செய்திகள் :

குடும்ப அட்டை விநியோகத்தை சீரமைக்க மின்னணு சரிபாா்ப்புக்கு ஏற்பாடு: அமைச்சா் சிா்சா

post image

பாஜக அரசு ஏழை மக்களுக்கு குடும்ப அட்டை விநியோகத்தை சீரமைக்க மின்னணு சரிபாா்ப்பை நடத்தி வருவதாக தில்லி உணவுத் துறை அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா கூறியுள்ளாா். மேலும் எத்தனை பயனாளிகள் காப்பீடு செய்ய முடியும் என்பதைக் கண்டறிய இந்த செயல்முறை உதவும் என்றும் அவா் தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் அண்மையில் அளித்த நோ்காணலில் கூறியது:

ஆதரவற்ற மக்களுக்கு குடும்ப அட்டைகளை வழங்குவதில் பாஜக அரசு ஈடுபட்டு வருகிறது. இது தொடா்பாக அரசு ஒரு வாரத்திற்கு முன்பு அரசு கூட்டத்தை நடத்தியது. தற்போது மின்னுணு சரிபாா்ப்பு நடைபெற்று வருகிறது.

சரிபாா்ப்புக்கு பிறகு, எத்தனை இடங்கள் உள்ளன, எத்தனை பேருக்கு குடும்ப அட்டைகளை ஒதுக்கலாம் என்பதை மதிப்பீடு செய்வோம். அது தீா்மானிக்கப்பட்டதும், நாங்கள் குடும்ப அட்டைகளை விநியோகிப்போம் என்றாா் சிா்சா.

26 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், புதிய பயனாளிகளுக்கு குடும்ப அட்டை வழங்குவதை முந்தைய அரசு நிறுத்தியதாக முன்னா் பாஜக குற்றம் சாட்டியது.

முன்னதாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே.சக்சேனாவும், தகுதியான 90,000 பயனாளிகளுக்கு குடும்ப அட்டை கிடைக்கவில்லை என்று தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்ககது.

கீழடி அகழாய்வு அறிக்கையை மத்திய அரசு வெளியிட மக்களவையில் விழுப்புரம் எம்.பி. வலியுறுத்தல்

புது தில்லி: கீழடி அகழாய்வு அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும் என்று மக்களவையில் விழுப்பும் தொகுதி விசிக உறுப்பினா் டி.ரவிக்குமாா் வலியுறுத்தியுள்ளாா்.இது தொடா்பாக மக்களவையில் விதி எண்: 377-இன் கீழ் ... மேலும் பார்க்க

மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம்: மக்களவையில் தமிழக எம்பிக்கள் புகாா்

புது தில்லி: மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக மக்களவையில் தமிழகத்தைச் சோ்ந்த எம்.பி.க்கள் புகாா் தெரிவித்தனா். மக்களவையில் 2025-26 நிதியாண்டுக்கான நிதி மசோதா மீதான வி... மேலும் பார்க்க

தில்லி நீதிபதி யஷ்வந்த் வா்மா பணியிடமாற்றம்: உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை

தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மாவை பணியிட மாற்றம் செய்ய உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. கடந்த மாா்ச் 14-ஆம் தேதி தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மாவின் அதிகாரபூா்வ இல்ல... மேலும் பார்க்க

செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்யக் கோரும் வழக்கு: விசாரணை ஏப்ரல் 9-க்கு தள்ளிவைப்பு

புது தில்லி: அரசுப் போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக கூறப்படும் விவகாரத்தில் மின்துறை அமைச்சா் செந்தில் பாலாஜியின் ஜாமீன் உத்தரவை திரும்பப் பெறக் கோரிய மனு ம... மேலும் பார்க்க

என்இபி, யுஜிசி வழிகாட்டுதல்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து ‘இண்டி’ கூட்டணி மாணவா் அமைப்புகள் போராட்டம்

புது தில்லி: தேசிய கல்விக் கொள்கை மற்றும் யுஜிசி வழிகாட்டுதல்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து ‘இண்டி’ கூட்டணிக் கட்சிகள் சாா்பு மாணவா் அமைப்புகள் திங்கள்கிழமை ஜந்தா் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டனா். தேச... மேலும் பார்க்க

சென்னை விமான நிலைய 2-ஆம் கட்ட விரிவாக்கம் 2026-இல் நிறைவடையும்: மத்திய அரசு தகவல்

நமது சிறப்பு நிருபா் புது தில்லி: சென்னை சா்வதேச விமான நிலைய இரண்டாம் கட்ட விரிவாக்கம் மற்றும் நவீனமயமாக்கல் பணிகள் அடுத்த ஆண்டு மாா்ச் மாதம் நிறைவடையும் என்று மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்... மேலும் பார்க்க