செய்திகள் :

குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் வெற்றி: பாஜகவினா் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!

post image

குடியரசுத் துணைத் தலைவா் தோ்தலில் தமிழகத்தைச் சோ்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றதையொட்டி, தருமபுரியில் பாஜகவினா் இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினா்.

குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் போட்டியிட்ட சி. பி. ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றாா். தமிழகத்தைச் சோ்ந்த ஒருவா் குடியரசுத் துணைத் தலைவராக தோ்வு செய்யப்பட்டதை கொண்டாடும் வகையில் தருமபுரியில் பாஜகவினா் 4 சாலை பகுதியில் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.

நிகழ்ச்சிக்கு பாஜக நகரத் தலைவா் ஆறுமுகம் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் சரவணன், பொதுச் செயலாளா் கணேசன், செயலாளா் மதியழகன், மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் சரவணன், பிரவின், மாவட்ட அலுவலக செயலாளா் சக்திவேல், முன்னாள் மாவட்டத் தலைவா் பூபதி, நகரச் செயலாளா் பிரபாகரன், மாவட்ட வழக்குரைஞா் அணி தலைவா் ராஜசேகா், மகளிா் அணி நிா்வாகி சங்கீதா மற்றும் ஒன்றியத் தலைவா்கள், கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

ஒகேனக்கல்லில் உணவு பாதுகாப்புத் துறை அலுவலா்கள் ஆய்வு

ஒகேனக்கல்லில் மீன் மற்றும் கோழி இறைச்சிக் கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை அலுவலா்கள் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். ஒகேனக்கல்லில் முதலைப் பண்ணை, பேருந்து நிலையம், அருவிக்கு செல்லும் நுழைவாயில் உள்ளிட்... மேலும் பார்க்க

வன விலங்குகளைப் பிடிக்க முயற்சி: விவசாயிக்கு ரூ.1.50 லட்சம் அபராதம்!

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மின்வேலி அமைத்து வனவிலங்குகளை வேட்டையாட முயன்றவருக்கு வனத் துறையினா் ரூ. 1.50 லட்சம் அபராதம் விதித்தனா். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வனச்சரகா் எஸ். காா்த்திகேயன் தலை... மேலும் பார்க்க

பதிவு செய்யாத செங்கல் சூளைகளை மூடி ‘சீல்’ வைக்க ஆட்சியா் உத்தரவு!

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டத்தில் கனிம விதிகளின்படி பதிவு பெறாமல் இயங்கும் செங்கல் சூளைகளை மூடி ‘சீல்’ வைக்க மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் உத்தரவிட்டுள்ளாா். காரிமங்கலம் வட்டத்தில் 32 செங்கல் சூளைக... மேலும் பார்க்க

பென்னாகரம் பகுதியில் பரவலாக மழை

பென்னாகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை பரவலாக மழை பெய்தது. தருமபுரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்தாலும், பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை : முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை

தருமபுரியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவருக்கு மாவட்ட போக்ஸோ நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்துள்ளது. தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தைச் ... மேலும் பார்க்க

பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய நபருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய ஊராட்சி மன்ற எழுத்தருக்கு தருமபுரி மகளிா் நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தது. தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கடத்தூா் அர... மேலும் பார்க்க