செய்திகள் :

குஜராத்: திடீரென இடிந்து விழுந்த பாலம்; ஆற்றில் விழுந்த வாகனங்கள் - 9 பேர் உயிரிழப்பு

post image

குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்தில் உள்ள முஜ்பூரையும் அருகில் உள்ள ஆனந்த் மாவட்டத்தில் இருக்கும் கம்பீரா என்ற இடத்தையும் இணைக்கும் வகையில் மஹிசாகர் ஆற்றின் மீது மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டு இருந்தது. இந்த பாலத்தின் மீது இன்று காலை வாகனங்கள் சென்று கொண்டிருந்தபோது மேம்பாலத்தின் மத்திய பகுதி திடீரென இடிந்து ஆற்றுக்குள் விழுந்தது.

அந்நேரம் அந்த மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த இரண்டு லாரி, இரண்டு வேன், ஒரு ஆட்டோ போன்றவை ஆற்றில் விழுந்தது. அதில் இருந்தவர்கள் ஆற்றில் விழுந்து உதவி கேட்டு கூச்சலிட்டனர். ஒரு டேங்கர் லாரி இடிந்து விழுந்த மேம்பாலத்தில் பாதி வெளியில் வந்த நிலையில் கீழே விழும் வகையில் ஊசலாடிக்கொண்டிருந்தது. தீயணைப்பு துறையினரும், போலீஸாரும், பேரிடர் மீட்புப்படையும் விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டு சிலர் உயிரிழந்துவிட்டனர். மேலும் 5 பேர் உயிரோடு மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருப்பதாக மாவட்ட ஆட்சித்தலைவர் அனில் தெரிவித்துள்ளார்.

மேம்பாலம் இடிந்துவிழுந்தபோது அதில் இரு இருசக்கர வாகனங்களும் சென்றது உறுதிபடுத்தப்பட்டு இருக்கிறது. அவை தண்ணீரில் மூழ்கி இருக்கிறதா என்று இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. மேம்பாலம் இடிந்து விழுந்த பகுதி அதிக ஆழம் கொண்டது கிடையாது. எனவே மீட்புப்பணியில் பெரிய அளவில் பிரச்னை ஏற்படவில்லை. பாலம் இடிந்து விழுவதற்கு முன்பு பாலத்தில் விரிசல் ஏற்பட்டபோது பெரிய சத்தம் வந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

இடிந்து விழுந்த மேம்பாலம் 43 ஆண்டுகள் பழமையானது ஆகும். கடந்த ஆண்டுதான் மேம்பாலம் பழுதுபார்க்கப்பட்டது என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. குஜராத்தை செளராஷ்டிராவுடன் இணைக்கும் வகையில் இந்த பாலம் இருந்தது. எனவே எப்போதும் பாலம் மிகவும் பிஸியாக இருந்து வந்தது. ஆனால் இப்பாலத்தை சரியாக பராமரிக்காமல் மாவட்ட நிர்வாகம் புறக்கணித்து வந்ததாக பொதுமக்கள் குற்றம் சாட்டி இருக்கின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

Italy: விமானத்தின் இஞ்சினால் உள்ளிழுக்கப்பட்ட நபர் உயிரிழப்பு; நிறுத்தப்பட்ட விமான சேவைகள்!

இத்தாலியில், விமான நிலையத்தில் ஒருவர் விமானத்தின் இஞ்சினால் உள்ளிழுக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.இந்த சம்பவமானது மிலன் பெர்கமோ விமான நிலையத்தில் இன்று காலை 10 மணியளவில... மேலும் பார்க்க

”கார் மீது லோடு ஆட்டோ மோதி விபத்து”- நான்கு பேர் பலி; சுற்றுலா சென்ற இடத்தில் நேர்ந்த சோகம்

சென்னை பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் குமார் (57). இவரின் மனைவி ஜெயா (55), மகள் மோனிஷா (30), மகன் ஸ்டாலின் (36), இவரது மனைவி துர்கா (32) சிறுமி நிவேனி சூரியா (3). இவர்கள் குடும்பமாக காரில் கும்பக... மேலும் பார்க்க

கடலூர்: 50 மீட்டர் துரம் தூக்கி வீசப்பட்ட வேன்; 3 மாணவர்கள் உயிரிழந்த ரயில் விபத்தின் முழு பின்னணி

50 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்ட பள்ளி வேன்கடலூர் - நெல்லிக்குப்பம் சாலையில் உள்ள பிரபல தனியார் பள்ளி ஒன்றின் வேன், இன்று காலை 7.30 மணிக்கு மாணவர்களை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்தது. 7.45 மண... மேலும் பார்க்க

கடலூர்: பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து - மாணவர்கள், குழந்தைகள் படுகாயம்!

கடலூர் அருகே செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. பள்ளி வேன் ரயில்வே கேட்டைக் கடக்க முயன்... மேலும் பார்க்க

சாத்தூர்: பட்டாசு ஆலை வெடித்து தரைமட்டமான 16 அறைகள்; மீட்பு பணி காட்சிகள்..

பட்டாசு ஆலை வெடி விபத்துபட்டாசு ஆலை வெடி விபத்துபட்டாசு ஆலை வெடி விபத்து; மீட்பு பணி காட்சிகள்பட்டாசு ஆலை வெடி விபத்து; மீட்பு பணி காட்சிகள்பட்டாசு ஆலை வெடி விபத்து; மீட்பு பணி காட்சிகள்மீட்பு பணி காட... மேலும் பார்க்க

நாமக்கல்: ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட அரசு ஊழியர்கள்... குடும்பப் பிரச்னையில் விபரீதம்!

நாமக்கல் மாவட்டம், தில்லைபுரத்தைச் சேர்ந்த சுப்பிரமணி(54), திருச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பறக்கும் படையில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி பிரமிளா(50), ஆண்டாபுரம் ஊராட்சி தொடக்கப் பள்ளியில... மேலும் பார்க்க