செய்திகள் :

கிரீஸ்: 2 மீன்பிடி படகுகளில் வந்த 600 அகதிகள் மீட்பு!

post image

கிரீஸ் நாட்டின் தென்கடல் பகுதியில் 2 மீன்பிடி படகுகளில் வந்த சுமார் 600-க்கும் மேற்பட்ட அகதிகளை அந்நாட்டு கடலோரக் காவல் படையினர் மீட்டுள்ளனர்.

கிரீஸின் தெற்குப் பகுதியிலுள்ள கவ்டோஸ் தீவின் கடல்பகுதியில் நேற்று (ஜூன் 19) இரவு மீன்பிடி படகில் சுமார் 352 அகதிகள் வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அங்கு சென்ற ஐரோப்பிய எல்லைப் பாதுகாப்புப் படையான ஃப்ரொண்டெக்ஸ் அமைப்பினர், அந்தப் படகிலிருந்த பயணிகள் அனைவரையும் தங்களது கப்பல்கள் மூலம் பத்திரமாக மீட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, கிரீட் தீவின் தென் கடல்பகுதியில் மற்றொரு மீன்பிடி படகு கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், அந்தப் படகிலிருந்த 278 பேரும் அப்பகுதியில் சென்ற போர்ச்சுகல் நாட்டின் சரக்கு கப்பல் மீட்டு கரைக்கு அழைந்து வந்துள்ளது.

இந்நிலையில், இந்த 2 மீன்பிடி படகில் பயணித்த அகதிகள் அனைவரும் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட தகவல்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

இதேபோல், அப்பகுதியில் அகதிகளுடன் வந்த மேலும் 2 படகுகள் கண்டுபிடிக்கப்பட்டது. அதில், ஒரு படகில் 73 பேரும், மற்றொரு படகில் 1 பெண் 3 குழந்தைகள் உள்பட 26 பேரும் மீட்கப்பட்டதாக கிரீஸ் கடலோரக் காவல் படை தெரிவித்துள்ளது.

இந்த 2 சிறிய படகுகளும், கடந்த ஜூன் 18 ஆம் தேதி மாலை லிபியாவிலிருந்து புறப்பட்டதாகவும், கிரீஸ் நாட்டுக்குச் செல்வதற்காக அவர்களது கடத்தல்காரர்களுக்கு தலா ரூ.4 லட்சம் வரையில் கொடுத்தாகவும் அதில் பயணித்தவர்கள் கூறியுள்ளனர்.

மேலும், சந்தேகத்தின்பேரில் அந்தப் படகுகளை இயக்கி வந்த சூடான் நாட்டைச் சேர்ந்த 16 வயது சிறுவன் மற்றும் 19 வயதுடைய இளைஞர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முன்னதாக, வறுமை மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா நாடுகளைச் சேர்ந்த ஏராளமான மக்கள் பிழைப்புத் தேடி ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாகப் பயணம் செய்கின்றனர்.

இதில், பெரும்பாலான மக்கள் கடத்தல்காரர்களின் உதவியோடு கப்பல்கள் மூலம் பயணம் செய்வதால், வழியில் ஏற்படும் ஆபத்துகளில் அவ்வப்போது சிக்கி பலர் பலியாவது தொடர் கதையாகி வருகின்றது.

இதையும் படிக்க:நைஜர்: துப்பாக்கிச் சூட்டில் 34 வீரர்கள் கொலை! ராணுவம் தேடுதல் வேட்டை!

கருணைக் கொலை: பிரிட்டன் நாடாளுமன்றம் ஒப்புதல்

குணப்படுத்த முடியாத கொடூர நோயால் பாதிக்கப்பட்டவா்கள் தங்களின் வாழ்வை முடித்துக் கொள்வதற்கு அனுமதி அளிப்பதற்கான சட்ட மசோதா பிரிட்டன் நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்ற கீழவையி... மேலும் பார்க்க

இரண்டாவது வாரத்தில் இஸ்ரேல் - ஈரான் போா்

இஸ்ரேல் மீது ஈரான் வெள்ளிக்கிழமையும் சரமாரி ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதைத் தொடா்ந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் இரண்டாவது வாரத்தில் அடியெடுத்துவைத்துள்ளது. இது குறித்து இஸ்ரேல் அவசரகால மீட்புக... மேலும் பார்க்க

அதானி ஒப்பந்தம் ரத்தானதால் மிகவும் ஏமாற்றமடைந்தேன்: கென்யா முன்னாள் பிரதமர்!

கென்யாவின் பன்னாட்டு விமான நிலையத்தை விரிவுப்படுத்தி மேம்படுத்துவதற்கான அதானியின் ஒப்பந்தம் ரத்தானபோது மிகவும் ஏமாற்றமடைந்ததாக அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ராயிலா ஒடிங்கா தெரிவித்துள்ளார். கென்யா தலைந... மேலும் பார்க்க

இந்தியாவுக்காக வான்வழியைத் திறந்த ஈரான்!

ஈரான் நாட்டில் சிக்கியுள்ள 1000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வெளியேறி தாயகம் செல்ல, அந்நாடு பிரத்யேகமாக தனது வான்வழியைத் திறந்துள்ளது. இஸ்ரேல் - ஈரான் இடையில் போர் தொடங்கியுள்ள நிலையில், இருநாடுகளும் த... மேலும் பார்க்க

ஈரானுக்காக ஒருநாளுக்கு ரூ. 8,600 கோடி செலவிடும் இஸ்ரேல்!

ஈரான் மீதான போரில் ஒரு நாளுக்கு ஆயிரக்கணக்கான கோடிகள் செலவிடப்படுவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கிடையேயான போரில் அமெரிக்காவும் களமிறங்கும் சூழல் ஏற்படும் அளவுக்கு போர் பெரிதாகி ... மேலும் பார்க்க

கனடாவில் இந்திய மாணவி மர்ம மரணம்

கனடாவில் இந்திய மாணவி மர்மமான முறையில் பலியாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தன்யா தியாகி என அடையாளம் காணப்பட்ட அந்த மாணவி உயர் படிப்புக்காக கனடாவுக்குச் சென்றிருந்தார். இவர் கடந்த ஜூன் 17ஆம் த... மேலும் பார்க்க