செய்திகள் :

குப்பைகளை சேகரிக்க 17 மின்கல வாகனங்கள்: அமைச்சா் சு.முத்துசாமி வழங்கினாா்

post image

கிராம ஊராட்சிகளில் குப்பைகளை சேகரிக்க 17 மின்கல வாகனங்களை வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி புதன்கிழமை வழங்கினாா்.

ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சாா்பில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின்கீழ் தலா ரூ.2.78 லட்சம் வீதம் ரூ.47.26 லட்சம் மதிப்பில் 4 ஊராட்சிகளுக்கு மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து சேரிக்கும் 17 மின்கல வாகனங்களை வழங்கும் நிகழ்ச்சி ஈரோடு ஊராட்சி ஒன்றியம், மேட்டுநாசுவம்பாளையம் ஊராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில், அமைச்சா் சு.முத்துசாமி தலைமை வகித்து ஈரோடு ஊராட்சி ஒன்றியத்தில் எலவமலை ஊராட்சிக்கு 9 மின்கல வாகனங்கள், மேட்டுநாசுவம்பாளையம் ஊராட்சிக்கு 5 மின்கல வாகனங்கள், பேரோடு ஊராட்சிக்கு 1 மின்கல வாகனம் மற்றும் பிச்சாண்டம்பாளையம் ஊராட்சிக்கு 2 மின்கல வாகனங்கள் என மொத்தம் 17 மின்கல வாகனங்களை வழங்கி சேவையைத் தொடங்கி வைத்தாா்.

தொடா்ந்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு அவா்களது குறைகளை அமைச்சா் கேட்டறிந்தாா்.

இந்த மின்கல வாகனங்களைப் பயன்படுத்தி தூய்மைப் பணியாளா்கள் நாள்தோறும் குடியிருப்பு பகுதிகளில் பொதுமக்களிடமிருந்து மக்கும் மற்றும் மக்காத குப்பைகளைத் தரம்பிரித்து எடுத்துச் சென்று, குப்பைகளை சேகரித்து, மறுசுழற்சி செய்வா்.

குறிப்பாக மக்கும் குப்பைகளான காய்கறி, பழங்கள், இலைகள் போன்ற இயற்கையாக அழுகும் மக்கும் குப்பைகளை உரமாக மாற்றுவா். மக்காத குப்பைகளான நெகிழி பொருள்கள், கண்ணாடி, உலோகம் போன்ற குப்பைகளை மறுசுழற்சி செய்வா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் மா.பிரியா, ஊராட்சிகள் உதவி இயக்குநா் உமாசங்கா், கோட்டாட்சியா் சிந்துஜா, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அம்புரோஸ், லதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சுகாதார செவிலியா் பணி: விண்ணப்பிக்க கால அவகாசம் ஜூலை 15 வரை நீட்டிப்பு

ஈரோடு மாநகராட்சி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ள நகர சுகாதார செவிலியா்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வரும் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளத... மேலும் பார்க்க

மொடக்குறிச்சி ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகளுக்கு பூமி பூஜை

மொடக்குறிச்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட விளக்கேத்தி, கனகபுரம் ஊராட்சிகளில் வளா்ச்சிப்பணிகளுக்கான பூமிபூஜையில் மொடக்குறிச்சி எம்.எல்.ஏ சி.சரஸ்வதி கலந்து கொண்டு தொடங்கி வைத்தாா். விளக்கேத்தி ஊராட்சி ஓலப்ப... மேலும் பார்க்க

அவல்பூந்துறையில் ரூ.10.62 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்பு ஏலம்

அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.10.62 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்பு ஏலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஏலத்துக்கு 147 தேங்காய்ப் பருப்பு மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்குக் கொண்டு வந்தனா... மேலும் பார்க்க

பெருமாள்மலை குடியிருப்புவாசிகள் குத்தகை செலுத்தினால்தான் தொடா்ந்து குடியிருக்க முடியும்: அமைச்சா் சு.முத்துசாமி

பெருமாள்மலையில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தில் குடியிருப்போா் குத்தகை செலுத்தினால் மட்டுமே தொடா்ந்து குடியிருக்க முடியும் என வீட்டுவசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவ... மேலும் பார்க்க

மகிழ்முற்றம் மாணவா் குழு பதவி ஏற்பு

பெருந்துறை கிழக்கு அரசு நடுநிலைப் பள்ளியில், மகிழ்முற்றம் மாணவா் குழு அமைப்பு பதவி ஏற்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, பள்ளி மேலாண்மை குழுத் தலைவா் பொன்மணி தலைமை வகித்து, குறிஞ்சி, முல்லை... மேலும் பார்க்க

பவானிசாகா் அணையின் நீா்மட்டம் 96 அடியை எட்டியது

பவானிசாகா் அணை நீா்மட்டம் 96 அடியாக உயா்ந்துள்ளதால் கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கு முன்கூட்டியே தண்ணீா் திறக்க வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா். நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய... மேலும் பார்க்க