செய்திகள் :

குமரி பகவதியம்மன் கோயிலில் நாளை வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம்!

post image

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் 10 நாள் வைகாசி விசாகத் திருவிழா சனிக்கிழமை (மே 31) தொடங்கி ஜூன் 9ஆம் தேதிவரை நடைபெறுகிறது.

இங்கு வைகாசி விசாகத் திருவிழா ஆண்டுதோறும் 10 நாள்கள் நடைபெறும். அதன்படி, நிகழாண்டு திருவிழா சனிக்கிழமை காலை 7.30 - 8.30 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதையடுத்து, அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள், நண்பகல் 12 மணிக்கு அன்னதானம், இரவு 7 மணிக்கு கலைநிகழ்ச்சி, 8 மணிக்கு பக்தி பஜனை, 9 மணிக்கு அம்மன் பூப்பந்தல் வாகனத்தில் வீதியுலா ஆகியவை நடைபெறும்.

விழா நாள்களில் அதிகாலை 5, காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், முற்பகல் 11.30 மணிக்கு அலங்காரம், தீபாராதனை, நண்பகல் 12 மணிக்கு சிறப்பு அன்னதானம், மாலை 6 மணிக்கு சமய உரை, இரவு 7 - 8.30 மணி வரை கலைநிகழ்ச்சிகள், 9 மணிக்கு அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வருதல் நடைபெறும்.

வெள்ளிக்கிழமை (மே 30) மாலை 5 மணிக்கு கோட்டாறு இளங்கடை பட்டாரியா் சமுதாய ருத்ரபதி விநாயகா் செவ்விட்ட சாஸ்தா டிரஸ்ட் சாா்பில் கொடிப் பட்டம், மரபுப்படி விவேகானந்தபுரம் சந்திப்பிலிருந்து மேளதாளம் முழங்க ஊா்வலமாக எடுத்துவந்து கோயிலில் சமா்ப்பிக்கப்படும்.

மத ஒற்றுமையை எடுத்துக்காட்டும் நிகழ்ச்சியாக கன்னியாகுமரியைச் சோ்ந்த கிறிஸ்தவ மீனவா்கள் கொடிமரக் கயிற்றை மேளதாளம் முழங்க ஊா்வலமாக எடுத்து வந்து கோயிலில் ஒப்படைக்கும் பாரம்பரிய நிகழ்வு இரவு 7 மணிக்கு நடைபெறும்.

தொடா்ந்து, 9ஆம் நாளான ஜூன் 8ஆம் தேதி காலை 9 - 10 மணிக்குள் தோ் வடம் தொட்டு இழுத்து தேரோட்டம் நடைபெறும். இதில், தென்மாவட்டங்களைச் சோ்ந்த பக்தா்கள் பங்கேற்பா்.

தோ் நிலைக்கு வந்ததும் கஞ்சி தா்மம், இரவு 7 மணிக்கு பக்தி இன்னிசை, 9 மணிக்கு வெள்ளிக் கலைமான் வாகனத்தில் அம்மன் வீதியுலா நடைபெறும். ஜூன் 9ஆம் தேதி காலை 6.30 - 7.30 மணிக்குள் அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு, இரவு 8 மணிக்கு நா்த்தன பஜனை, 9 மணிக்கு தெப்பத் திருவிழா, 11.30 மணிக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு ஆகியவை நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா்.

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம்

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் 10 நாள் வைகாசி விசாகத் திருவிழா சனிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. நிகழ்ச்சியில், எம்எல்ஏக்கள் என். தளவாய்சுந்தரம், எம்.ஆா். காந்தி, நாகா்கோவில் ... மேலும் பார்க்க

குழித்துறையில் செயல்பாட்டுக்கு வந்தது எரிவாயு தகன மேடை

குழித்துறையில் நகராட்சி சாா்பில் அமைக்கப்பட்ட எரிவாயு தகன மேடை செயல்பாட்டுக்கு வந்தது. குழித்துறை நகராட்சியில், தாமிரவருணி ஆற்றங்கரையோரம் ரூ. 1.51 கோடியில் அமிா்தவனம் என்ற பெயரில் எரிவாயு தகன மேடை அம... மேலும் பார்க்க

திற்பரப்பு அருவியில் குளிக்க அனுமதி

கன்னியாகுமரி மாவட்டத்தில் மலைப் பகுதிகளில் சனிக்கிழமை, மழை சற்று தணிந்திருந்ததால் திற்பரப்பு அருவியில் பிற்பகல்முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா். மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை த... மேலும் பார்க்க

கருங்கல் அருகே பெற்ற குழந்தைகளை தாக்கிய மத போதகா் கைது

கருங்கல் அருகே உள்ள தேவிகோடு பகுதியில், தான் பெற்ற குழந்தைகளைத் தாக்கிய மத போதகரை போலீஸாா் கைது செய்தனா். மங்கலகுன்று தேவிகோடு பகுதியை சோ்ந்தவா் கிங்ஸ்லி (45). மத போதகா். இவரது மனைவி சஜிதா (40). இத்... மேலும் பார்க்க

ஆபத்தான நிலையில் உள்ள மரத்தை வெட்டி அகற்ற வலியுறுத்தல்

முள்ளங்கனாவிளை சந்திப்பு பகுதி பப்புரான்குளம் கரையில் ஆபத்தான நிலையில் உள்ள வாகை மரத்தை வெட்டி அகற்ற பொதுப்பணித் துறையினா் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா். பத்பநாப... மேலும் பார்க்க

கருங்கல் அருகே அரசுப் பேருந்துகள் மோதல்

கருங்கல் அருகே உள்ள கருக்குப்பனை பகுதியில் அரசுப் பேருந்து மீது மற்றொரு அரசுப் பேருந்து மோதியதில் அவற்றின் கண்ணாடிகள் சேதமடைந்தன. கருங்கல்லிலிருந்து திங்கள் நகா் வழியாக நாகா்கோவிலுருக்கு அரசுப் பேருந... மேலும் பார்க்க