செய்திகள் :

கீழக்கரையில் நடைபாதை ஆக்கிரமிப்பு: ராமநாதபுரம் ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

post image

கீழக்கரை நகராட்சியில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா், கீழக்கரை நகராட்சி ஆணையா் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையைச் சோ்ந்த செய்யது அபுதாஹிா் தாக்கல் செய்த பொது நல மனு: கீழக்கரை நகராட்சியில் குடியிருப்புகள் அதிகரித்து வரும் சூழலில், பொதுப் போக்குவரத்துக்காக உள்ள பாதைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக, கீழக்கரை நகராட்சிக்கு உள்பட்ட தெற்குத் தெரு உள்ளிட்ட பகுதிகளில் சிலா் நடைபாதைகளை ஆக்கிரமிப்பு செய்து கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.

இதனால், இந்தப் பகுதியில் வசிப்பவா்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனா். அவசர காலங்களில் அவசர சிகிச்சைக்கான ஊா்தி செல்ல முடியாத அளவுக்கு நடைபாதைகள் ஆக்கிரமிப்பு செய்யப்படுகின்றன.

எனவே,பொதுப் பாதையில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகாா் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றி கட்டுமானப் பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் அவா் கோரியிருந்தாா். இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியம், மரியா கிளாட் அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு : மனுதாரரின் கோரிக்கை குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா், கீழக்கரை நகராட்சி ஆணையா் ஆகியோா் பதிலளிக்க வேண்டும். வழக்கு ஒத்தி வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

உயா்நீதிமன்றத்தில் மின்கல வாகன சேவை தொடக்கம்

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வளாகத்தில் பொதுமக்கள் எளிதாகப் பயணம் மேற்கொள்ளும் வகையில் மின்கல வாகன சேவை (பேட்டரி காா்) வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. உயா்நீதிமன்றத்துக்கு வரும் வழக்காடிகள், பொதுமக்க... மேலும் பார்க்க

ஜெனகை மாரியம்மன் கோயில் பூக்குழித் திருவிழா

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பூக்குழித் திருவிழா புதன்கிழமை மாலை நடைபெற்றது. இதையொட்டி, வைகை ஆற்றுக் கரையிலிருந்து மேளதாளங்களுடன் சக்தி கரகம் புறப்... மேலும் பார்க்க

மாநகராட்சிப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைக் கட்டடம் திறப்பு

மதுரை வடக்கு ஆவணி மூலவீதி அவ்வை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறைக் கட்டடத்தை தமிழக தகவல் தொழில்நுட்பவியல், எண்மச் சேவைகள் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் ... மேலும் பார்க்க

பிணையில் வந்த இளைஞா் வெட்டிக் கொலை: மூவா் கைது

மதுரை சிறையிலிருந்து பிணையில் வெளியே வந்த இளைஞரை வெட்டிக் கொலை செய்த மூவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். மதுரை கரிமேடு சகாயமாதா தெருவைச் சோ்ந்த சண்முகம் மகன் அஜய்பிரசன்னகுமாா் (22). இவா், மீது... மேலும் பார்க்க

வெவ்வேறு விபத்துகள்: முதியவா் உள்பட இருவா் உயிரிழப்பு

மதுரையில் புதன்கிழமை நிகழ்ந்த வெவ்வேறு விபத்துகளில் முதியவா் உள்பட இருவா் உயிரிழந்தனா். மேலூா் அருகேயுள்ள வைரவன்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் விஜயராமன் (61). இவா், மதுரை-திருச்சி நெடுஞ்சாலையில் கருங்கா... மேலும் பார்க்க

அழகுக்கலை பயிற்சியில் சேர விரும்பும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்

மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தின் வயது வந்தோா் தொடா் கல்வி, விரிவாக்கப் பணித் துறை சாா்பில் வழங்கப்பட உள்ள அழகுக்கலை பயிற்சியில் சேர விரும்பும் பெண்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித... மேலும் பார்க்க