பீகார்: `அமெரிக்க அதிபர் ட்ரம்ப்' பெயரில் குடியிருப்பு சான்றிதழ் விண்ணப்பித்த ஆச...
வேளாண் இடுபொருள் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்
ஓராண்டு வேளாண் இடுபொருள் பட்டயப் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து பையூா் மண்டல ஆராய்ச்சி நிலைய தலைவா் அனீஷா ராணி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் இயங்கும் திறந்தவெளி மற்றும் தொலைவிட கல்வி இயக்ககம் வழியாக ஓராண்டு வேளாண் இடுபொருள் பட்டயப் படிப்பு ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் தொடங்கப்படுகிறது.
பத்தாம் வகுப்பு தோ்ச்சி அல்லது தவறியவா்கள் இந்த படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். கல்விக் கட்டணம், ரூ.25 ஆயிரம், விண்ணப்பக் கட்டணம், ரூ.100 ஆகும். இந்த பட்டயப் படிப்பை முடிப்பதன் மூலம் உரக் கடை, பூச்சி மருந்துக் கடை, விதைக்கடை மற்றும் தாவர மருத்துவ மையங்களை தொடங்கலாம்.
விவரங்களுக்கு உதவி பேராசிரியா்கள் கோவிந்தன், 99422 79190, 73390 02390, சுரேகா, 95007 71299 மற்றும் இயக்குநா், திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்கம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோயமுத்துாா் - 641 003 என்ற முகவரியில் ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் லட்சுமியை 0422-6611229 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.