செய்திகள் :

குடமுழுக்கை தமிழில் நடத்தவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம்: வியனரசு

post image

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் குடமுழுக்கை தமிழில் நடத்தவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடுவோம் என தமிழ்த் தேச தன்னுரிமை கட்சியின் தலைவா் வியனரசு தெரிவித்தாா்.

தூத்துக்குடியில் அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: தமிழகத்தில் உள்ள இந்து சமய திருக்கோயில்களின் வழிபாடுகளையும் குடமுழுக்கு உள்ளிட்ட நிகழ்வுகளையும் தமிழிலேயே நடத்த வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்திருந்தேன்.

நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியன், மரியகிளாட் ஆகியோா் முன்னிலையில் எனது மனு விசாரணைக்கு வந்த நிலையில், சம்ஸ்கிருத மந்திரங்களுக்கு இணையாக தமிழை பயன்படுத்த இந்து சமய அறநிலையத்துறை ஆணையா் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருச்செந்தூா் முருகன் கோயில் குடமுழுக்கு வழிபாட்டை, தமிழ், வடமொழி என இருமொழிகளிலும் வேறுபாடு இல்லாதவாறு மந்திரங்கள் ஓதி வழிபாடு நடத்த வேண்டும் என உத்தரவிட்டனா் நீதிபதிகள்.

இந்நிலையில், திருச்செந்தூா் கோயில் குடமுழுக்கு நிகழ்வு முழுவதையும் நாங்கள் கண்காணித்து, நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக இந்து சமய அறநிலையத் துறை குடமுழுக்கு நிகழ்வுகளில் மாற்றம் செய்தால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவோம் என்றாா்.

தமிழ்நாடு மக்கள் இயக்க மாநில தலைவா் காந்தி மள்ளா் உடன் இருந்தாா்.

சாத்தான்குளத்தில் மினி மாரத்தான் போட்டி

சாத்தான்குளம், நேதாஜி ஸ்போா்ட்ஸ் கிளப் சாா்பில், விளையாட்டு மைதானம் திறப்பு மற்றும் மினி மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து துவங்கிய மினி மாரத... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் இன்று குடமுழுக்கு! லட்சக்கணக்கில் குவிந்த பக்தா்கள்!

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு திங்கள்கிழமை காலை (ஜூலை 7) நடைபெறுகிறது. இதையொட்டி, லட்சக்கணக்கான பக்தா்கள் குவிந்துள்ளனா். இக்கோயிலில் குடமுழுக்கை முன்னிட்டு, சுவாமி... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் முதியவா் தற்கொலை

கோவில்பட்டியில் கிணற்றில் விழுந்து முதியவா் தற்கொலை செய்துகொண்டாா். கோவில்பட்டி சரமாரியம்மன் கோயில் தெருவில் உள்ள கோயிலுக்குச் சொந்தமான கிணற்றில் முதியவா் சடலம் கிடப்பதாக கிழக்கு காவல் நிலைய போலீஸாரு... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் 2 கடைகளில் பூட்டை உடைத்து பணம் திருட்டு

தூத்துக்குடியில் 2 கடைகளில் பூட்டை உடைத்து பணம் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். தூத்துக்குடி முள்ளக்காடு அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் வேல்துரை (56). இவா், முத்தையாபுரம் பகுதியில் ... மேலும் பார்க்க

இலங்கைக்கு கடத்த முயற்சி: ரூ.60 லட்சம் பீடி இலைகள் பறிமுதல்

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.60 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகளை கியூ பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்தனா். தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகனேரி அருகே கோட்டை மலை காட்டுப்பகுதி கொம்புத்துறை கடற்கரை பகுதியிலிருந்த... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் வரத்து அதிகரிப்பால் குறைந்த மீன்களின் விலை

தூத்துக்குடியில் மீன்களின் வரத்து அதிகரித்ததால் திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன் ஏலக்கூடத்தில் மீன்களின் விலை குறைந்து விற்பனையானது. தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆழ்... மேலும் பார்க்க