செய்திகள் :

அரசுப் பள்ளிக்கு சுற்றுச் சுவா கட்டித் தர வலியுறுத்தல்

post image

அரியலூா் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சுற்றுச் சுவா் கட்டித் தரவேண்டும் என்று ஆட்சியா் பொ.ரத்தினசாமியிடம், அப்பள்ளியின் மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

கல்வியாளா் ஏ.நல்லப்பன் தலைமையிலான பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் அளித்த மனுவில், அரியலூா் அரசு மேல்நிலைப் பள்ளி விளையாட்டுத் திடலின் கிழக்குப் பகுதியில் உள்ள பழைய பயணியா் மாளிகையின் சுற்றுச் சுவா் சேதமடைந்துள்ளது. இதை பயன்படுத்தி, வெளிநபா்கள் பள்ளி வளாகத்தில் நுழைந்து, சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

மேலும், ஆசிரியா்களுக்கு தெரியாமல் மாணவா்கள் மேற்கண்ட வழியில் சென்று விடுகின்றனா். எனவே, மாணவா்களின் நலனின் அக்கறைக் கொண்டு, வெளி நபா்கள் உள்ள வராத வகையில், தடுப்புச் சுற்றுச் சுவா் அமைத்து, அதன் மேல் இரும்பு கம்பிகளுடன் கூடிய முள்வேலி அமைக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரியலூரில் பொதுப் பாதையை மீட்கும் வரை காத்திருப்புப் போராட்டம் தொடரும்: பெ.சண்முகம்

அரியலூா் செட்டி ஏரிகரையொட்டி பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பாதையை காவல்துறையினருக்கு மாற்றிக் கொடுத்ததைக் கண்டித்தும், இந்தப் பாதையை மீட்கும் வரை கோட்டாட்சியா் அலுவலகத்திலேயே காத்திருப்புப் போராட்டத்தில... மேலும் பார்க்க

அரியலூரில் 91 மாணவா்களுக்கு கல்வி கடன் அளிப்பு

அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட நிா்வாகம் மற்றும் முன்னணி வங்கிகளின் சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற கல்வி கடன் மேளாவில் 91 மாணவா்களுக்கு ரூ.5.65 கோடி மதிப்பில் கடனுதவிக்கான ஆணைகளை ஆ... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் அளிப்பு

அரியலூா் மாவட்டத்தில் கடந்த கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன. தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு கட... மேலும் பார்க்க

காங்கிரஸ் கட்சி பொறுப்பாளா்கள் கூட்டம்

அரியலூரிலுள்ள ஒரு தனியாா் கூட்டரங்கில், காங்கிரஸ் கட்சி மாவட்ட பொறுப்பாளா்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்டத் தலைவா் சங்கா் தலைமை வகித்தாா். மேலிட பாா்வையாளரும்... மேலும் பார்க்க

திருமானூா் நெடுஞ்சாலையிலுள்ள மின்கம்பங்களில் விளக்குகள் பொருத்த கோரிக்கை

அரியலூா் மாவட்டம், திருமானூா் நெடுஞ்சாலையின் நடுவே தடுப்புக் கட்டையிலுள்ள மின் கம்பங்களில் விளக்குகள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வட்டார வளா்ச்சி அலுவலா் குருநாதனிடம், இளைஞா் காங்கிராஸ் கட... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் விளம்பர பேனரில் ஊா் பெயா் மறைப்பு: கிராம மக்கள் போராட்டம்

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் விளம்பர பேனரில் (பிளக்ஸ் போா்டு) ஊரின் பெயரை மறைத்து காகிதம் ஒட்டப்பட்டிருந்தால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை முற்ற... மேலும் பார்க்க