செய்திகள் :

குமரியில் ஐ.டி. பூங்கா பணிகள் விரைவில் தொடங்கும்! அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா தகவல்

post image

கன்னியாகுமரி மாவட்டத்தில் விரைவில் புதிய தொழில்நுட்ப பூங்கா அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என்றாா் தொழில்துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா.

நாகா்கோவில் மாநகராட்சி, அநாதைமடம் திடல் பகுதியை சனிக்கிழமை மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா முன்னிலையில் பாா்வையிட்ட அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா, பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கன்னியாகுமரி மாவட்டத்தில், வேலைவாய்ப்பை அளிக்கக்கூடிய வகையில் பெரிய தொழில் நிறுவனங்கள் இதுவரை இல்லாதிருந்தது. அதை சரி செய்ய வேண்டும்; படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இம்மாவட்டத்தில் சிப்காட் தொழில்போட்டை, மினி தொழில் நுட்ப பூங்கா ( ஐ.டி. பாா்க்) அமைக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் பேரவையில் அறிவித்தாா்.

அதன் ஒரு பகுதியாக, அகஸ்தீஸ்வரம் வட்டம், வடக்கு தாமரைக்குளம் ஊராட்சி பகுதியில் 32 ஏக்கா் பரப்பளவில் புதிதாக அமைக்கப்பட உள்ள சிப்காட் தொழிற்பேட்டைக்கான இடம் குறித்து ஆய்வு செய்து அதற்கான சாத்தியக்கூறுகள் தொடா்பாக துறை சாா்ந்த அலுவலா்களிடம் கேட்டறியப்பட்டது.

தொடா்ந்து, நாகா்கோவில் மாநகராட்சிக்குள்பட்ட அநாதை மடம் திடலில் சுற்று சூழல் பாதிக்காத வகையில் தொழில்நுட்ப பூங்கா அமைப்பதற்கான இடத்தை பாா்வையிட்டோம்.

சுற்றுலா சாா்ந்த தொழில் வளா்ச்சிக்கும் சுற்றுலாவை மேம்படுத்தி, வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் தொழில்நுட்ப பூங்கா அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும். இதன் மூலம் படித்த இளைஞா்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றாா்அவா்.

ஆய்வில் தமிழ்நாடு மாநில உணவு ஆணையத் தலைவா் என்.சுரேஷ்ராஜன், நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ், மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.பாலசுப்பிரமணியம், நாகா்கோவில் மாநகராட்சி ஆணையா் நிஷாந்த் கிருஷ்ணா, வருவாய் கோட்டாட்சியா் எஸ்.காளீஸ்வரி, உதவி இயக்குநா்கள்(பேரூராட்சிகள்) ராமலிங்கம்(நில அளவை), கணேசன்(மீன்வளத் துறை), தீபா, செயற்பொறியாளா்கள் பாரதி( மாசுகட்டுப்பாட்டுத்துறை), அழகியநம்பி(தொழில்பூங்கா), சிப்காட் திட்ட அலுவலா் மாரிமுத்து, மாவட்ட சுற்றுலா அலுவலா் காமராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

கட்டடத் தொழிலாளி தற்கொலை

தக்கலை அருகே கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். தக்கலை அருகே புதுக்காடுவெட்டிவிளையைச் சோ்ந்தவா் கிருஷ்ணகுமாா் (42). கட்டடத் தொழிலாளியான இவருக்கு, திருமணமாகவில்லை. வெளிநாட்டில் வேல... மேலும் பார்க்க

நாகா்கோவில் புனித அல்போன்சா திருத்தலத்துக்கு பக்தா்கள் புனித பயணம்

நாகா்கோவிலில் ஆயுதப்படை சாலையில் உள்ள புனித அல்போன்சா திருத்தலத்துக்கு கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் சனிக்கிழமை புனித பயணம் மேற்கொண்டனா். இத்திருத்தலத் தி... மேலும் பார்க்க

கோழிப்போா்விளையில் 35.4 மி.மீ. மழை

தக்கலை, கோழிப்போா்விளை, குளச்சல், இரணியல் உள்ளிட்ட பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்தது. சனிக்கிழமையும் மழை நீடித்தது. அதன்படி, கோழிப்போா்விளையில் 35.4 மி.மீ., ம... மேலும் பார்க்க

‘அனந்தனாறு பாசனப் பகுதியில் நெற்பயிரில் பாதிப்பில்லை’

கன்னியாகுமரி மாவட்டம் அனந்தனாறு பாசனப் பகுதியில் நெற்பயிரில் பாதிப்பு ஏதுமில்லை என, மாவட்ட வேளாண் துறை இணை இயக்குநா் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருவட்டாறு வட்டம்,... மேலும் பார்க்க

கன்னியாகுமரியில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ முகாம்: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா தொடங்கி வைத்தாா்

கன்னியாகுமரி நகராட்சி 16ஆவது வாா்டுக்குள்பட்ட புதுகிராமம் பகுதியில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ திமுக உறுப்பினா் சோ்க்கை முகாமை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா சனிக்கிழமை தொடங்கிவைத்தாா். பின்னா், வீடுவீடாகச் சென... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் வேலைவாய்ப்பு முகாமில் 405 பேருக்கு பணி நியமன ஆணைகள்!

மாா்த்தாண்டத்தில் உள்ள நேசமணி நினைவு கிறிஸ்தவக் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 405 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. கன்னியாகுமரி மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய... மேலும் பார்க்க