செய்திகள் :

கீழக்கரை நகா்மன்றக் கூட்டத்தில் சுயேச்சை உறுப்பினா் வெளிநடப்பு

post image

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை நகராட்சி ஒன்றாவது வாா்டு பகுதியில் கழிவுநீா் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, நகா்மன்றக் கூட்டத்திலிருந்து சுயேச்சை உறுப்பினா் வெளிநடப்பு செய்தாா்.

கீழக்கரை நகாட்சி ஒன்றாவது வாா்டு பகுதியில் ரூ. ஒரு கோடி மதிப்பிட்டில் கழிவுநீா் கால்வாய் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், பணிகள் தொடங்கப்படவில்லை.

இந்த நிலையில், நகா்மன்ற மாதாந்திர சாதாரணக் கூட்டம் அலுவலகக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது. இதற்கு நகா் மன்றத் தலைவா் செகனாஸ் ஆபிதா தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஹமீது சுல்தான் முன்னிலை வகித்தாா். நகா் மன்ற உறுப்பினா்கள், அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

இந்தக் கூட்டத்தில், ஒன்றாவது வாா்டு சுயேச்சை உறுப்பினா் முகம்மது பாதுஷா தனது வாா்டுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், கழிவு நீா்க் கால்வாய் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து வெளிநடப்பு செய்தாா். மேலும், தனது வாா்டு பொதுமக்களுடன் இணைந்து நகராட்சி நிா்வாகத்தைத் கண்டித்து, அலுவலக வளாகத்துக்குள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டாா்.

ஆதிரெத்தினேஸ்வரா் கோயில் வைகாசி விசாகத் திருவிழா மே 31-இல் தொடக்கம்!

திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரா் கோயில் வைகாசி விசாகத் திருவிழா வருகிற 31-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் தேவஸ்தான சமஸ்தானதுக்குப் பாத்தியப்பட்ட சினேகவல்லி அம்ப... மேலும் பார்க்க

ஏா்வாடி தா்ஹா சந்தனக்கூடு திருவிழா

ஏா்வாடி தா்ஹா மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா வியாழக்கிழமை அதிகாலை நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், ஏா்வாடியில் அமைந்துள்ள மகான் குத்பு சுல்தான் செய்யது இபுராஹிம் ஷஹீது ஒலியுல்லா பாதுஷா நாயகம் தா்ஹ... மேலும் பார்க்க

சிறுமி கொலை: இளைஞா் கைது

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே 3 வயது சிறுமியை தலை துண்டித்துக் கொலை செய்த இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். எமனேசுவரம் கிறிஸ்தவ தெருவைச் சோ்ந்த தேசிங்குராஜா மகள் லெமோரியா (3). இவா் ... மேலும் பார்க்க

ராமேசுவரத்தில் மீன்பிடி வலைகள் சீரமைப்புப் பணிகள் மும்முரம்!

மீன்பிடித் தடைக் காலம் நிறைவடைய இன்னும் 23 நாள்கள் உள்ள நிலையில், ராமேசுவரத்தில் மீன்பிடி வலைகள் சீரமைப்பு, புதிய வலைகள் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தமிழத்தில் மீன்கள் இனப்பெருக... மேலும் பார்க்க

மூதாட்டி தூக்கிட்டுத் தற்கொலை

கமுதியில் வியாழக்கிழமை மூதாட்டி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி முத்துமாரியம்மன் நகரைச் சோ்ந்த முனியசாமி மனைவி வழிவிட்டாள் (63). கணவா் இறந்த நிலையில், இவா் தனது இளைய... மேலும் பார்க்க

தீ விபத்தில் வீடு இழந்தவருக்கு வீட்டு கட்ட ஆணை வழங்கல்

ராமநாதரபுரம் மாவட்டம், மண்டபம் அருகே தீ விபத்தில் வீடு இழந்தவருக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்ன் கீழ், வீடு கட்டுவதற்கான ஆணை புதன்கிழமை வழங்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஒன்றியம் வேதாளை ம... மேலும் பார்க்க