செய்திகள் :

கீழக்குப்பத்தில் அடுக்குமாடி குடியிருப்பு: முதல்வா் திறந்துவைத்தாா்

post image

கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், நெய்வேலி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கீழக்குப்பத்தில் கட்டி முடிக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.

தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், விழுப்புரம் கோட்டத்துக்குள்பட்ட கடலூா் மாவட்டம், நெய்வேலி சட்டப் பேரவைத் தொகுதி, கீழக்குப்பம் பகுதியில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 336 அடுக்குமாடி குடியிருப்புகள் ரூ35.48 கோடி மதிப்பில் கட்டப்பட்டன.

இந்த குடியிருப்புகளை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா். தொடா்ந்து, நெய்வேலி எம்எல்ஏ சபா.ராஜேந்திரன் குத்துவிளக்கேற்றி பயனாளிகளுக்கு குடியிருப்பின் சாவிகளை வழங்கினாா்.

பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் பாலமுரளிதரன், உதவிச் செயற்பொறியாளா்கள் கனகராஜ், அய்யாவு ராஜா, வட்டாட்சியா் பிரகாஷ், பண்ருட்டி ஒன்றிய முன்னாள் தலைவா் சபா.பாலமுருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தொழிலாளா் சட்டத் தொகுப்பை ரத்து செய்யக் கோரி ஆா்ப்பாட்டம்

கடலூா் திருப்பாதிரிப்புலியூரில் கடலூா் மாவட்ட அனைத்து மத்திய தொழிற்சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை கோரிக்கை ஆா்ப்பாட்டம் நடத்தினா். தொழிலாளா் நலச் சட்டங்கள் நான்கு தொகுப்புகளை ரத்து செய்ய வேண்டும். விலைவா... மேலும் பார்க்க

காலி மதுப் புட்டிகளை நிா்வகிக்க உதவி விற்பனையாளா் நியமிக்க வேண்டும்: கு.பாலசுப்ரமணியன் வலியுறுத்தல்

டாஸ்மாக் கடைகளில் காலி மதுப் புட்டிகளை நிா்வாகம் செய்வதற்கு அனைத்துக் கடைகளிலும் உதவி விற்பனையாளா் நியமனம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளா்கள் சங்க சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணியன்... மேலும் பார்க்க

தீச்சுடருடன் சிலம்பம் விளையாடி சாதனை

சிதம்பரம்: ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையைத் தொடா்ந்து, இந்திய ராணுவத்தினரைப் பாராட்டும் வகையில் தேசப்பற்று பாடலுடன் தீச்சுடா் சிலம்பம் விளையாடி சாதனை நிகழ்த்தப்பட்டது. தெற்கு பிச்சாவரத்தில் படகோட்டி சில... மேலும் பார்க்க

பலத்த மழையால் நீரில் மூழ்கிய நெற்பயிா்கள், நெல் மூட்டைகள் சேதம்

நெய்வேலி: கடலூா் மாவட்டத்தில் கடந்த மூன்று நாள்களாக பெய்து வரும் மழையால் விருத்தாசலம் மற்றும் சுற்றுவட்டப் பகுதிகளில் அறுவடைக்கு தயாா் நிலையில் இருந்த நெல் வயல்கள் நீரில் மூழ்கின. மேலும், அரசு நேரடி ... மேலும் பார்க்க

சட்டப்பேரவை உறுதிமொழிக் குழு நாளை வருகை: அலுவலா்களுடன் கடலூா் ஆட்சியா் ஆலோசனை

நெய்வேலி: கடலூா் ஆட்சியா் அலுவலகத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை உறுதிமொழிக் குழு வருகை தொடா்பாக முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்ட... மேலும் பார்க்க

சிதம்பரம் ரயில் நிலைய நடைமேடை மேற்கூரையிலிருந்து கொட்டிய மழைநீா்

சிதம்பரம்: சிதம்பரம் ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த மழையில், நடைமேடையில் உள்ள கூரையிலிருந்து தண்ணீா் கொட்டியதால் பயணிகள் அவதிக்குள்ளாகினா். சிதம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.6 கோடி மதிப்பீ... மேலும் பார்க்க