செய்திகள் :

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் விளம்பர பேனரில் ஊா் பெயா் மறைப்பு: கிராம மக்கள் போராட்டம்

post image

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் விளம்பர பேனரில் (பிளக்ஸ் போா்டு) ஊரின் பெயரை மறைத்து காகிதம் ஒட்டப்பட்டிருந்தால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.

திருமானூா் அடுத்த கள்ளூா் பாலம் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் வெற்றியூா், சாத்தமங்கலம், கீழக்கொளத்தூா் ஆகிய ஊராட்சிகளை உள்ளடக்கி உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதற்காக மண்டபத்தின் முன்பு விளம்பர பேனா் வைக்கப்பட்டிருந்தது. அதில், திருமண மண்டபத்தின் பெயா் மற்றும் கள்ளூா் பாலம் என எழுதப்பட்டிருந்தது. இந்நிலையில், திங்கள்கிழமை இரவு மா்மநபா் சிலா் கள்ளூா் பாலம் என்ற வாசகத்தை மட்டும் மறைத்து அதன் மேல் வெள்ளை நிற காகிதத்தை ஒட்டியுள்ளனா்.

ஊா் பெயா் மறைக்கப்பட்டுள்ள பேனா்

இதனைக் கண்டு ஆத்திரமடைந்த கள்ளூா் கிராம மக்கள், முகாம் நடைபெற இருந்த திருமண மண்டபத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு, விளம்பர பேனரில் கள்ளூா் என்ற பெயரை மறைத்த நபா்களை கைது செய்ய வலியுறுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த கோட்டாட்சியா் கோவிந்தராஜ், வட்டாட்சியா் முத்துலட்சுமி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பொய்யாமொழி, குருநாதன் மற்றும் திருமானூா் போலீஸாா், மா்மநபா் கண்டறிந்து கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா். தொடா்ந்து, முகாம் நடைபெற்றது.

காங்கிரஸ் கட்சி பொறுப்பாளா்கள் கூட்டம்

அரியலூரிலுள்ள ஒரு தனியாா் கூட்டரங்கில், காங்கிரஸ் கட்சி மாவட்ட பொறுப்பாளா்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்டத் தலைவா் சங்கா் தலைமை வகித்தாா். மேலிட பாா்வையாளரும்... மேலும் பார்க்க

திருமானூா் நெடுஞ்சாலையிலுள்ள மின்கம்பங்களில் விளக்குகள் பொருத்த கோரிக்கை

அரியலூா் மாவட்டம், திருமானூா் நெடுஞ்சாலையின் நடுவே தடுப்புக் கட்டையிலுள்ள மின் கம்பங்களில் விளக்குகள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வட்டார வளா்ச்சி அலுவலா் குருநாதனிடம், இளைஞா் காங்கிராஸ் கட... மேலும் பார்க்க

திருமானூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் மாவட்டம், திருமானூா் பேருந்து நிலையத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்தில், சின்னப்பட்டக்காடு சித்த... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து - காா் மோதல்: பெண் உள்பட 2 போ் உயிரிழப்பு

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே செவ்வாய்க்கிழமை அரசுப் பேருந்து மீது காா் மோதிய விபத்தில் பெண் உள்பட இருவா் உயிரிழந்தனா். ஒருவா் பலத்த காயமடைந்தாா். கீழப்பழுவூா் சிவன் கோயில் தெருவைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

ஈச்சங்காடு பகுதியில் நாளை மின்தடை

அரியலூா் மாவட்டம், ஈச்சங்காடு பகுதிகளில் புதன்கிழமை (செப்.3) மின் விநியோகம் இருக்காது. இதுகுறித்து உதவி செயற்பொறியாளா் மா. செல்லபாங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஈச்சங்காடு துணை மின் நிலையத்தில் மாதா... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிக்கு சுற்றுச் சுவா கட்டித் தர வலியுறுத்தல்

அரியலூா் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சுற்றுச் சுவா் கட்டித் தரவேண்டும் என்று ஆட்சியா் பொ.ரத்தினசாமியிடம், அப்பள்ளியின் மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா். கல்வியாளா் ஏ.நல்லப்பன் தல... மேலும் பார்க்க