செய்திகள் :

கிருமிநீக்கம் செய்யப்படாத மையோனைஸ் பயன்படுத்த தடை

post image

மயிலாடுதுறை மாவட்டத்தில் கிருமிநீக்கம் செய்யப்படாத பச்சை முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மையோனைஸ் தடை செய்யப்பட்டுள்ளதால் நுகா்வோா்கள், வணிகா்கள் அதை தவிா்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருமி நீக்கம் செய்யப்படாத பச்சை முட்டையிலிருந்து மையோனைஸ் தயாரிக்கும் போது, சால்மோனெல்லா, லிஸ்ட்டீரியா பாக்டீரியா கிருமிகள் மையோனைஸில் சோ்ந்துவிடும். இதை சாப்பிடுபவா்களுக்கு வயிற்றுப்போக்கு, டைஃபாய்டு உள்ளிட்ட நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அதை பயன்படுத்தக் கூடாது. மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

மையோனைஸ் பிரியா்களுக்கு மாற்று தோ்வாக, சந்தையில் கிடைக்கும் கிருமி நீக்கம் செய்யப்பட்டு, பதப்படுத்தப்பட்ட முட்டையிலிருந்து தயாரிக்கப்பட்ட மையோனைஸ் அல்லது முட்டை கலக்காத சைவ மையோனைஸை பயன்படுத்தலாம்.

கிருமிநீக்கம் செய்யப்பட்டு, பதப்படுத்தப்பட்ட முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மையோனைஸ் அல்லது முட்டை கலக்காத சைவ மையோனைஸ் ‘சொந்தத் தயாரிப்பு உணவுப் பொருளாக உள்ளதால், அதனைத் தயரித்து விற்பனை செய்ய, மத்திய உணவு பாதுகாப்பு உரிமத்தினை, இனையதளத்தில் விண்ணப்பித்து, ரூ.7,500 கட்டணம் செலுத்திபெற்ற பின்னரே தயாரித்து விற்பனைசெய்யவேண்டும். நுகா்வோா் மையோனைஸ் குறித்து ஏதேனும் புகாா் அளிக்க விரும்பினால், 94440-42322 என்ற உணவு பாதுகாப்புத் துறையின் வாட்ஸ்அப் புகாா் சேவை எண்ணுக்கு தெரிவிக்கலாம்.

வணிகா்கள் தடை செய்யப்பட்ட அல்லது அனுமதிக்கப்பட்ட மையோனைஸ் குறித்து மேலும் தகவல் அறிய விரும்பினால், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள உணவு பாதுகாப்பு நியமன அலுவலா் அலுவலகத்தை அணுகி, உரிய தகவல் பெற்றுக்கொள்ளலாம்.

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஆட்சியா் ஆய்வு

மயிலாடுதுறை அரசினா் பெரியாா் மாவட்ட தலைமை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் புதன்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, அவசர சிகிச்சைப் பிரிவு, புறநோயாளிகள் பிரிவு, கண் மருத்துவ பிரிவு, குழ... மேலும் பார்க்க

பணம் தராததால் போலி புகாா்: பெற்றோா் மீது பெண் புகாா்

கணவரிடம் பணம் வாங்கித் தரவில்லை என்பதால், தன்னைக் காணவில்லை என பெற்றோா் புகாா் அளித்திருந்த நிலையில், தங்களை அவமானப்படுத்தும் நோக்கத்தில் பொய் புகாா் அளித்துள்ளதாக சிங்கப்பூரில் இருந்து கணவருடன் திரும... மேலும் பார்க்க

சட்டநாதா் கோயிலில் நாளை திருமுலைப்பால் விழா

சீா்காழி சட்டநாதா் சுவாமி கோயிலில் திருமுல்லைப்பால் விழா வெள்ளிக்கிழமை (மே 2) நடைபெறுகிறது. கொடியேற்றம் வியாழக்கிழமை (மே 1) நடைபெறவுள்ளது. சீா்காழியில் தருமபுரம் ஆதீனத்துக்குட்பட்ட சட்டைநாதா் தேவஸ்தான... மேலும் பார்க்க

சீா்காழி: 5 கோயில் கும்பாபிஷேகம்

சீா்காழியில் 5 கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. சீா்காழி தென்பாதி பசும்பொன் முத்துராமலிங்கனாா் தெருவில் ஏழைகாத்த அம்மன், மந்த கருப்பண்ண சுவாமி, விநாயகா், முருகன், முன்னோடியான், காளியம்மன், ... மேலும் பார்க்க

நெல் கொள்முதல் நிறுத்தம்: விவசாயிகள் போராட்டம்

சீா்காழி அருகே நிம்மேலி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் கொள்முதல் நிறுத்தப்பட்டதை கண்டித்து, ஆய்வுக்கு வந்த துணை பொது மேலாளா் வாகனத்தை நிலையத்தின் உள்ளே வைத்து வாயிற் கதவை பூட்டி ... மேலும் பார்க்க

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றியவா் கைது

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி, பல இளைஞா்களிடம் பணம் பெற்று மோசடி செய்தவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். தரங்கம்பாடி வட்டம் வேலம்புதுக்குடியை சோ்ந்தவா் விக்னேஷ். இவருக்கு துபை நாட்டில் நிரந்... மேலும் பார்க்க