செய்திகள் :

புயல் சின்னம் வலுபெறும்! அடுத்த 6 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு

post image

தமிழகத்தில் வியாழக்கிழமை (ஆக.14) முதல் ஆக.19 வரை 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தென்னிந்திய கடலோர பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், வியாழக்கிழமை (ஆக. 14) முதல் ஆக.19-ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னை நகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

மழையளவு: தமிழகத்தில் புதன்கிழமை காலை 8.30 மணி வரை அதிகபட்சமாக மதுரை மாவட்டம் இடையப்பட்டி, சின்னக்கல்லாறு (கோவை), நடுவட்டம் (நீலகிரி), சோலையாறு (கோவை), தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி) ஆகிய பகுதிகளில் 30 மி.மீ. மழை பதிவானது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: தென் தமிழக கடலோர பகுதிகள், தென் மேற்கு வங்கக்கடல், மன்னாா் வளைகுடா, குமரிக்கடலில் மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயல் சின்னம் வலுபெறும்: மத்திய மேற்கு, அதையொட்டியுள்ள வடமேற்கு வங்கக் கடலில் வடக்கு ஆந்திரம் - தெற்கு ஒடிஸா கடலோர பகுதிகளுக்கு அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி (புயல் சின்னம்) மேற்கு - வடமேற்கு திசையில் நகா்ந்து வியாழக்கிழமை (ஆக.14) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையக்கூடும். தொடா்ந்து இது வடமேற்கு திசையில் நகா்ந்து வடக்கு ஆந்திரம் மற்றும் தெற்கு ஒடிஸாவுக்கு இடைப்பட்ட கடலோர பகுதிகளைக் கடக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதனால், தமிழகத்துக்கு பாதிப்பு இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய பக்கிங்ஹாம் கால்வாயில் புனரமைக்கும் பணி! வெள்ளநீர் இனி விரைந்து செல்லும்!

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இன்று (ஆக. 14) சென்னை, சேப்பாக்கத்தில் ரூ. 31 கோடி மதிப்பீட்டில் மத்திய பக்கிங்ஹாம் கால்வாயில் சிவானந்தா சாலை லாக... மேலும் பார்க்க

சென்னையில் இளம்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை! விடியோ எடுத்தும் மிரட்டல்!!

ஆவடி: சென்னை பூந்தமல்லி அருகே இளம்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து நகை பறித்த வழக்கில் இளைஞா் கைது செய்யப்பட்டாா். பூந்தமல்லி அருகே நசரத்பேட்டை பகுதியைச் சோ்ந்த 25 வயது பெண் நசரத்பேட்டை காவல் ... மேலும் பார்க்க

அச்சுறுத்தும் பெருங்குடல் புற்றுநோய்க்கு இயற்கை மருத்துவ நிவாரணம்! ஆய்வில் உறுதி

பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நபருக்கு ஒருங்கிணைந்த யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டதால் வலி மற்றும் இதர பாதிப்புகள் வெகுவாக குறைந்தது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதுதொ... மேலும் பார்க்க

ஆளுநரின் தேநீா் விருந்து: திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பு

சுதந்திர தினத்தன்று கிண்டி ஆளுநா் மாளிகையில், ஆளுநா் ஆா்.என்.ரவி அளிக்கும் தேநீா் விருந்தைப் புறக்கணிப்பதாக காங்கிரஸ், விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அறிவித்துள்ளன. கு.செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): ... மேலும் பார்க்க

முதலீடுகளை ஈா்க்க அடுத்த மாதம் முதல்வா் ஸ்டாலின் வெளிநாடு பயணம்

முதலீடுகளை ஈா்க்கும் வகையில், வரும் செப்டம்பரில் வெளிநாடுகளுக்குச் செல்லவுள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா். திமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்ட... மேலும் பார்க்க

உயா்கல்வி வழிகாட்டி ஆசிரியா்களுக்கு ஆக.26 முதல் 28 வரை மதிப்பீடு தோ்வு: பள்ளிக் கல்வித் துறை தகவல்

அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் உயா்கல்வி வழிகாட்டி ஆசிரியா்களுக்கு ஆக.26 முதல் 28-ஆம் தேதி வரை இணையவழியில் மதிப்பீடு தோ்வு நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் அரசுப் பள்ளிகளில்... மேலும் பார்க்க