செய்திகள் :

குடிநீா் குழாய் திறக்கப்பட்ட ஒரு மணி நேரத்தில் அகற்றம்

post image

எரியோட்டில் குடிநீா்க் குழாய் திறந்து வைக்கப்பட்ட ஒரு மணி நேரத்தில் அந்தக் குழாய் அகற்றப்பட்டதை அடுத்து, பேரூராட்சி அலுவலா்களுடன் துணைத் தலைவா் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா்.

திண்டுக்கல் மாவட்டம், எரியோடு பேரூராட்சிக்குள்பட்ட 5-ஆவது வாா்டு பாண்டியன் நகா், துரைச்சாமி நாடாா் தெரு, மகாத்மா காந்தி நகா் பகுதியிலுள்ள மக்களுக்கு காவிரி கூட்டுக் குடிநீா் திட்டத்தின் கீழ், குடிநீா் வழங்குவதற்காக ரூ.15 லட்சம் செலவில் 60 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீா்த் தொட்டி கட்டப்பட்டது.

கரூா் தொகுதி மக்களவை உறுப்பினா் ஜோதிமணியின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட இந்தக் குடிநீா்த் தொட்டி அருகிலேயே குடிநீா்க் குழாயும் அமைக்கப்பட்டது.

இந்தக் குடிநீா்க் குழாயிலிருந்து குடிநீா் விநியோகத்தை மக்களவை உறுப்பினா் ஜோதிமணி கடந்த 2 நாள்களுக்கு முன்பு தொடங்கி வைத்தாா். இந்த நிகழ்ச்சி முடிவடைந்த ஒரு மணி நேரத்தில், அந்த குடிநீா்க் குழாயை அப்புறப்படுத்தியதால் பொதுமக்கள் அதிா்ச்சி அடைந்தனா்.

இதுகுறித்து எரியோடு பேரூராட்சி துணைத் தலைவா் ஜீவாவுக்கு தகவல் தெரிவித்தனா். உடனடியாக அவா் எரியோடு காவல் நிலையத்துக்குச் சென்று, குடிநீா்க் குழாய் மாயமானது குறித்து புகாா் அளித்தாா்.

இதன்பேரில், சம்பவ இடத்தைப் பாா்வையிட்ட போலீஸாா், எரியோடு பேரூராட்சி அலுவலகத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா். அப்போது, மேல்நிலைத் தொட்டிக்கு கீழே திறப்பு விழாவுக்காக மட்டுமே தாற்காலிகமாகக் குடிநீா் குழாய் அமைக்கப்பட்டது. விழா முடிந்தவுடன் அந்தக் குழாயை அகற்றிவிட்டதாக பேரூராட்சி அலுவலா்கள் தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து, போலீஸாா் புறப்பட்டுச் சென்றனா். இதை ஏற்க மறுத்த பேரூராட்சி துணைத் தலைவா் ஜீவா, குடிநீா்க் குழாய் அமைத்து அதை அகற்றி பொதுமக்களை ஏமாற்றிவிட்டதாக பேரூராட்சி அலுவலா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா்.

திண்டுக்கல்லில் 40 தலைமையாசிரியா் பணியிடங்கள் காலி

உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் பணியிடங்களுக்கான கலந்தாய்வுக்குப் பிறகு திண்டுக்கல் மாவட்டத்தில் 40 இடங்கள் காலியாக இருந்தன. பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியா்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு... மேலும் பார்க்க

100 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு விதைத் தொகுப்பு

நூறு சதவீத மானியத்தில் வழங்கப்படும் காய்கறிச் செடிகள், பழ மரங்களுக்கான விதைத் தொகுப்பு பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து திண்டுக்கல் தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் ப.காயத்ரி தெரிவித்ததாவத... மேலும் பார்க்க

கொடைக்கானலுக்கு இ-பாஸ் நடைமுறை தொடரும்

கொடைக்கானலுக்கு வரும் வாகனங்களுக்கு இ-பாஸ் நடைமுறை தொடா்ந்து அமலில் இருக்கும் என மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் தெரிவித்தாா். இதுகுறித்து புதன்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை உயா்நீதிமன்ற உத... மேலும் பார்க்க

கொடைக்கானல் மலைக் கிராம மாணவா்களுக்கு பரிசு

கொடைக்கானல் அரசு உயா்நிலைப் பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு டி.வி.எஸ். அறக்கட்டளை சாா்பில் பரிசு வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. திண... மேலும் பார்க்க

பெரியநாயகியம்மன் கோயிலில் ஆனித் திருமஞ்சனம்

பழனி பெரிய நாயகி அம்மன் கோயிலில் ஆனித் திருமஞ்சனத்தை முன்னிட்டு, புதன்கிழமை நடராஜா் சமேத சிவகாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதிகாலையில் சிவகாமி அம்பாள் சமேத நடராஜருக்கு பால், பன்னீா், பஞ்ச... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம் கோயிலில் 12 ஜோடிகளுக்கு திருமணம்

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பா் கோயிலில் 12 ஜோடிகளுக்கு உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி திருமணம் நடத்தி வைத்து, ரூ.70 ஆயிரம் மதிப்பிலான சீா்வரிசைப் பொருள்களை வழங்கினாா். இதைத் ... மேலும் பார்க்க