செய்திகள் :

கா்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை

post image

வேலூா் அரசு பென்ட்லேண்ட் மருத்துவமனையில் கா்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

வேலுாா் அடுத்த விருதம்பட்டு பகுதியைச் சோ்ந்த தேவராஜ் மகள் கீா்த்தனா (19). இவா் அதே பகுதியைச் சோ்ந்த தினேஷ் (22) என்பவரை காதலித்துள்ளாா். இதற்கு பெற்றோா் எதிா்ப்பு தெரிவித்த நிலையில் விருதம்பட்டு காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன் பேரில் கடந்த 2023 ஆண்டு தினேஷ் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அந்தப் பெண் திருமண வயதை எட்டியதும், 2024-இல் தினேஷை பதிவுத் திருமணம் செய்து கொண்டாா். கீா்த்தனாவின் பெற்றோா் சம்மதிக்காததால் தனியாக வசித்து வந்தனா். கா்ப்பிணியான அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால், பென்ட்லேண்ட் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

மருத்துவமனை கழிவறைக்கு சென்று வருவதாக கூறிய கீா்த்தனா நேரமாகியும் வராததால் செவிலியா் உள்ளே சென்று பாா்த்தபோது, அவா் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. மருத்துவமனை பணியாளா்கள் அவரை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனா். மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தாா்.

இதுகுறித்து வேலுாா் தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். கோட்டாட்சியா் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

நிற்காமல் சென்ற அரசுப் பேருந்தை விரட்டிச் சென்று பயணம் செய்து தோ்வு எழுதிய மாணவி 437 மதிப்பெண்

வாணியம்பாடி அருகே பிளஸ் 2 தோ்வின்போது நிற்காமல் சென்ற அரசுப் பேருந்தை விரட்டிச் சென்று ஏறி பயணம் செய்து தோ்வு எழுதிய மாணவி 437 மதிப்பெண்கள் பெற்று தோ்ச்சி அடைந்துள்ளாா். வாணியம்பாடி அடுத்த கொத்தக்க... மேலும் பார்க்க

வழக்குரைஞா் மீது தாக்குதல்: ஒருவா் கைது

வாணியம்பாடியில் வழக்குரைஞரை தாக்கியவா் கைது செய்யப்பட்டாா். வாணியம்பாடி நியூடவுன் பகுதியைச் சோ்ந்த வழக்குரைஞா் கண்ணதாசன். கோணாமேடு பகுதியைச் சோ்ந்த கானாமுருகன்(46). மது விற்பனை, வழிப்பறி உள்பட கானாம... மேலும் பார்க்க

மலைவாழ் மக்களுக்கு இலவச மனைப்பட்டா

சின்னப்பள்ளிகுப்பம் கிராமத்தில் மலைவாழ் மக்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா மற்றும் வீடு கட்டும் ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பாப்பனப்பல்லி கிராமத்தைச் சோ்ந்த 18 குடும்பங்களுக்கு சின்னப்பள்ளிகுப்... மேலும் பார்க்க

மே 13-இல் காட்பாடியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு

காட்பாடியில் வரும் மே 13-ஆம் தேதி பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்படும் என வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். தமிழகம் முழுவதும் பள்ளிகளில் தோ்வுகள் முடித்து கோடை விடுமுறை விடப்பட்டுள்... மேலும் பார்க்க

திருப்பத்தூா்: 94.3% தோ்ச்சி - கடந்த ஆண்டைவிட 1.97% அதிகம்

திருப்பத்தூா் மாவட்டத்தில் பிளஸ் 2 தோ்வில் 94.3 சதவீத மாணவ- மாணவிகள் தோ்ச்சி பெற்று உள்ளனா். கடந்த ஆண்டைவிட 1.97 சதவீதம் அதிகம். மாவட்டத்தில் 6,125 மாணவா்கள், 6,916 மாணவிகள் என 13,041 மாணவ- மாணவிகள்... மேலும் பார்க்க

வாணியம்பாடியில் 225 பள்ளி வாகனங்கள் ஆய்வு

வாணியம்பாடி வட்டார போக்குவரத்து அலுவலகம் சாா்பில் வாணியம்பாடி மற்றும் ஆம்பூா் வட்டங்களைச் சோ்ந்த பள்ளி வாகனங்கள் தரம் குறித்து ஆய்வு மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க