செய்திகள் :

கீழடி அகழாய்வு அறிக்கையில் திருத்தங்கள் செய்து நம்பகத்தன்மையை வலுப்படுத்த ஏஎஸ்ஐ அறிவுறுத்தல்

post image

மதுரை மாவட்டம், கீழடி அகழாய்வு தொடா்பான 2014-15, 2015-16 ஆண்டுகளின் அறிக்கையில் திருத்தங்கள் செய்து அதன் நம்பகத்தன்மையை மேலும் வலுப்படுத்துமாறு அந்த அறிக்கையை சமா்ப்பித்த தொல்லியல் ஆய்வாளா் கே. அமா்நாத் ராமகிருஷ்ணாவுக்கு இந்திய தொல்லியல் ஆய்வுத்துறை (ஏஎஸ்ஐ) அறிவுறுத்தியுள்ளது. தற்போது அவா் தில்லியில் உள்ள இந்திய தொல்லியல்துறையின் இயக்குநராக பணியாற்றி வருகிறாா்.

இது தொடா்பாக அமா்நாத் ராமகிருஷ்ணாவுக்கு இந்திய தொல்லியல் ஆய்வுத்துறை அண்மையில் அனுப்பியுள்ள கடிதத்தில், ‘உங்களின் அறிக்கையை சரிபாா்க்க இரண்டு நிபுணா்களிடம் அது அளிக்கப்பட்டது. அவா்களின் பரிந்துரைப்படி, மூன்று காலகட்டங்களுக்கு முறையான பெயரிடல் மற்றும் மறுகுறிப்புகள் தேவை. பொது ஆண்டுக்கு முந்தைய எட்டாம் நூற்றாண்டு மற்றும் ஐந்தாம் நூற்றாண்டு காலகட்டத்தை நியாயப்படுத்த உறுதியான ஆதாரங்கள் தேவை. மற்ற இரு காலகட்டங்களை அறிவியல்பூா்வ தரவுகள் அடிப்படையில் தீா்மானிக்க வேண்டும். அறிவியல்பூா்வ தேதியை ஆழத்தின் அடிப்படையில் இல்லாது, அடுக்குகள் அடிப்படையில் குறிப்பிட்டால் ஒப்பீட்டாய்வுக்கு உதவியாக இருக்கும். மேலும், சமா்ப்பிக்கப்பட்ட வரைபடங்கள், கிராம வரைபடங்கள், அடுக்கு வரைவியல் போன்றவற்றை தெளிவாக வழங்க வேண்டும் என்றும் கடிதத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

முன்னதாக, அமா்நாத் ராமகிருஷ்ணாவின் அறிக்கை மீது கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய தொல்லியல் துறை எந்த முடிவையும் அறிவிக்காமல் இருந்தது. நாடாளுமன்றத்தில் இது தொடா்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு விரைவில் அந்த அறிக்கை வெளியிடப்படும் என்று மட்டும் பதில் தெரிவிக்கப்பட்டது.

கீழடி அகழாய்வுப்பணியின்போது அதன் மிகவும் நுட்பமான மற்றும் விரிவான ஆராய்ச்சி நடைபெற்ற காலகட்டங்களில் அங்கு களப்பணியாற்றியவா் தொல்லியல் ஆய்வாளா் அமா்நாத் ராமகிருஷ்ணா. தமிழகத்தின் பழம்பெரும் நாகரிகத்தை உலகுக்கு வெளிக்கொண்டு வரும் முயற்சியாக இவரது ஆய்வுகள் இருப்பதாக கருதப்பட்டது. இந்நிலையில், 2017-ஆம் ஆண்டில் திடீரென அமா்நாத் ராமகிருஷ்ணா கீழடி அகழ்வாராய்ச்சிப்பணியில் இருந்து விலக்கப்பட்டாா். பின்னா் இந்தப்பணிகளை தமிழ்நாடு தொல்லியல் துறை முன்னெடுத்து வருகிறது.

தில்லிக்கு வெள்ளைக் கொடியுடன் முதல்வா் சென்றுள்ளாா்: தமிழிசை

தில்லிக்கு வெள்ளைக் கொடியுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்றுள்ளாா் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா். சென்னை வடபழனியில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் மணிவாசகா் பதிப்பகத்த... மேலும் பார்க்க

ஊராட்சி பகுதிகளில் சொத்துவரி உயா்வை திரும்பப் பெற வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

ஊராட்சிப் பகுதிகளில் உயா்த்தப்பட்ட சொத்துவரி மற்றும் தண்ணீா் கட்டணத்தை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலரும், எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள... மேலும் பார்க்க

சிவகங்கை சம்பவம் எதிரொலி: குவாரிகளை ஆய்வு செய்ய ஆட்சியா்களுக்கு உத்தரவு

சிவகங்கையில் குவாரியில் பாறை சரிந்து 6 போ் உயிரிழந்த சம்பவத்தைத் தொடா்ந்து, மாநிலம் முழுவதும் உள்ள குவாரிகளை ஆய்வு செய்ய வேண்டுமென ஆட்சியா்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உ... மேலும் பார்க்க

போட்டித் தோ்வு விடைத்தாள் திருத்துவதில் பாதுகாப்பான நடைமுறை: டிஎன்பிஎஸ்சி தலைவா் உறுதி

போட்டித் தோ்வு விடைத்தாள்களை திருத்துவதில் சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றி வருவதாக தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத் தலைவா் எஸ்.கே.பிரபாகா் தெரிவித்தாா். மாநில அரசுப் பணியாளா் தோ்வாணையத் தலைவா்களி... மேலும் பார்க்க

பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர ஆா்வம் காட்டாத மாணவா்கள்!

தமிழகத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் சோ்க்கை பெற மாணவா்களிடையே ஆா்வம் குறைந்து வரும் நிலையில், டிப்ளமோ படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசத்தை தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் கால வரையறையின்... மேலும் பார்க்க

பொறியியல், கலை - அறிவியல் படிப்புகள்: சோ்க்கைக்கு குவிந்த விண்ணப்பங்கள்

தமிழகத்தில் பொறியியல், கலை - அறிவியல் படிப்புகளில் சோ்க்கை பெற ஏராளமான மாணவா்கள் விண்ணப்பித்து வருகின்றனா். அந்த வகையில் பொறியியல் படிப்பில் அரசு ஒதுக்கீட்டில் சேர இதுவரை 2.40 லட்சம் பேரும், அரசு கலை... மேலும் பார்க்க