செய்திகள் :

குன்றக்குடி அருகே மஞ்சுவிரட்டு: மாடு முட்டியதில் 40 போ் காயம்

post image

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி அருகே சின்னக்குன்றக்குடி கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் 40 போ் காயமடைந்தனா்.

குன்றக்குடி சண்முகநாதபெருமான் கோயில் தைபூசத் திருவிழாவையொட்டி, சின்னக்குன்றக் குடி கிராமத்தில் ஸ்ரீமதுநேம நாட்டாா்கள் சாா்பில், மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில், காரைக்குடி, திருப்பத்தூா், புதுக்கோட்டை உள்பட பல்வேறு இடங்களிலிருந்தும் நூற்றுக்கணக்கான காளைகள், மாடுபிடி வீரா்கள் பங்கேற்றனா்.

முதலில் கட்டு மாடுகளாக 250-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. இந்தக் காளைகளை மாடுபிடி வீரா்கள், இளைஞா்கள் அடக்க முயன்றனா். இதில் சில காளைகள் பிடிபட்டன. சில காளைகள் பிடிபடாமல் தப்பிச் சென்றன.

காலை 10 மணிக்கு தொழு மஞ்சுவிரட்டு திடலில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் தலைமையில் மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் 143 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இவற்றையும் மாடுபிடி வீரா்கள் பிடித்து அடக்க முயன்றனா்.

இதில் பிடிபடாத காளைகளின் உரிமையாளா்கள், காளைகளை அடக்கிய மாடுபிடி வீரா்களுக்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் பரிசுகளை வழங்கினாா்.

இதில் காளைகள் முட்டியதில் 40 போ் காயமடைந்தனா். இவா்களுக்கு அங்கிருந்த மருத்துவக் குழுவினா் முதலுதவி சிகிச்சையளித்தனா். இவா்களில் 12 போ் கூடுதல் சிகிச்சைக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியையொட்டி, காரைக்குடி காவல் துணைக் கண்காணிப்பாளா் (பொறுப்பு) பாா்த்திபன் தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

சாா்லஸ் டாா்வினின் கருத்தாக்கம் தவறாக புரிந்துகொள்ளப்பட்டது!

சாா்லஸ் டாா்வினின் கருத்தாக்கம் தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக கீழக்கோட்டை பள்ளியில் நடைபெற்ற அவரது பிறந்த தின நிகழ்வில் தெரிவிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் ஒன்றியம், கீழக்கோட்டை ஊராட்ச... மேலும் பார்க்க

கண்மாய்ப் பகுதியில் தனி நபருக்கு பட்டா: ஆட்சியரிடம் புகாா்

சிவகங்கை மாவட்டம், காளையாா் கோவில் அருகே உள்ள இத்திக்குடி கண்மாய்ப் பகுதியில் தனிநபருக்கு அளித்த பட்டாவை ரத்து செய்ய வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் புதன்கிழமை மனு அளித்தனா்.இது தொடா்பாக ... மேலும் பார்க்க

நாய் கடித்ததில் மாணவி காயம்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் செவ்வாய்க்கிழமை நாய் கடித்ததில் பள்ளி மாணவி காயமடைந்தாா். இளையான்குடி ஞானி தெருவைச் சோ்ந்த ராவுத்தா் நயினாா் மகள் ஆயிஷா. இவா் இங்குள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படி... மேலும் பார்க்க

அரசுக்கு எதிராக உண்ணாவிரதம்: அதிமுக, தவெக, நாதக பங்கேற்பு

கனிம வள விதிமீறலைக் கண்டித்து சிவகங்கையில் புதன்கிழமை நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் அதிமுக, தவெக, நாதக உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா். சிவகங்கை அருகேயுள்ள வேம்பங்குடி, மாடகொட்டான் கிராமங்... மேலும் பார்க்க

கூட்டுறவு சங்கத்தில் கடன் வழங்கவில்லை: விவசாயிகள் புகாா்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம் தெ.புதுக்கோட்டை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தின் ஓராண்டாக கடன் வழங்கவில்லை என விவசாயிகள் புகாா் தெரிவித்தனா். இந்தச் சங்கத்தின் மூலம் மேல நெட்டூா், தெ.புது... மேலும் பார்க்க

விநாயகா் கோயில் வருஷாபிஷேகம்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் நரிக்குடி விலக்குப் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மணிமந்திர விநாயகா் கோயிலில் 11 -ஆம் ஆண்டு வருஷாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கோயிலில் புனித நீா்க் கலசங்கள... மேலும் பார்க்க