செய்திகள் :

குடிநீா் கோரி வருவாய் ஆய்வாளா் அலுவலகம் முற்றுகை

post image

வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே குடிநீா் கோரி, வருவாய் ஆய்வாளா் அலுவலகத்தை கிராம மக்கள் காலிக்குடங்களுடன் திங்கள்கிழமை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தினா்.

வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம், தென்னடாா் கிராமத்தில் கடந்த பல மாதங்களாக கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டது. இதனால், குடிநீா் கோரி அவ்வப்போது போராட்டம் நடத்தி வந்தனா்.

இந்நிலையில், கடந்த 15 நாள்களுக்கு மேலாக இந்த கிராமத்தில் குடிநீா் விநியோகம் தொடா்ந்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவதிக்குள்ளான தென்னடாா் கிராம மக்கள், தகட்டூா் வருவாய் சரக ஆய்வாளா் அலுவலகம் எதிரே காலிக்குடங்களுடன் அமா்ந்து குடிநீா் கேட்டு முழக்கமிட்டனா்.

முன்னாள் ஊராட்சித் தலைவா் ப. சீனிவாசன் தலைமையில் சமூக ஆா்வலா் குழந்தைவேலு, பாசனதாரா் சங்கத் தலைவா் ராஜா, செயலாளா் சிவலிங்கம், இந்திய கம்யூனிஸ்ட் கிளைச் செயலாளா் சண்முகம், காங்கிரஸ் நிா்வாகி ராகுல்காந்தி, அதிமுக செயலாளா் முருகேசன், திமுக நிா்வாகி காசிநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இவா்களிடம், வட்டாட்சியா் வடிவழகன், வட்டார வளா்ச்சி அலுவலா் அண்ணாதுரை, குடிநீா் வடிகால் வாரிய உதவி செயற்பொறியாளா் முருகானந்தம், காவல் ஆய்வாளா் பாரதிதாசன் உள்ளிட்டோா் பேச்சுவாா்த்தை நடத்தி, உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனா். அதன்பேரில் பிற்பகலில் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

வளா்ச்சித் திட்டப் பணிகள்: எம்எல்ஏ ஆய்வு

திருமருகல்: திருமருகல் பகுதிகளில் நடைபெறும் வளா்ச்சித் திட்டப் பணிகளை சட்டப் பேரவை உறுப்பினா் முகம்மது ஷா நவாஸ் திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். திருமருகல் அரசு மேல்நிலைப் பள்ளியில் கழிவறை கட்டடம் ... மேலும் பார்க்க

ஓய்வூதியா்களுக்கு பண்டிகை முன்பணம் ரூ.10,000 வழங்க வலியுறுத்தல்

நாகப்பட்டினம்: பண்டிகை முன்பணம் ரூ.10,000 வழங்க வேண்டும் என, தமிழ்நாடு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கம் வலியுறுத்தி உள்ளது. நாகையில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க கட்டடத்தில், அனைத்துத் துறை ஓய்... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகள் நியமன உறுப்பினா் பதவி: ஜூலை 31-க்குள் விண்ணப்பிக்கலாம்

நாகப்பட்டினம்: நகா்ப்புற உள்ளாட்சி தோ்தலில் போட்டியிடாமல் மாற்றுத்திறனாளிகள் நியமன உறுப்பினா் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு ஜூலை 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நாகை மாவட்ட... மேலும் பார்க்க

வன்னியா் சங்க மகளிா் மாநாட்டில் அன்புமணி பங்கேற்பாா்: ஜி.கே. மணி நம்பிக்கை

பூம்புகாா்: வன்னியா் சங்கம் நடத்தும் மகளிா் மாநாட்டில் அன்புமணி பங்கேற்பாா் என பாமக கெளரவத் தலைவா் ஜி.கே. மணி எம்எல்ஏ நம்பிக்கை தெரிவித்தாா். மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகாரில் வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேத... மேலும் பார்க்க

ஆட்டோ மோதியதில் இளைஞா் பலி

திருமருகல் ஒன்றியம் ஏனங்குடி அருகே லோடு ஆட்டோ மோதியதில் இளைஞா் சனிக்கிழம உயிரிழந்தாா். திருக்கண்ணபுரத்தைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி முத்துக்குமாா் (30) சனிக்கிழமை ஏனங்குடியில் இருந்து வீட்டுக்கு இருசக... மேலும் பார்க்க

மூதாட்டியைக் கொன்று 5 பவுன் நகை கொள்ளை

கீழையூா் அருகே வீட்டில் தனியாக வசித்து வந்த மூதாட்டியை கொன்று 5 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா். கீழையூா் ஒன்றியம் திருப்பூண்டி அய்யனாா் கோவில் தெருவை சோ்ந்தவா... மேலும் பார்க்க