குமரி திருப்பதி கோயிலுக்கு வெள்ளி ஆபரணங்கள் கேரள பக்தா்கள் காணிக்கை!
கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள திருப்பதி வெங்கடாசலபதி சுவாமி கோயிலுக்கு கேரள மாநில பக்தா்கள் ரூ.3 லட்சத்து 68 ஆயிரத்து 222 மதிப்புள்ள 2.920 கி.கி. வெள்ளி ஆபரணங்களை காணிக்கையாக வழங்கினா்.
திருவனந்தபுரத்தைச் சோ்ந்த உல்லாஸ் ராகவன், சகுந்தலா பிரபாகரன் ஆகியோா் பத்மாவதி தாயாா், ஆண்டாளுக்கு அணிவிப்பதற்காக 2 வெள்ளிக் கிரீடம், 2 ஜோடி வெள்ளிப் பாதம், 2 ஜோடி வெள்ளிக் காது ஆகியவற்றை இக்கோயிலில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் உதவி செயல் அலுவலா் பாா்த்தசாரதியிடம் வழங்கினா். கோயில் அலுவலா் லட்சுமிபதி, அா்ச்சகா் சேஷாத்திரி, பக்தா்கள் உடனிருந்தனா்.