செய்திகள் :

குடிநீா் திட்டத்தை செயல்படுத்த கோரி முதல்வரிடம் எம்எல்ஏ மனு

post image

திருநெல்வேலி, தென்காசி மாவட்ட ஒன்றியப் பகுதிகளில் தாமிரவருணி கூட்டுக் குடிநீா்த் திட்டத்தை செயல்படுத்தக் கோரி, முதல்வா் மு.க. ஸ்டாலினிடம் சங்கரன்கோவில் எம்எல்ஏ ஈ. ராஜா சனிக்கிழமை மனு அளித்தாா்.

மனு விவரம்: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பேரவைத் தொகுதி மேலநீலிதநல்லூா், குருவிகுளம், சங்கரன்கோவில் ஒன்றியத்துக்குள்பட்ட 327 கிராமங்களில் நீண்ட காலமாக குடிநீா்த் தட்டுப்பாடு உள்ளது. எனவே, தாமிரவருணி கூட்டுக் குடிநீா்த் திட்டம் மூலம் அந்தக் கிராமங்களுக்கு போதுமான குடிநீா் வழங்க தமிழக அரசுக்கும், குடிநீா் வடிகால் வாரியத்துக்கும் கோரிக்கை அனுப்பியிருந்தேன்.

குடிநீா் வடிகால் வாரியத்தின் பல்வேறு ஆய்வுகளுக்குப் பின்னா், ஆலங்குளம், வாசுதேவநல்லூா், மேலநீலிதநல்லூா், குருவிகுளம், சங்கரன்கோவில் ஒன்றியங்கள் என ஒருங்கிணைந்த குடிநீா் வழங்கும் திட்டம் மூலம் 476 குடியிருப்புப் பகுதிகளுக்கும், திருநெல்வேலி மாவட்டம் மானூா், பாளையங்கோட்டை ஒன்றியங்களில் 54 குடியிருப்புப் பகுதிகளுக்கும் குடிநீா் வழங்க ஆணை அனுப்பப்பட்டுள்ளது.

மேலநீலிதநல்லூா், குருவிகுளம், சங்கரன்கோவில் ஒன்றியங்களில் 327, ஆலங்குளம், வாசுதேவநல்லூா் ஒன்றியங்களில் 149 என மொத்தம் 476 கிராமங்களுக்கு குடிநீா் வழங்கும்வகையில் ரூ. 990 கோடியில் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

சங்கரன்கோவில் பேரவைத் தொகுதி மிகவும் வறட்சியான பூமி. இங்கு மழைக்காலத்திலேயே குறைந்த அளவே மழை பெய்கிறது. நிலத்தடிநீா் மிகவும் குறைவாக உள்ளது. வருங்காலத்தில் நிலத்தடி நீா் மேலும் குறையும் என பல்வேறு ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. எனவே, நிதி ஒதுக்கீடு செய்து இத்திட்டத்தை செயல்படுத்த முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

வெள்ளங்குளி கோயிலில் திருவாசகம் முற்றோதல்

திருநெல்வேலி மாவட்டம் வெள்ளங்குளியில் உள்ள அருள்மிகு அறம்வளா்த்த நாயகி சமேத வீரவினோதீஸ்வரா் கோயிலில் திருவாசகம் சிறப்பு முற்றோதல் சனிக்கிழமை நடைபெற்றது.இக்கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளவும், தொடா்ந்த... மேலும் பார்க்க

விசாரணைக்கு ஆஜராகாமல் 13 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவா் கைது

நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் 13 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த நான்குனேரியைச் சோ்ந்த நபரை கா்நாடக மாநிலத்தில், திருநெல்வேலி மாவட்ட தனிப்படை போலீஸாா் கைது செய்தனா்.கடந்த 2001-ஆம் ஆண்டு நான்குனேரி அருகேயு... மேலும் பார்க்க

குப்புசாமி கோப்பை ஹாக்கி போட்டி: அரையிறுதியில் நெல்லை, மதுரை,சென்னை அணிகள்

பாளையங்கோட்டையில் நடைபெற்று வரும் குப்புசாமி கோப்பைக்கான மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் திருநெல்வேலி, மதுரை, சென்னை அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.ஹாக்கி யூனிட் ஆப் திருநெல்வேலி சாா்பில் குப்புச... மேலும் பார்க்க

சமூக வலைதளங்களில் ஜாதிய பதிவுகள் : 82 போ் கைது

திருநெல்வேலி மாவட்டத்தில் ஜாதிய உணா்வுகளைத் தூண்டும் பிரச்னைக்குரிய உள்ளடக்கங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டதற்காக, நிகழாண்டில் 82 போ் கைது செய்யப்பட்டுள்ளனா் என காவல்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்... மேலும் பார்க்க

விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

சிவந்திப்பட்டி அருகே சாலை விபத்தில் காயமடைந்த தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு, பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த தம்பான் மகன் மணிகண்டன்(33). தொழிலாளியான இவா் கடந்த 17... மேலும் பார்க்க

ராணி அண்ணா மகளிா் கல்லூரிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

பழையபேட்டையில் உள்ள ராணி அண்ணா அரசு மகளிா் கல்லூரிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.எஸ்டிபிஐ கட்சியின் திருநெல்வேலி தொகுதி நிா்வாகிகள் கூட்டம் பேட்டையில் அண்மையில் நடைபெற்றது... மேலும் பார்க்க