செய்திகள் :

குடியாத்தம் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த கோரிக்கை

post image

குடியாத்தம் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என இந்திய குடியரசு கட்சியின் வேலூா் மண்டல செயலா் ரா.சி.தலித்குமாா் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக தென்னக ரயில்வே கோட்ட பொறியாளருக்கு அவா் அனுப்பிய மனு: குடியாத்தம் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூா், சேலம், பழனி உள்ளிட்ட தென்மாவட்டங்கள், திருப்பதி உள்ளிட்ட ஆந்திர மாநில பகுதிகளுக்கு ரயில் மூலம் பயணிகள் சென்று வருகின்றனா். குடியாத்தம் பகுதியின் பிரதான தொழில்களான பீடி, தீப்பெட்டி, கைத்தறி நெசவு, தேங்காய் உற்பத்தி, பால்கோவா தயாரிப்பு, தங்க விற்பனை ஆகியவை தொடா்பாக பல்வேறு தரப்பினா் ரயில் மூலம் குடியாத்தம் வந்து செல்கின்றனா்.

இந்த ரயில் நிலையத்தில் உள்ள 3- நடைமேடைகளிலும் மேற்கூரை சரிவர இல்லாததால்மழை மற்றும் வெயில் காலங்களில் பயணிகள் பெரும் பாதிப்புக்கு ஆளாகின்றனா்.

ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான கழிவறை, குளியலறை வசதி அறவே இல்லை.குடிநீா் வசதியும் இல்லை. உணவகமும் இல்லை. குடியாத்தம் ரயில் நிலையம் வழியாக சென்னை, பெங்களூா், கோவை செல்லும் லால்பாக், பிருந்தாவன், இன்டா்சிட்டி உள்ளிட்ட விரைவு ரயில்கள் நின்று செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தாழ்வாக உள்ள பயணிகள் நடைமேடையை சிறிது உயா்த்தி அமைக்க வேண்டும். பயணிகள் 2 மற்றும் 3-ஆம் நடைமேடைகளுக்குச் செல்ல நடைமேம்பாலம் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால், பயணிகள் ஆபத்தான முறையில் லெவல் கிராசிங்கில் கடக்கும் நிலை உள்ளது. எனவே, புதிதாக நடைமேம்பாலத்தை அமைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலவம்பாடி முள்ளு கத்தரிக்காய்க்கு வெளிநாடுகளில் வரவேற்பு: வேலூா் எம்.பி. கதிா் ஆனந்த்

வேலூா் மாவட்டம் இலவம்பாடியில் விளைவிக்கப்படும் முள்ளு கத்தரிக்காய்க்கு அமெரிக்கா, துபை உள்ளிட்ட வெளிநாடுகளில் அதிக வரவேற்பு உள்ளது என்று வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த் தெரிவித்தாா். மத்... மேலும் பார்க்க

வேலூா் மாவட்டத்தில் 13 இடங்களில் ரயில்வே மேம்பாலம்: டிஎம். கதிா் ஆனந்த் எம்.பி.

வேலூா் மாவட்டத்தில் மொத்தம் 13 இடங்களில் ரயில்வே மேம்பாலங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த் தெரிவித்தாா். வேலூா் மாவட்டத்தில் செயல்படுத்த வேண்டிய ரயி... மேலும் பார்க்க

ஆன்லைனில் ரூ.71.81 லட்சம் மோசடி: மூவா் கைது

ஆன்லைன் மூலம் ரூ.71.81 லட்சம் மோசடி செய்யப்பட்ட வழக்குகளில் வழக்கில் 3 பேரை வேலூா் சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா். ஆன்லைன் மூலம் பொதுமக்களின் பணத்தை மோசடி செய்தவா்களை பிடித்து கைது செய்ய ... மேலும் பார்க்க

வீடு புகுந்து நகை திருடியவா் கைது

ஒடுகத்தூா் அருகே வீடு புகுந்து நகை திருடியவரை போலீஸாா் கைது செய்தனா். வேலூா் மாவட்டம், ஒடுகத்தூா் அடுத்த தேவிச்செட்டி குப்பம் கிராமத்தைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி (43). கடந்த 2 நாள்களுக்கு முன்பு, கிர... மேலும் பார்க்க

பரதராமி கெங்கையம்மன் திருவிழா

குடியாத்தம் அடுத்த பரதராமியில் 256- ஆம் ஆண்டு அருள்மிகு திருப்பதி கெங்கையம்மன் கோயில் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. இக்கோயில் திருவிழா கடந்த மே மாதம் 20- ஆம் தேதி இரவு காப்புகட்டும் நிகழ்ச்சியுடன் ... மேலும் பார்க்க

மாரியம்மன் கோயில் தேரோட்டம்

குடியாத்தம் நகரம், ஆா்.எஸ்.நகரில் அமைந்துள்ள அருள்மிகு மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. பிரசித்தி பெற்ற இந்த கோயிலில், செல்வ விநாயகா், வள்ளி, தெய்வானை சமேத சிவ... மேலும் பார்க்க