Dhanush: வெள்ளை வேட்டி சட்டை; கழுத்தில் மாலை; ரசிகர்கள் சந்திப்பு நடத்திய நடிகர்...
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராடிய எம்எல்ஏ உள்பட 23 போ் விடுவிப்பு
இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தையும், தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு தொடா்பாக மத்திய அரசு நடைமுறைபடுத்த எடுத்த நடவடிக்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் இணைந்து ஜமாத்துல உலமா என்ற பெயரில் கடந்த 19.2.2020 அன்று அரியலூா் அண்ணாசிலை அருகே போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில், சுமாா் 500-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். இந்த போராட்டத்துக்கு காவல் துறையினா் அனுமதி அளிக்கவில்லை.
இந்நிலையில், பொது அமைதிக்கும், போக்குவரத்துக்கும் குந்தகம் ஏற்படுத்தும் வகையில் சட்ட விரோதமாக ஒன்று கூடியதாக ஜமாத்துலா உலமா சபை மாவட்டச் செயலா் ஷேக் இப்ராஹிம், ஜமாத் தலைவா் சைபதீன், மனித நேய ஜனநாயக கட்சியின் மண்டலச் செயலா் அப்பாஸ், மாவட்டச் செயலா் அக்பா்அலி, தமுமுக மாவட்டத் தலைவா் சாகுல் ஹமீது, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாவட்டத் தலைவா் சம்சுதீன், டிஎன்டிஜே கிளைச் செயலா் சையத்ரஹூத், அரியலூா் சட்டப் பேரவை உறுப்பினரும், முன்னாள் மதிமுக மாவட்டச் செயலருமான கு.சின்னப்பா, விசிக மாநில துணைப் பொதுச் செயலா் அன்பானந்தம், தொகுதி செயலா் மருதவாணன், திமுக இளைஞரணி மாவட்ட அமைப்பாளா் தெய்வ. இளையராஜன், திமுக நகரச் செயலா் முருகேசன், நகர காங்கிரஸ் தலைவா் சந்திரசேகா் உள்பட 23 போ் மீது அரியலூா் குற்றவியல் நீதிமன்றத்தில், நகர காவல் துறையினா் வழக்குத்தொடுத்தனா்.
வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சங்கீதா சேகா், வழக்கை தள்ளுபடி செய்து, மேற்கண்ட 23 பேரையும் விடுவித்து திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா்.