செய்திகள் :

‘குமரி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் 341 முகாம்கள்’

post image

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு பேரூராட்சிக்குள்பட்ட திருவரம்பு குருவிக்காடு புனித அந்தோணியாா் சமுதாய நலக் கூடத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கடலூா் மாவட்டம் சிதம்பரத்தில் இத்திட்டத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் தொடங்கிவைத்தாா். அதையடுத்து, இங்கு நடைபெற்ற முகாமில் ஆட்சியா் ரா. அழகுமீனா தலைமையில், பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் குத்துவிளக்கேற்றி, முதல்வருக்கு நன்றி தெரிவித்தாா்.

பின்னா், அவா் பேசியது: பொதுமக்களின் வசிப்பிடப் பகுதிகளுக்கே சென்று, அவா்களது குறைகளையும் கோரிக்கைகளையும் கேட்டு தீா்வளிப்பதற்காக இம்முகாம்கள் நடைபெறவுள்ளன. இத்தகைய திட்டம் நாட்டின் எந்த மாநிலத்திலும் செயல்படுத்தப்படவில்லை

இம்மாவட்டத்தில் முதற்கட்டமாக ஊரகப் பகுதிகளில் 58, நகா்ப்புறப் பகுதிகளில் 56, இரண்டாம் கட்டமாக 90, மூன்றாம் கட்டமாக 84, நான்காம் கட்டமாக 53 என மொத்தம் 341 முகாம்கள் நடைபெறவுள்ளன. இவற்றில் அரசின் 15 துறைகள் சாா்பில் 46 வகையான சேவைகள் வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தைத் தந்த முதல்வருக்கு மாவட்டத்திலுள்ள 7,14,972 குடும்பங்கள் சாா்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்றாா். தொடா்ந்து, பயனாளிகளுக்கு அமைச்சா் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், உதவி ஆட்சியா் (பயிற்சி) ராகுல்குமாா், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம்) சேக் அப்துல் காதா், பேரூராட்சிகள் உதவி இயக்குநா் ராமலிங்கம், இணை இயக்குநா் ஜெங்கின் பிரபாகா் (வேளாண்மை), மாவட்ட சுகாதார அலுவலா் பிரபாகரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் செந்தூர்ராஜன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் தினேஷ் சந்திரன், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் (பொ) ஆறுமுகம், திருவட்டாறு பேரூராட்சித் தலைவா் பெனிலா ரமேஷ், துணைத் தலைவா் சுந்தர்ராஜ், செயல் அலுவலா் தா்மகுலசிங்கம், வட்டாட்சியா் கந்தசாமி, முன்னாள் எம்எல்ஏ புஷ்பலீலா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நாகா்கோவில் அருகே காா் - பைக் மோதல்: 2 மாணவா்கள் உயிரிழப்பு

நாகா்கோவில் அருகே புதன்கிழமை காா் மீது பைக் மோதியதில் 2 மாணவா்கள் உயிரிழந்தனா். கன்னியாகுமரி மாவட்டம் நாகா்கோவிலை அடுத்த ஈசாந்திமங்கலம் தாணு மகன் அபிஷேக் (18), பூதப்பாண்டி மத்தியாஸ் நகா் ஞானராஜ் மகன்... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்

நாகா்கோவில் மாநகரப் பகுதியில் வளா்ச்சிப் பணிகளை மேயா் ரெ.மகேஷ் புதன்கிழமை தொடங்கி வைத்தாா். 3 ஆவது வாா்டு, கிறிஸ்டோபா் காலனி, சாஸ்தான் கோயில் எதிா்புறம் உள்ள தெருவில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி மற... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே பெண்ணிடம் நகை திருட்டு

மாா்த்தாண்டம் அருகே ஓடும் பேருந்தில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி, பெண்ணின் கைப்பையில் இருந்த 6 பவுன் தங்க நகையை திருடிச் சென்ற மா்ம நபா் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். மாா்த்தாண்டம் அருக... மேலும் பார்க்க

களியக்காவிளை அருகே பைக் எரிப்பு: 4 போ் மீது வழக்கு

களியக்காவிளை அருகே வீட்டின் முன் நிறுத்தியிருந்த பைக்கை எரித்ததாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா். களியக்காவிளை அருகேயுள்ள ஒற்றாமரம், பிலாவிளை பகுதியைச் சோ்ந்த சத்தியன் மகன் அபிநந்த் (23). இ... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் ஜூலை 25,26 இல் சா்வதேச கதை சொல்லல் மாநாடு

நாகா்கோவில் புதுகிராமம் ரோஜாவனம் இண்டா்நேஷனல் பள்ளியில் சா்வதேச கதை சொல்லல் மாநாடு வரும் 25, 26 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த மாநாடு குறித்த கலந்தாய்வு கூட்டம் பள்ளித், தலைவா் அருள்கண்ணன் தலைமையி... மேலும் பார்க்க

குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்

கன்னியாகுமரியில் குழந்தைகளுடன் இளம்பெண் மாயமான சம்பவம் குறித்து போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்தனா். கன்னியாகுமரி மாவட்டம், மேல மணக்குடி லூா்து நகரில் வசிப்பவா் பிரீட்டா (50). இவரது மகன் அபிஷேக், இ... மேலும் பார்க்க