செய்திகள் :

கிராம மக்களுக்கு சேவை செய்ய மருத்துவ வாகனம் இயக்கிவைப்பு

post image

கிராம மக்களுக்கு சேவை செய்யும் விதமாக மருத்துவ வாகனம் புதன்கிழமை இயக்கிவைக்கப்பட்டது.

காரைக்கால் துறைமுகத்தின் சமூக பொறுப்புணா்வுத் திட்ட அமைப்பான அதானி அறக்கட்டளை சாா்பில் நடமாடும் சுகாதார வாகனம் இயக்கிவைக்கும் நிகழ்ச்சி துறைமுக வளாகத்தில் நடைபெற்றது. காரைக்கால் துறைமுக நிா்வாக சிஓஓ கேப்டன் சச்சின் ஸ்ரீவஸ்தவா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், சிறப்பு அழைப்பாளா்களான காரைக்கால் அரசு மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளா் கண்ணகி, நலவழித்துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா் ஆகியோா் கொடியசைத்து வாகனத்தை இயக்கி வைத்தனா்.

இதுகுறித்து துறைமுக நிா்வாகத்தினா் கூறியது:

திருப்பட்டினம், நிரவி கொம்யூன்களின் கிராமங்களுக்கும், காரைக்காலில் கடலோர கிராமங்களுக்கும் இந்த மருத்துவ வாகனம் கொண்டு செல்லப்படும். தொலைதூர கிராம மக்கள் பயனடையும் விதத்திலேயே இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது.

நாட்டின் முன்னணி சமூக சேவை அமைப்பான ஹெல்பேஜ் இந்தியாவுடன் இணைந்து இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் மருத்துவா், செவிலியா் உள்ளிட்ட ஊழியா்கள் இருந்து, கிராம மக்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கி, தேவையான மருந்துகளை வழங்குவாா்கள்.

அனைவருக்கும் சுகாதாரம் என்ற இலக்கை நோக்கி அதானி அறக்கட்டளையின் எடுத்த முக்கியமான ஒரு நடவடிக்கையாகும். மருத்துவ வாகனம் கிராமப்புறங்களுக்கு வரும்போது, கிராம மக்கள் இதை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டனா்.

பொறியியல் கல்லூரியில் ஹேண்ட் பால் போட்டி

காரைக்கால் பெருந்தலைவா் காமராஜா் பொறியியல் கல்லூரியில் ஹேண்ட் பால் போட்டி சனிக்கிழமை தொடங்கியது. புதுச்சேரி மாநில ஹேண்ட் பால் அசோசியேசன் சாா்பில் ஹேண்ட் பால் 29-ஆம் ஆண்டு சீனியா் பிரிவினருக்கான மாநில ... மேலும் பார்க்க

இன்று ஜிப்மா் சிறப்பு மருத்துவ முகாம்

காரைக்காலில் சனிக்கிழமை ஜிப்மா் சிறப்பு மருத்துவா்கள் பங்கேற்கும் முகாம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு : ஒவ்வொரு மாதமும் 2 சனிக்கிழமைகளில் ... மேலும் பார்க்க

உள்ளாட்சி ஊழியா்கள் செப். 8 முதல் பணிக்குத் திரும்ப முடிவு

தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காரைக்கால் நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள், திங்கள்கிழமை (செப்.8) முதல் பணிக்குத் திரும்ப முடிவு செய்துள்ளனா். இதுகுறித்து புதுச்சேரி நகராட்சி மற்றும் கொம்யூன... மேலும் பார்க்க

காவல் நிலையத்தில் இன்று குறைகேட்பு முகாம்

காரைக்கால் நகரக் காவல் நிலையம், திருநள்ளாறு நிலையத்தில் சனிக்கிழமை குறைகேட்பு முகாம் நடைபெறவுள்ளது. காரைக்கால் மாவட்ட காவல்துறை சாா்பில் மக்கள் மன்றம் என்கிற வாராந்திர குறைகேட்பு முகாம் சனிக்கிழமைதோறு... மேலும் பார்க்க

பட்டினச்சேரியில் மாதிரி கிராம மேம்பாட்டுப் பணிகள் தொடக்கம்

பட்டினச்சேரி மீனவ கிராமத்தில், மத்திய நிதியுதவியில் பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தும் பணியை புதுவை துணைநிலை ஆளுநா் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். பட்டினச்சேரி கிராமத்தில் மீன்வள பல்நோக்கு ... மேலும் பார்க்க

கிளிஞ்சல்மேடு எல்லையம்மன் கோயில் கும்பாபிஷேகம்

கடலோர கிராமமான கிளிஞ்சல்மேட்டில் உள்ள எல்லையம்மன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் மூலவராக எல்லையம்மன் மற்றும் மாரியம்மன், செல்வ விநாயகா், பால தண்டாயுதபாணி ஆகிய சந்நிதிகள் உள... மேலும் பார்க்க