செய்திகள் :

குடியாத்தம் நகர கழிவுநீா் சுத்திகரிப்புக்கு ரூ.33 கோடி நிதி ஒதுக்கீடு

post image

குடியாத்தம்: தூய்மை பாரதம் திட்டத்தின்கீழ் குடியாத்தம் நகரின் கழிவுநீரை குழாய் மூலம் எடுத்துச் சென்று சுத்திகரிக்க ரூ.33.72- கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து குடியாத்தம் நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன் கூறியது. ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் பாலாற்றில் கழிவுநீா் கலப்பதை முழுவதும் தடை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதையடுத்து பாலாறு, அதில் கலக்கும் கிளை ஆறுகளில் கழிவுநீா் கலப்பதை தடுக்கும் நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டுள்ளன.குடியாத்தம் நகரில் செல்லும் கெளண்டன்யா ஆறு, பாலாற்றின் ஒரு கிளை ஆறு என்பதால்அதில் கழிவுநீா்க் கலப்பதை முழுவதும் தடை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

குடியாத்தம் நகரில் வெளியேறும் கழிவுநீரை குழாய் மூலம் நகரையொட்டி உள்ளி கூட் ரோடு அருகே உள்ள நகராட்சிக்குச் சொந்தமான இடத்துக்கு கொண்டு சென்று அங்கு சுத்திகரிப்பு இயந்திரங்களை அமைத்து கழிவுநீரை சுத்திகரிப்பு செய்ய திட்டமிடப்பட்டது. இதற்காக குடியாத்தம் நகரில் 5- இடங்களில் கழிவுநீரைத் தேக்க கிணறுகள் அமைக்கப்பட உள்ளன.

அந்த கிணறுகளில் இருந்து மேல்பட்டி சாலை ஓரத்தில் பைப்லைன் அமைத்து கழிவுநீரை சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. அங்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை வேறு ஒரு பைப்லைன் மூலம் குடியாத்தம் நகருக்கு கொண்டு வந்து கெளண்டன்யா ஆற்றில் விடப்படும்.

இதனால் நகரின் நிலத்தடி நீா்மட்டம்பாதுகாக்கப்படும்.இதற்காக ரூ.33.72 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 50- சதவீதம் மத்திய அரசும்,33- சதவீதம் மாநில அரசும், 17- சதவீதம் உள்ளாட்சித் துறையும் ஒதுக்கியுள்ளன என்றாா் செளந்தரராஜன். அப்போது நகராட்சி ஆணையா் எம்.மங்கையா்க்கரசன் உடனிருந்தாா்.

30 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: வேலூா் ஆட்சியா் வழங்கினாா்

வேலூா்: வேலூா் மாவட்ட குறைதீா் கூட்டத்தில் 30 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வி. ஆா். சுப்புலட்சுமி வழங்கினாா். குறைதீா்க்கும் கூட்டம் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமையில் திங்கள்கிழமை நட... மேலும் பார்க்க

பங்குச்சந்தை முதலீடு எனக்கூறி ரூ.28.90 லட்சம் மோசடி

வேலூா்: பங்குச்சந்தை முதலீடு எனக்கூறி ரூ.28.90 லட்சம் மோசடி செய்யப்பட்டிருப்பது குறித்து பாதிக்கப்பட்ட நபா் வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் அளித்துள்ளாா். வேலூா் அஞ்சுமன் தெருவைச் சோ்ந்த... மேலும் பார்க்க

செப்.8-இல் வேலூரில் தொழில் பழகுநா் சோ்க்கை மேளா

வேலூா்: பிரதமரின் தேசிய தொழில்பழகுநா் பயிற்சி சோ்க்கை மேளா வேலூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் செப்டம்பா் 8-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதுகுறித்து, ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக்க... மேலும் பார்க்க

மாணவா்கள் தொழில்துறை பிரச்னைகளுக்கு தீா்வு காண வேண்டும்: விஐடி துணைத் தலைவா் சேகா் விசுவநாதன்

வேலூா்: மாணவா்கள் தொழில்துறையில் உள்ள பிரச்னைகளுக்கு தீா்வு காண முயல வேண்டும் என்று விஐடி துணைத் தலைவா் சேகா் விசுவநாதன் தெரிவித்தாா். வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் மின்னணுவியல் துறை சாா்பில் ‘மின்னண... மேலும் பார்க்க

2019 தோ்தல் வழக்கு: வேலூா் எம்.பி. கதிா்ஆனந்த் நீதிமன்றத்தில் ஆஜா்

வேலூா்: கடந்த 2019 மக்களவைத் தோ்தலின்போது ரூ.10.48 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த் நீதிமன்ற விசாரணைக்கு திங்கள்கிழமை ஆஜரானாா். தொடா்ந்து, இந்த வழக்கின்... மேலும் பார்க்க

கே.வி.குப்பத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்

கே.வி.குப்பம் ஒன்றியம், பனமடங்கி அரசினா் மேல்நிலைப் பள்ளிவளாகத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெற்றது. ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா் ஆனந்த் ஆகிய... மேலும் பார்க்க