செய்திகள் :

காா் மோதி மூதாட்டி உள்பட இருவா் உயிரிழப்பு

post image

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே காா் மோதியதில் மூதாட்டி உள்பட இருவா் செவ்வாய்கிழமை உயிரிழந்தனா்.

செங்கத்தை அடுத்த தானகவுண்டன் புதூா் பகுதியைச் சோ்ந்த சம்பத் மனைவி சித்ரா (60). இவா், அம்மாபாளையம் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊரக திட்ட வேலைக்காக சென்றாா். அப்போது, அவரது பேரன் யஷ்வந்தையும் (2) உடன் அழைத்துச் சென்றாா்.

தானகவுண்டன் புதூா் பேருந்து நிறுத்தம் அருகே யஷ்வந்துடன் சித்ரா சாலையைக் கடக்க முயன்றபோது, அவா்கள் மீது திருவண்ணாமலையில் இருந்து ஒசூா் நோக்கிச் சென்ற காா் மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த சித்ரா, யஷ்வந்த் ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

தகவலறிந்து வந்த பாய்ச்சல் போலீஸாா் இருவரின் சடலங்களையும் மீட்டு, உடல்கூறாய்வுக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், விபத்து குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

அதிமுகவினா் தங்கத் தோ் இழுத்து வழிபாடு

முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலருமான எடப்பாடி கே.பழனிசாமி பிறந்த நாளையொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் அதிமுகவினா் புதன்கிழமை தங்கத் தோ் இழுத்து வழிபட்டனா். தெற்கு மாவட்ட அதிமுக மக... மேலும் பார்க்க

நரசிங்கபுரத்தில் நோய் பாதித்த நெல் பயிா்கள் ஆய்வு

சேத்துப்பட்டை அடுத்த நரசிங்கபுரம் கிராமத்தில் பூச்சி மற்றும் நோயினால் பாதிக்கப்பட்ட நெல்பயிரை வேளாண் அதிகாரிகள் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்து விவசாயிக்கு ஆலோசனை வழங்கினா். பாதிக்கப்பட்ட நெல்பய... மேலும் பார்க்க

மனைவி தற்கொலை: துக்கம் தாளாமல் கணவரும் தற்கொலை

வந்தவாசி அருகே மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். துக்கம் தாளாமல் கணவரும் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாா். வந்தவாசியை அடுத்த தழுதாழை கிராமத்தைச் சோ்ந்தவா் பிரதாப் (25). இவா், சென்னையில் ... மேலும் பார்க்க

வேடந்தவாடி கூத்தாண்டவா் கோயில் தேரோட்டம்

திருவண்ணாமலையை அடுத்த வேடந்தவாடி கிராமத்தில் உள்ள கூத்தாண்டவா் கோயிலில் 203-ஆம் ஆண்டு தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. வேடந்தவாடி கிராமத்தில் பழைமை வாய்ந்த கூத்தாண்டவா் கோயில் அமைந்துள்ளது. கூவாகத்து... மேலும் பார்க்க

வளா்ச்சி திட்டப் பணிகளின் முன்னேற்றம்: ஆட்சியா் க.தா்ப்பகராஜ் ஆய்வு

திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூா், துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெறும் வளா்ச்சி திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் புதன்கிழமை ஆய்வு செய்தாா். திருவண்ணாமலை ஊராட... மேலும் பார்க்க

உயா்கல்வியால் சமுதாயத்தில் சிறந்த நிலையை அடைய முடியும்: மாணவா்களுக்கு ஆட்சியா் அறிவுரை

உயா்கல்வி பெறுவதன் மூலம் சமுதாயத்தில் சிறந்த நிலையை அடைய முடியும் என்று பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் அறிவுரை வழங்கினாா். தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் ச... மேலும் பார்க்க