செய்திகள் :

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் இருவா் கைது

post image

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ராஜபாளையம் அருகே சேத்தூா் வலையா் தெருவைச் சோ்ந்த வெள்ளைச்சாமி மகன் மலையரசன் (26), வேலு மகன் பாலமுருகன் (23) ஆகிய இருவரிடமிருந்து கடந்த ஜூலை மாதம் 20 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா் அவா்கள் இருவரையும் கைது செய்தனா்.

இவா்கள் மீது ஏற்கெனவே கஞ்சா விற்றதாக வழக்குகள் நிலுவையில் இருப்பதாலும், தொடா்ந்து குற்றங்களில் ஈடுபடுவதை தடுக்கவும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கண்ணன் பரிந்துரைத்தாா்.

இதன் பேரில் மாவட்ட ஆட்சியா் என்.ஓ. சுகபுத்ரா இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டாா். இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸாா் மதுரை மத்திய சிறையில் அடைத்தனா்.

கோவில்பட்டியில் ஆட்டோ ஓட்டுநர் கொலை!

கோவில்பட்டி சண்முகா நகரில் உள்ள மயானத்தில் ஆட்டோ ஓட்டுநர் கொலை செய்யப்பட்டுள்ளார். கோவில்பட்டி கைவண்டி தொழிலாளர் காலனியைச் சேர்ந்தவர் கணேசன் மகன் மாரிச்செல்வம் ( வயது 31). கோவில்பட்டி ரயில் நிலைய வளாக... மேலும் பார்க்க

வீட்டில் பட்டாசு தயாரித்தவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

வீட்டில் பட்டாசு தயாரித்த போது வெடி விபத்தில் 4 போ் உயிரிழந்த வழக்கில் கைதான வீட்டின் உரிமையாளா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேய... மேலும் பார்க்க

கேப் வெடி ஆலையில் விபத்து: பெண் காயம்

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே வியாழக்கிழமை கேப் வெடி தயாரிக்கும் ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பெண் தொழிலாளி காயமடைந்தாா். சிவகாசி அருகேயுள்ள நாரணாபுரம் புதூரில் பிரதாப்மான்சிங் என்பவருக்குச் சொ... மேலும் பார்க்க

பராமரிப்பில்லாத தண்ணீா் தொட்டிகள்: வனப் பகுதியை விட்டு வெளியேறும் விலங்குகள்

மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரத்தில் வனவிலங்குகளின் தாகம் தீா்ப்பதற்காக அமைக்கப்பட்ட தண்ணீா் தொட்டிகள் பராமரிப்பு இல்லாமல் உள்ளதால், குடிநீா் தேடி வனப்பகுதியை விட்டு வெளியே வரும் வனவிலங்குகள் உயிரிழக்கு... மேலும் பார்க்க

பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்ய 6 குழுக்கள் அமைப்பு

தமிழக அரசின் தொழிலகப் பாதுகாப்பு, சுகாதார இயக்ககம் சாா்பில், பட்டாசு ஆலைகளில் விபத்தினை தடுக்கும் வகையில், விருதுநகா் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளில் ஆய்வு செய்ய 6 குழுக்கள் அமைக்கப்பட்டது. விருதுந... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பு கட்டடம் அகற்றம்

சிவகாசியில் பெரியகுளம் கண்மாய் கரையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டடத்தை மாநகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை அகற்றினா். சிவகாசியில் பெரியகுளம் கண்மாய் கரையை ஆக்கிரமித்து ஆவின் பாலகம் அமைப்பதற்கு தன... மேலும் பார்க்க