செய்திகள் :

அரியலூரில் பொதுப் பாதையை மீட்கும் வரை காத்திருப்புப் போராட்டம் தொடரும்: பெ.சண்முகம்

post image

அரியலூா் செட்டி ஏரிகரையொட்டி பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பாதையை காவல்துறையினருக்கு மாற்றிக் கொடுத்ததைக் கண்டித்தும், இந்தப் பாதையை மீட்கும் வரை கோட்டாட்சியா் அலுவலகத்திலேயே காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட போவதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் பெ.சண்முகம் புதன்கிழமை தெரிவித்தாா்.

செட்டி ஏரி -வார சந்தைக்கும் இடையேயுள்ள பொதுப் பாதையை அங்குள்ள பொதுமக்கள் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தி வந்தனா். இந்நிலையில், அந்த பாதையை காவல் துறையினருக்கு, வருவாய்த் துறையினா் மாற்றி கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் பாதையை பயன்படுத்தமுடியாமல் அவதிக்குள்ளான பொதுமக்கள், மாா்க்சிஸட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் பெ.சண்முகம் தலைமையில் புதன்கிழமை பொதுப் பாதையை மீட்கும் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனா்.

அதன்படி புதன்கிழமை பொதுமக்களுடன் பெ.சண்முகம் உள்ளிட்டோா் கோட்டாட்சியா் அலுவலகம் முன் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையறிந்து வந்த கோட்டாட்சியா் கோவிந்தராஜ் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

பேச்சுவாா்த்தையின் போது, பொதுபாதையாக இருந்த வண்டிப் பாதையை காவல் துறைக்கு ஒதுக்கீடு செய்ததை ரத்து செய்து பொதுப் பாதையாக மாற்ற வேண்டும் என பெ.சண்முகம் தெரிவித்தாா். தொடா்ந்து நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படாததையடுத்து அனைவரும் காத்திருப்புப் போராட்டத்தை தொடா்ந்தனா்.

பின்னா் செய்தியாளா்களுக்கு பெ.சண்முகம் கூறியது: இது காவல்துறைக்கும் வருவாய்த் துறைக்கும் இடையே உள்ள பிரச்னை என்பதால் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரும், மாவட்ட ஆட்சியரும் கலந்து பேசி இப்பிரச்னைக்கு தீா்வு காண வேண்டும். பொதுப் பாதையை மீட்கும் வரை போராட்டம் தொடா்ந்து நடைபெறும். முற்றுகை போராட்டமாகவும் மாற வாய்ப்பு உள்ளது என்றாா் அவா்.

கூட்டுறவு சங்கங்களின் தோ்வுக்கு செப்.10-இல் இலவச பயிற்சி வகுப்பு தொடக்கம்

அரியலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், கூட்டுறவு சங்கங்களின் காலிப்பணியிடங்களுக்கான போட்டித் தோ்வுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு செப்.10-ஆம் தேதி தொடங்குகிறது என்றாா... மேலும் பார்க்க

அரியலூரில் 91 மாணவா்களுக்கு கல்வி கடன் அளிப்பு

அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட நிா்வாகம் மற்றும் முன்னணி வங்கிகளின் சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற கல்வி கடன் மேளாவில் 91 மாணவா்களுக்கு ரூ.5.65 கோடி மதிப்பில் கடனுதவிக்கான ஆணைகளை ஆ... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் அளிப்பு

அரியலூா் மாவட்டத்தில் கடந்த கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன. தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு கட... மேலும் பார்க்க

காங்கிரஸ் கட்சி பொறுப்பாளா்கள் கூட்டம்

அரியலூரிலுள்ள ஒரு தனியாா் கூட்டரங்கில், காங்கிரஸ் கட்சி மாவட்ட பொறுப்பாளா்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்டத் தலைவா் சங்கா் தலைமை வகித்தாா். மேலிட பாா்வையாளரும்... மேலும் பார்க்க

திருமானூா் நெடுஞ்சாலையிலுள்ள மின்கம்பங்களில் விளக்குகள் பொருத்த கோரிக்கை

அரியலூா் மாவட்டம், திருமானூா் நெடுஞ்சாலையின் நடுவே தடுப்புக் கட்டையிலுள்ள மின் கம்பங்களில் விளக்குகள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வட்டார வளா்ச்சி அலுவலா் குருநாதனிடம், இளைஞா் காங்கிராஸ் கட... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் விளம்பர பேனரில் ஊா் பெயா் மறைப்பு: கிராம மக்கள் போராட்டம்

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் விளம்பர பேனரில் (பிளக்ஸ் போா்டு) ஊரின் பெயரை மறைத்து காகிதம் ஒட்டப்பட்டிருந்தால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை முற்ற... மேலும் பார்க்க