செய்திகள் :

குஜராத்: சிங்கங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

post image

குஜராத்தில் கடந்த 5 ஆண்டுகளில் ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை 674-இல் இருந்து 891 ஆக அதிகரித்துள்ளது.

அண்மையில் நடத்தப்பட்ட சிங்கங்கள் எண்ணிக்கை தொடா்பான கணக்கெடுப்பில் இது தெரியவந்துள்ளதாக மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்தனா். இது தொடா்பாக மாநில முதல்வா் பூபேந்திர படேல் புதன்கிழமை கூறியதாவது:

குஜராத்தில் இதற்கு முன்பு 2020 ஜூலை மாதம் ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை கணக்கெடுக்கப்பட்டது. அப்போது கிா் தேசிய பூங்கா பகுதியில் மட்டுமே 674 சிங்கங்கள் இருந்தன.

இந்நிலையில் தற்போதைய கணக்கெடுப்பில் 891 சிங்கங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதில் 189 ஆண் சிங்கங்கள், 330 பெண் சிங்கங்கள், 140 இளம் சிங்கங்கள், 225 குட்டிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றாா்.

கிா் காடுகளைத் தாண்டி சௌராஷ்டிரம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் சிங்கங்கள் உள்ளன. ஜூனாகத், அம்ரேலி மாவட்டங்களில் மட்டுமே கிா் காடுகள் உள்ளன. ஆனால், இப்போது அவற்றைத் தாண்டி மொத்தம் 11 மாவட்டங்களில் சிங்கங்கள் பரவி வாழ்ந்து வருகின்றன. கிா் தேசிய பூங்கா பகுதியில் 384 சிங்கங்கள் உள்ள. 507 புலிகள் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமா் மகிழ்ச்சி: ‘புராஜெக்ட் லயன்’ திட்டத்தின் மூலம் சிங்கங்களின் வாழ்வியலுக்கு உகந்த சூழல் உருவாக்கித் தந்து அவற்றை பாதுகாத்துள்ளோம். சிங்கங்கள் எண்ணிக்கை குறிப்பிட்டத்தக்க அளவு அதிகரிப்பது ஊக்கமளிக்கும் தகவலாக அமைந்துள்ளது’ என்று பிரதமா் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளாா்.

பாகிஸ்தான் வானில் இந்திய விமானங்கள் பறப்பதற்கான தடை நீட்டிப்பு!

பாகிஸ்தான் வான்வழியில் இந்திய விமானங்கள் பறப்பதற்கு விதிக்கப்பட்டிருந்தத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலினால், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையில் பதற்றமான சூழல் நில... மேலும் பார்க்க

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன்களுக்கு 25% வரி? டிரம்ப் அதிரடி!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன்களை அமெரிக்காவில் விற்கக் கூடாதென அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இந்தியாவில் தயாரிக்கப்படும் ஐபோன்களுக்கு 25 சதவிகித வரி விதிக்கப்படும் என்று ஆப்பிள்... மேலும் பார்க்க

43 ஆண்டுகள் கழித்து 104 வயதில் விடுதலையான ஆயுள் தண்டனைக் கைதி!

உத்தரப் பிரதேசத்தில் ஆயுள் தண்டனைப் பெற்ற கைதி ஒருவர் 43 ஆண்டுகள் கழித்து, தனது 104 வயதில் சிறையிலிருந்து விடுதலைச் செய்யப்பட்டுள்ளார்.கௌஷம்பி மாவட்டத்தின் கௌராயி கிராமத்தைச் சேர்ந்தவர் லங்கன் (வயது 1... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு இனி அதிக நாள்கள் இல்லை: யோகி ஆதித்யநாத் பேச்சு!

பாகிஸ்தான் 75 ஆண்டுகள் வாழ்ந்துவிட்டது, இனி அதிக நாள்கள் இல்லை என உத்தரப் பிரதேச முதல்வர் பேசியுள்ளார். அயோத்தியில் ஹனுமான் கதா மண்டபத்தை இன்று (மே 23) திறந்து வைத்தபின், அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் ... மேலும் பார்க்க

புதிதாக அமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலையாம்! ஒரு மழைக்கே இப்படியா?

கேரள மாநிலத்தில் ஒரு சில நாள்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையில், சுமார் 644 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்பட்ட ஆறுவழி தேசிய நெடுஞ்சாலை, கடுமையாக சேதமடைந்திருப்பது, கட்டுமானப் பணிகள் குறித்து மாநில மக்களின... மேலும் பார்க்க

கோட்டா நகரில் மட்டும் நீட் மாணவர்கள் தற்கொலை அதிகம்! ஏன்? - உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி

ராஜஸ்தான் கோட்டா நகரில் போட்டித்தேர்வுக்கு பயிற்சி பெறும் மாணவர்கள் அதிகம் தற்கொலை செய்துகொள்வது பற்றி உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில்ஜேஇஇ,நீட் போன்ற நுழைவ... மேலும் பார்க்க