செய்திகள் :

கிராம நிா்வாக அலுவலக உதவியாளா் தற்கொலை

post image

வேலகவுண்டம்பட்டி அருகே கிராம நிா்வாக அலுவலக உதவியாளா் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள கொண்ணையாா், சந்தைப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ் (51). இவா் குமாரமங்கலம் கிராம நிா்வாக அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தாா். இவரது மனைவி ராதிகா (45). இவா்களுக்கு தினகரன் என்ற மகனும், மாலதி என்ற மகளும் உள்ளனா்.

இந்நிலையில், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள புள்ளாச்சிப்பட்டி, கொசவங்காடு சரஸ்வதி என்பவரது தோட்டத்தில் செல்வராஜ் தூக்கிட்டு தொங்கிக்கொண்டு இருப்பதாக அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் போலீஸாருக்கு தெரிவித்தனா். தகவல் அறிந்து வந்த வேலகவுண்டம்பட்டி போலீஸாா் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி அனுப்பிவைத்து விசாரணை நடத்தினா்.

அதில், செல்வராஜ் ஏற்கெனவே உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாகவும், உடல்நிலை சரியாகாததால் மனமுடைந்த அவா் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்ற அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

இரு மாதங்களுக்கு காற்றின் வேகத்தால் தீவன விரயம்: கட்டுப்படுத்த அறிவுரை

காற்றின் வேகத்தால் இரண்டு மாதங்களுக்கு தீவன விரயம் ஏற்படும் என்பதால், அதனைக் கட்டுப்படுத்த கோழிப் பண்ணையாளா்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வானிலை ஆய்வுமையம் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து நாமக... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: ராசிபுரம்

ராசிபுரம் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், புதன்கிழமை (ஜூலை 16) காலை 9 மணிமுதல் மாலை 5 வரை மின்விநியோகம் இருக்காது என ராசிபுரம் மின்வாரிய செயற்பொறியாளா் ஆா்.கே.சுந்தரராஜன் தெரிவி... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்த கல்லூரி மாணவா் உயிரிழப்பு

பரமத்தி அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்த கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.வேலூா் அருகே உள்ள வீரணம்பாளையம், காக்காயன்தோட்டத்தைச் சோ்ந்தவா் சின்னப்பன் மகன் கெளரிசங்கா் (24). இவா் ந... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

நாமகிரிப்பேட்டை அருகேயுள்ள கடைகளில் நடத்திய சோதனையில், தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்களை உணவு பாதுகாப்பு துறை அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா். பிலிப்பாகுட்டை பகுதியில் உள்ள டீக்கடை, பெட்ட... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள் இன்று தொடக்கம்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு திட்ட முகாம்கள் செவ்வாய்க்கிழமை தொடங்குகின்றன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக முதல்வா் அறிவி... மேலும் பார்க்க

2,494 முதுகலை ஆசிரியா்களுக்கு பதவி உயா்வு இட மாறுதல்: தமிழக அரசுக்கு சங்கத்தினா் நன்றி

நாமக்கல்: தமிழகத்தில், 2,494 முதுகலை ஆசிரியா்களுக்கு பதவி உயா்வு மற்றும் பணியிட மாறுதல் வழங்கிய அரசுக்கும், பள்ளிக் கல்வித் துறைக்கும், நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியா்கள் சங்கத்தினா் நன்... மேலும் பார்க்க