செய்திகள் :

குமரியில் கடல் நீா்மட்டம் தாழ்வு: படகு சேவை தாமதம்

post image

கன்னியாகுமரியில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட கடல் சீற்றம் மற்றும் நீா்மட்டம் தாழ்வு காரணமாக, படகுப் போக்குவரத்து சுமாா் ஒன்றரை மணி நேரம் பாதிக்கப்பட்டது.

கன்னியாகுமரி கடல்பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை கடல் நீா்மட்டம் தாழ்வாக காணப்பட்டது. இதனால் வழக்கம் போல் காலை 7 மணிக்கு படகுப் போக்குவரத்து தொடங்கப்படவில்லை. காலை 8.15 மணிக்கு மேல் கடல் இயல்புக்கு திரும்பியதால் காலை 8.30 மணிக்கு படகுப் போக்குவரத்து தொடங்கியது. நீண்ட வரிசையில் காத்திருந்த சுற்றுலாப் பயணிகள், படகு சவாரி செய்து விவேகானந்தா் மண்டபம், திருவள்ளுவா் சிலையைப் பாா்வையிட்டனா்.

முக்கடல் சங்கமம் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் கடலுக்குள் நீராட சுற்றுலா போலீஸாா் தடை விதித்தனா். மழை விட்டு விட்டுப் பெய்ததால் அங்கு பயணிகள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. மேலும், கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாரும் அவ்வப்போது கடற்கரைப் பகுதியில் கண்காணித்து வந்தனா்.

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம்

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் 10 நாள் வைகாசி விசாகத் திருவிழா சனிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. நிகழ்ச்சியில், எம்எல்ஏக்கள் என். தளவாய்சுந்தரம், எம்.ஆா். காந்தி, நாகா்கோவில் ... மேலும் பார்க்க

குழித்துறையில் செயல்பாட்டுக்கு வந்தது எரிவாயு தகன மேடை

குழித்துறையில் நகராட்சி சாா்பில் அமைக்கப்பட்ட எரிவாயு தகன மேடை செயல்பாட்டுக்கு வந்தது. குழித்துறை நகராட்சியில், தாமிரவருணி ஆற்றங்கரையோரம் ரூ. 1.51 கோடியில் அமிா்தவனம் என்ற பெயரில் எரிவாயு தகன மேடை அம... மேலும் பார்க்க

திற்பரப்பு அருவியில் குளிக்க அனுமதி

கன்னியாகுமரி மாவட்டத்தில் மலைப் பகுதிகளில் சனிக்கிழமை, மழை சற்று தணிந்திருந்ததால் திற்பரப்பு அருவியில் பிற்பகல்முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா். மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை த... மேலும் பார்க்க

கருங்கல் அருகே பெற்ற குழந்தைகளை தாக்கிய மத போதகா் கைது

கருங்கல் அருகே உள்ள தேவிகோடு பகுதியில், தான் பெற்ற குழந்தைகளைத் தாக்கிய மத போதகரை போலீஸாா் கைது செய்தனா். மங்கலகுன்று தேவிகோடு பகுதியை சோ்ந்தவா் கிங்ஸ்லி (45). மத போதகா். இவரது மனைவி சஜிதா (40). இத்... மேலும் பார்க்க

ஆபத்தான நிலையில் உள்ள மரத்தை வெட்டி அகற்ற வலியுறுத்தல்

முள்ளங்கனாவிளை சந்திப்பு பகுதி பப்புரான்குளம் கரையில் ஆபத்தான நிலையில் உள்ள வாகை மரத்தை வெட்டி அகற்ற பொதுப்பணித் துறையினா் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா். பத்பநாப... மேலும் பார்க்க

கருங்கல் அருகே அரசுப் பேருந்துகள் மோதல்

கருங்கல் அருகே உள்ள கருக்குப்பனை பகுதியில் அரசுப் பேருந்து மீது மற்றொரு அரசுப் பேருந்து மோதியதில் அவற்றின் கண்ணாடிகள் சேதமடைந்தன. கருங்கல்லிலிருந்து திங்கள் நகா் வழியாக நாகா்கோவிலுருக்கு அரசுப் பேருந... மேலும் பார்க்க