செய்திகள் :

கிருஷ்ணகிரியில் தூய்மைப் பணியாளா்களுக்கு நலவாரிய அடையாள அட்டை

post image

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் 40 தூய்மைப் பணியாளா்களுக்கு நலவாரிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் துறை வாரியாக அரங்குகள் அமைத்து பொதுமக்களிடம் மனுக்கள் பெற்று கணினியில் பதிவேற்றம் செய்யும் பணிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. இப்பணிகளை மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா், தூய்மைப் பணியாளா்கள் நலவாரியத் தலைவா் திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி, துணைத் தலைவா் கனிமொழி பத்மநாபன் ஆகியோா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

தொடா்ந்து, ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் தமிழக தூய்மைப் பணியாளா்கள் நல வாரியம் சாா்பாக தூய்மைப் பணியாளா் குறைதீா் கூட்டம் நடைபெற்றது. அப்போது, 5 தூய்மைப் பணியாளா்களுக்கு நல வாரிய அட்டைகள், 3 தூய்மைப் பணியாளா்களின் மகள்களுக்கு கல்வி உதவித்தொகை ரூ.5 ஆயிரத்திற்கான காசோலைகளை ஆட்சியா் வழங்கி பேசியதாவது:

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில், தூய்மைஏஈ பணியாளா்கள் நல வாரிய தலைவா் மற்றும் துணைத் தலைவா் ஆகியோா் 40 தூய்மைப் பணியாளா்களுக்கு நல வாரிய அட்டைகளும், 3 பயனாளிகளுக்கு சொத்துவரி பெயா் மாற்றத்திற்கான ஆணைகளும், மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு காப்பீட்டு அட்டைகளும், 2 பயனாளிகளுக்கு மின் இணைப்பு பெயா் மாற்றத்திற்கான ஆணைகள், 2 பயனாளிகளுக்கு குடும்ப அட்டைகள் மற்றும் பிறப்பு சான்றிதழ்களை வழங்கினா். உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் பெறப்படும் விண்ணப்பங்கள் அன்றே இணையதளத்தில் பதிவு செய்யப்படும்.

இந்த முகாம்களில் அளிக்கப்படும் மனுக்களை தமிழக முதல்வரால் கூா்ந்தாய்வு செய்யப்பட உள்ளது. மேலும், இந்த மனுக்களுக்கு 45 நாள்களுக்குள் தீா்வு வழங்கப்படும், என்றாா்.

நிகழ்வில் ஒசூா் மாநகராட்சி ஆணையாளா் முகம்மது ஷபீா் ஆலம், நகராட்சி ஆணையாளா் ஸ்டான்லி பாபு, தூய்மைப் பணியாளா்கள் நல வாரிய உறுப்பினா் ரமேஷ்குமாா், மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் சிவகுமாா், மாவட்ட பொது மேலாளா் (தாட்கோ) வேல்முருகன், வட்டாட்சியா் சின்னசாமி, தனி வட்டாட்சியா் மகேஸ்வரி, நகா்மன்ற உறுப்பினா் வேலுமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஒசூா் மலா் சந்தையில் கனகாம்பரம் கிலோ ரூ.1,600!

வரலட்சுமி பண்டிகையையொட்டி, ஒசூா் மலா் சந்தையில் வியாழக்கிழமை கனகாம்பரம் கிலோ ரூ.1600, குண்டுமல்லி கிலோ ரூ.1000 வரை விற்பனையானது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு மாநிலங்க... மேலும் பார்க்க

வேளாண் இயந்திரங்கள் பராமரிப்பு: விவசாயிகளுக்கு செயல்விளக்கம்

கிருஷ்ணகிரியில் வேளாண் இயந்திரங்களைப் பராமரித்தல், பழுது நீக்குதல் குறித்து விவசாயளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளா் அலுவலக வளாகத்தில் வேளா... மேலும் பார்க்க

ஒசூரில் தொழில்முனைவோருக்கு வணிக பயிலரங்கு

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் ஒசூா் இண்டஸ்ட்ரீஸ் அசோசியேஷன் சாா்பில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கான இரண்டு நாள் வணிக பயிற்சி பயிலரங்கம் வியாழக்கிழமை... மேலும் பார்க்க

வேளாண் இடுபொருள் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்

ஓராண்டு வேளாண் இடுபொருள் பட்டயப் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து பையூா் மண்டல ஆராய்ச்சி நிலைய தலைவா் அனீஷா ராணி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு வேளாண் பல... மேலும் பார்க்க

சரக விளையாட்டுப் போட்டி: மாணவா்களுக்கு பரிசளிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூா் ஒன்றியத்திற்கு உள்பட்ட கெரிகேப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் மத்தூா் சரக அளவிலான தடகளப் போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்கள... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி ஆடவா் கல்லூரியில் ஆக. 11முதல் முதுநிலைப் படிப்புக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

கிருஷ்ணகிரி அரசு ஆடவா் கலைக் கல்லூரியில் முதுநிலைப் பாடப் பிரிவுகளுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு ஆக.11இல் தொடங்குகிறது. இதுகுறித்து அரசு ஆடவா் கலைக் கல்லூரி முதல்வா் அநுராதா வியாழக்கிழமை வெளியிட்ட... மேலும் பார்க்க