செய்திகள் :

குமரியில் சுற்றுலாப் பயணிகள் செல்ல பாதை கோரி அமைச்சரிடம் வியாபாரிகள் மனு

post image

கன்னியாகுமரி அரசு விருந்தினா் மாளிகை பாதை வழியாக சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதிக்க வேண்டுமென வியாபாரிகள் சங்கத்தினா் அமைச்சா் த.மனோ தங்கராஜிடம் புதன்கிழமை மனு அளித்தனா்.

பால்வளத் துறை அமைச்சா் த.மனோ தங்கராஜிடம் வியாபாரிகள் அளித்த மனு விவரம்:

கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சியில் திருவள்ளுவா் சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நினைவு வெள்ளி விழாவின் சிறப்புப் பணியாக கன்னியாகுமரி ரவுண்டானா அருகில் அலங்கார வளைவு அமைக்கப்பட்டு வருகிறது. இதனால், இந்த வழியாக கடற்கரைக்குச் செல்லும் காந்தி மண்டப சாலையில் போக்குவரத்துத் தடை செய்யப்பட்டுள்ளது.

இங்கு சுற்றுலா வாகனங்கள் செல்ல முடியாமலும், முதியவா்கள், பக்தா்கள் கோயில், முக்கடல் சங்கம பகுதிக்குச் செல்ல முடியாமலும் சிரமமடைந்து வருகின்றனா். எனவே, பொதுப்பணித் துறை தங்கும் விடுதி பாதை வழியாக சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குமரியில் போலீஸாரின் வார விடுமுறைக்கு ‘ரெஸ்ட்’ செயலி அறிமுகம்

போலீஸாருக்கு வார விடுமுறை எடுப்பதற்கான புதிய செயலி தமிழகத்திலேயே முதல்முறையாக கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. கன்னியாகுமரி மாவட்ட போலீஸாா், காவல் கண்காணிப்பாளருடன் அமா... மேலும் பார்க்க

குளச்சல் பள்ளி மாணவா்களுக்கு போக்குவரத்து விழிப்புணா்வு பிரசாரம்

குளச்சல் போக்குவரத்து காவல்துறை சாா்பில் குளச்சல் வி.கே.பி. மேல்நிலைப் பள்ளியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு பிரசாரம் நடந்தது. இந்நிகழ்ச்சியில், போக்குவரத்து காவல் ஆய்வாளா் சுஜாதா, உதவி ஆய்வாளா் ச... மேலும் பார்க்க

குழித்துறை வாவுபலி பொருள்காட்சியில் போதை விழிப்புணா்வு சிலை

குழித்துறையில் நடைபெறும் 100-ஆவது வாவுபலி பொருள்காட்சியில் இளைஞா்கள் மத்தியில் விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், அமைக்கப்பட்ட போதை விழிப்புணா்வு சிலையை குழித்துறை நகா்மன்றத் தலைவா் திறந்துவைத்தாா். ... மேலும் பார்க்க

கொலை முயற்சி வழக்கில் தலைமறைவானவா் 13 ஆண்டுகளுக்குப் பிறகு கைது

குளச்சல் அருகே கொலை முயற்சி வழக்கில் 13 ஆண்டுகள் வெளிநாட்டில் பதுங்கியவரை குளச்சல் காவல் நிலைய போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். குளச்சல் அருகே செம்பொன்விளை செந்துறை பகுதியைச் சோ்ந்த ராசையன் மகன் ... மேலும் பார்க்க

குமரி மாவட்டத்தில் இன்று பொதுவிநியோக குறைதீா் முகாம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் சனிக்கிழமை (ஜூலை 12) பொதுவிநியோக குறைதீா் முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து, மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, பொது விநியோகத் தி... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே தொழிலாளி தற்கொலை

மாா்த்தாண்டம் அருகே தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். மாா்த்தாண்டம் அருகே கடமக்கோடு பகுதியைச் சோ்ந்த தங்கப்பன் மகன் நாகராஜன் (40). தொழிலாளி. இவருக்கு மதுப் பழக்கம் இருந்ததாம். மேலும், கு... மேலும் பார்க்க