செய்திகள் :

குஜராத்: மாணவர்கள் எண்ணிக்கை குறைந்ததால் அரசு பள்ளிகள் மூடல்!

post image

குஜராத்தில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்ததால் கடந்த இரு ஆண்டுகளில் 33 மாவட்டங்களில் உள்ள 54 அரசு தொடக்கப் பள்ளிகளை மூடியிருப்பதாக அரசு தெரிவித்துள்ளது.

அரசு தொடக்கப் பள்ளிகளின் நிலைமை பற்றி குஜராத் சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்எல்ஏ கிரித் படேல் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த கல்வித் துறை அமைச்சர் அதுபற்றிய தரவுகளை பேரவையில் சமர்ப்பித்தார்.

மாநிலம் முழுவதும் மூடப்படும் பள்ளிகள்

கடந்த இரு ஆண்டுகளில் தேவபூமி துவாரகா மாவட்டத்தில் 9 பள்ளிகளும், ஆரவல்லியில் 7-ம், ஆம்ரேலி, போர்பந்தரில் தலா 6-ம், ஜுனாகத் பகுதியில் 4-ம், சோட்டா உதேபூர், கட்ச், ராஜ்கோட்டில் தலா 3- பள்ளிகளும் மாணவர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்ததால் மூடப்பட்டன.

அதேபோல கேதா, ஜாம்நகர், நவஸ்ரீ ஆகிய மாவட்டங்களில் தலா 2 பள்ளிகளும் பாவ்நகர், தங், கிர் சோம்நாத், மஹேசனா, பஞ்சமஹால், சூரத், சுரேந்திரநகர் ஆகிய பகுதிகளில் தலா 1 பள்ளியும் மூடப்பட்டதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.

ஒற்றை வகுப்பறை பள்ளிகள்

பள்ளிகள் மூடப்படுவது மட்டுமின்றி பல உள்கட்டமைப்பு சார்ந்த பிரச்னைகள் குஜராத் கல்வித் துறையை மோசமான நிலையில் வைத்திருக்கின்றன.

341 அரசு தொடக்கப் பள்ளிகள் ஒரே ஒரு வகுப்பறையுடன் இயங்கி வருவதாக கடந்தாண்டு பிப்ரவரி மாதம் சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்எல்ஏ சிலேஷ் பர்மார் கேட்ட கேள்விக்கு அரசு பதிலளித்திருந்தது.

அதை, நியாயப்படுத்தும் விதமாக ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் மாணவர் எண்ணிக்கை குறைவு போன்ற காரணங்கள் கூறப்பட்டன.

இதையும் படிக்க | பணக்காரப் பெண்கள் பட்டியலில் நுழைந்த முதல் இந்தியர்!

மேலும், பாழடைந்த கட்டிடங்கள் இடிக்கப்படுவதும் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு நிலம் இல்லாததாலும் ஒரு வகுப்பறை மட்டுமே உள்ள பள்ளிகளில் மாற்று ஏற்பாடுகள் செய்ய முடியாத சூழ்நிலை உள்ளது.

ஒரே ஒரு ஆசிரியருடன் இயங்கும் 1,606 பள்ளிகள்

இதில், மற்றொரு அதிர்ச்சியான தகவல் என்னவென்றால் குஜராத்தின் மொத்தமுள்ள 32,000 அரசுப் பள்ளிகளில் 1,606 பள்ளிகள் ஒரே ஒரு ஆசிரியருடன் இயங்குவதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.

ஒரு ஆசிரியர் மட்டும் 1 முதல் 8 -ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடம் நடத்துகிறார். இதன்மூலம், குஜராத்தில் நிரப்பப்படாத ஆசிரியர் பணியிடங்கள் குறித்து கேள்வி எழுகின்றது. இதனால், ஆயிரக்கணக்கான மாணவர்களின் அடிப்படை கல்வி சிதைவது குறித்து அரசு சிந்திக்க வேண்டும்.

மைதானம் இல்லை

உள்கட்டமைப்பு வசதிகள் தொடர்பான பிரச்னைகள் வெறும் வகுப்பறையுடன் நின்று விடவில்லை. கிட்டத்தட்ட 5,012 அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவர்களுக்கு விளையாட்டு மைதானங்கள் இல்லை.

தொடக்கப் பள்ளிகள் மட்டுமின்றி மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகளிலும் இதே நிலைமைதான். 78 அரசுப் பள்ளிகள், 315 அரசு உதவிபெறும் பள்ளிகள், 255 தனியார் பள்ளிகள் மைதானங்கள் இன்றி இயங்கி வருகின்றன. குஜராத்தில் இதுபோல 12,700 பள்ளிகள் உள்ளன.

37 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகள் மற்றும் 509 தனியார் தொடக்கப் பள்ளிகளிலும் மைதானங்கள் இல்லை. இதனால், விளையாட்டில் ஈடுபட நினைக்கும் பல மாணவர்களின் நிலைமை கேள்விக்கு உள்ளாகிறது.

இதையும் படிக்க | பிரிட்டன் - இந்திய கூட்டுத் தயாரிப்பில் உருவான படத்தை வெளியிட தணிக்கை வாரியம் தடை!

பள்ளிகளின் உள்கட்டமைப்பு பிரச்னைகள், சரிந்து வரும் மாணவர்களின் எண்ணிக்கை, ஆசிரியர்கள் பற்றாக்குறை போன்ற காரணங்களால் குஜராத் பள்ளிக் கல்வித்துறை மிக மோசமான நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றது.

இந்தியாவில் 97 லட்சம் பயனர்களின் வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கம்!

இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் 97 லட்சம் பயனர்களின் வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.வாட்ஸ்ஆப் நிறுவனம் மாதாந்திர பாதுகாப்பு அறிக்கையை இன்று வெளியிட்டது. அந்த அறிக்கையில், முடக்கப்... மேலும் பார்க்க

என்ன, தண்ணீருக்கு அடுத்தபடியாகக் குடிக்கும் பானம் இதுவா?

நீரின்றி அமையாது உலகு என்ற வாக்கியமே, நீரின் முக்கியத்துவத்தை நெற்றிப் பொட்டில் அடித்ததுபோல சொல்ல ஏதுவானது. அப்படிப்பட்ட தண்ணீரை உடல்நலப் பிரச்னை இல்லாத சாதாரண மக்கள் நாள்தோறும் குறைந்தபட்சம் ஒரு அரை ... மேலும் பார்க்க

இந்தியா முழுவதும் 13,000 சதுர கி.மீ. காடுகள் ஆக்கிரமிப்பு!

இந்தியா முழுவதும் 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 13,000 சதுர கி.மீ. காடுகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியா முழுக்க 7,506.48 சதுர கி.மீ. காடுகள் ஆக்கிரமிப்பி... மேலும் பார்க்க

அம்பானியின் மகன் இஸட் பிரிவு பாதுகாப்புடன் 5-ஆவது நாளாக நடைப்பயணம்! எதற்காக?

புது தில்லி: இந்தியாவின் கோடீஸ்வர தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி இஸட் பிரிவு பாதுகாப்புடன் நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் தமது 30-ஆவது பிறந்தநாளை வரும் ஏப். 10-ஆம் தேதி கொண்டாடுவ... மேலும் பார்க்க

எஸ்பிஐ வங்கி ஏடிஎம் உள்ளிட்ட சேவையில் சிக்கல்..

எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், ஏப். 1ஆம் தேதி காலையில் இருந்து பகல் வரை பணப்பரிமாற்றம் உள்ளிட்ட சில சேவைகளில் சிக்கலை சந்தித்துள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன.மொபைல் வங்கி, ஏட... மேலும் பார்க்க

நான் ஒரு யோகி.. அரசியல் முழு நேர வேலையல்ல.. சொன்ன முதல்வர் யார்?

புது தில்லி: தன்னுடைய முதல் அடையாளம் யோகி என்றும், தனது கடமை, உத்தரப்பிரதேச மக்களுக்கு சேவையாற்றுவது என்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியிருக்கிறார்.நான் ஒரு யோகி என்றும், அரசியல் எனக்கு முழு நேர வே... மேலும் பார்க்க