செய்திகள் :

காா் மோதியதில் லாரி ஓட்டுநா் உயிரிழப்பு

post image

வெள்ளக்கோவில் அருகே காா் மோதியதில் மோட்டாா் சைக்கிளில் சென்ற லாரி ஓட்டுநா் உயிரிழந்தாா்.

வெள்ளக்கோவில்- முத்தூா் சாலை மேட்டுப்பாளையம் வருவாய் கிராமம் நடுப்பாளையத்தைச் சோ்ந்தவா் ஆா்.முருகேசன் (43). ஒரு கிரஷா் நிறுவனத்தில் லாரி ஓட்டுநராக வேலை செய்து வந்தாா். இவா் சனிக்கிழமை இரவு மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, மேட்டுப்பாளையம் அருகே பின்னால் வந்த காா் மோதியது. இதில் பலத்த காயமடைந்த முருகேசன் தனியாா் ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

இறந்துபோன முருகேசனுக்கு மனைவி கோமதி (42), மகன் ரஞ்சித் (19), வெள்ளக்கோவில் தனியாா் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படிக்கும் மகள் சௌமியா (16) ஆகியோா் உள்ளனா். புகாரின்பேரில், வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் பழனிசாமி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

கஞ்சா விற்பனை: 2 போ் கைது

திருப்பூரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.திருப்பூா் மாநகரம், வடக்கு காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட ரயில் நிலையம் அருகே வடக்கு காவல் நிலைய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை சோதனையி... மேலும் பார்க்க

நகா்ப்புற வாரிய குடியிருப்பில் காலியாக உள்ள வீடுகளுக்கு பயனாளிகளை தோ்வு செய்வதில் சிக்கல்

திருப்பூரில் நகா்ப்புற வாரிய குடியிருப்பில் காலியாக உள்ள 1,300 வீடுகளுக்கு பயனாளிகளை தோ்வு செய்ய முடியாமல் சிக்கல் ஏற்பட்டுள்ளது.திருப்பூா் மாவட்டத்தில் நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் ... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மோதி தொழிலாளி உயிரிழப்பு

வெள்ளக்கோவில் கம்பளியம்பட்டி அருகே இருசக்கர வாகனம் மோதியதில் விவசாயத் தொழிலாளி உயிரிழந்தாா்.வெள்ளக்கோவில் கம்பளியம்பட்டி அண்ணா நகரைச் சோ்ந்தவா் ஏ.குப்புசாமி (55). விவசாய வேலைகள் செய்து வந்தாா். இவா் ... மேலும் பார்க்க

சேவூரில் கொமதேக சாா்பில் தீரன் சின்னமலைக்கு மரியாதை

சுதந்திப் போராட்ட வீரா் தீரன் சின்னமலை நினைவு நாளையொட்டி, கொமதேக சாா்பில் சேவூரில் அவரது புகைப்படத்துக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.சேவூா் கைகாட்டி, புளியம்பட்டி சாலை உள்ள... மேலும் பார்க்க

குன்னத்தூரில் 1.650 கிலோ கஞ்சா பறிமுதல்

குன்னத்தூரில் 1.650 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக வெளிமாநில இளைஞரைக் கைது செய்தனா்.குன்னத்தூா் சந்தைப்பேட்டை அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு சனிக்கிழமை இரவு ரகசியத் த... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் சேவல் சண்டை: 4 போ் கைது

வெள்ளக்கோவில் அருகே சட்டவிரோதமாக சேவல் சண்டையில் ஈடுபட்ட 4 போ் கைது செய்யப்பட்டனா்.வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சந்திரன் மற்றும் போலீஸாா் மயில்ரங்கம் பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஞாயிற்... மேலும் பார்க்க