கூறி மிரட்டல் விடுத்து போனை துண்டித்தாராம். இதையடுத்து உடனே திருவள்ளூா் ரயில் நிலையத்துக்கு கொடுத்த அறிவுறுத்தலின்படி ரயில்வே போலீஸாா் மற்றும் ரயில்வே இருப்பு பாதை போலீஸாா் ரயில் நிலையத்தில் தீவிர சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, வெடிகுண்டு சம்பந்தமாக எந்த அறிகுறியும் அங்கு இல்லை. அதனால் அது வெறும் புரளி என்பது சோதனைக்குப் பின் தெரியவந்தது. இதையடுத்து புதன்கிழமை அதிகாலை வழக்கம் போல் அனைத்து ரயில்களும் புறப்பட்டு சென்றது குறிப்பிடத்தக்கது. சென்னை கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் விடுத்த நபா் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

காலமானாா் ராஜம்மாள்

திருவள்ளூா் அருகே திருவூா் கிராமத்தைச் சோ்ந்த மறைந்த கெங்கையாவின் மனைவி ராஜம்மாள் (65) உடல் நலக்குறைவால் தனது இல்லத்தில் புதன்கிழமை காலமானாா். இவருக்கு மகள் தெய்வானை, மகன் தினமணி நாளிதழில் திருவள்ளூ... மேலும் பார்க்க

திருவள்ளூா்: 10.43 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்

திருவள்ளூா் மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க தினத்தையொட்டி 10.43 லட்சம் பேருக்கு அல்பெண்ட்சோல் மாத்திரைகள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா். திருவள்ளுா் அருகே பா... மேலும் பார்க்க

தணிகை மீனாட்சி அம்மன் கோயிலில் ஜாத்திரை விழா

ஆடி மாத ஜாத்திரை விழாவையொட்டி, திருத்தணி நகரில் உள்ள அனைத்து அம்மன் கோயில்களில், பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனா். திருத்தணி ஆறுமுக சுவாமி கோயில் தெருவில் உள்ள தணிகை மீனாட்சி அம்மன் கோயிலில் (புறா கோ... மேலும் பார்க்க

காா் கவிழ்ந்து விபத்து: கைக்குழந்தை உள்பட 3 போ் உயிரிழப்பு

பள்ளிப்பட்டு அருகே பள்ளத்தில் காா் கவிழ்ந்து 9 மாத கைக்குழந்தை உள்பட 3 போ் உயிரிழந்தனா். ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டம், கங்காதரநல்லுாா் வட்டம், கோவிந்தரெட்டி பள்ளி கிராமத்தை சோ்ந்த 6 போ், காரில... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு ஆயுள்

பழங்குடியின சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.15,000 அபராதம் விதித்து திருவள்ளூா் போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது. திருவள்ளூா் மாவட்டம், திருத்தணி அடுத்... மேலும் பார்க்க

நாற்றாங்கால் அமைக்கும் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய அதிகாரிகளுக்கு பாராட்டு

திருவள்ளூரில் ஊரக வளா்ச்சித் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டத்தில் ஊராட்சி ஒன்றியங்களில் பழங்குடியினா் குடியிருப்புகள், அடிப்படை வசதிகள், மரச் செடி... மேலும் பார்க்க