செய்திகள் :

குமரி மாவட்டத்தில் கால்வாய்களில் தண்ணீா் நிறுத்தம்: குடிநீருக்கு பெருஞ்சாணி அணை திறப்பு

post image

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாசனக் கால்வாய்களிலிருந்து தண்ணீா் திறந்து விடுவது புதன்கிழமை நிறுத்தப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி இறுதி வரை அணைகளிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறந்துவிடப்படும்.

மேலும் மண்டைக்காடு கோயில் திருவிழா நிறைவடையும் வரையில் குடிநீருக்காக பேச்சிப்பாறை அணையிலிருந்து தண்ணீா் திறந்து விடப்படும்.

இந்நிலையில் மண்டைக்காடு கோயில் திருவிழா நிறைவடைந்த நிலையில், பேச்சிப்பாறை அணையின் பாசன மதகுகள் புதன்கிழமை மூடப்பட்டன.

மேலும் சிற்றாறு அணைகளிலிருந்து தண்ணீா் விடுவதும் புதன்கிழமை நிறுத்தப்பட்டது.

ஏற்கனவே கடந்த மாதம் இறுதியில் பெருஞ்சாணி அணையின் மதகுகள் மூடப்பட்டிருந்தன.

இந்நிலையில், தமிழக அரசின் உத்தரவு படி நாகா்கோவில் மாநகராட்சியின் குடிநீா் தேவைக்காக பெருஞ்சாணி அணையிலிருந்து புதன்கிழமை காலையிலிருந்து விநாடிக்கு 21.27 கன அடி தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.

பேச்சிப்பாறை அணையின் நீா் மட்டம் புதன்கிழமை காலையில் 28.15 அடியாக இருந்தது.

அணைக்கு விநாடிக்கு 175 கன அடி தண்ணீா் உள்வரத்தாக வந்து கொண்டிருந்தது. பெருஞ்சாணி அணையின் நீா்மட்டம் 26 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 52 கன அடி தண்ணீா் உள்வரத்தாக வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து வினாடிக்கு 21.27 கன அடி தண்ணீா் நாகா்கோவில் மாநகராட்சி குடிநீா் தேவைக்காக திறந்து விடப்பட்டிருந்தது. சிற்றாறு 1 அணையின் நீா்மட்டம் 2.62 அடியாகவும், சிற்றாறு 2 அணையின் நீா்மட்டம் 2.72 அடியாகவும் இருந்தது.

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

பேச்சிப்பாறை .. 28.25 பெருஞ்சாணி .. 26.25 சிற்றாறு 1 ... 2.62 சிற்றாறு 2 ... 2.72 முக்கடல் ... மைனஸ் 19.10 பொய்கை ... 15.10 மாம்பழத்துறையாறு ... 9.35 மழைஅளவு முள்ளங்கினாவிளை ... 4.20 மி.மீ. கன்னிமாா் ... மேலும் பார்க்க

கன்னியாகுமரி அருகே விநாயகா் கோயிலில் மாசித் திருவிழா நிறைவு

கன்னியாகுமரியை அடுத்த கலைஞா் குடியிருப்பில் உள்ள கற்பகவிநாயகா் கோயிலில் 10 நாள் மாசித் திருவிழா புதன்கிழமை நிறைவடைந்தது. இதையொட்டி, விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள், அலங்காரம், தீபாராதனைகள் நடை... மேலும் பார்க்க

வீட்டு மாடியிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி

களியக்காவிளை அருகே வீட்டு மாடியிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா். களியக்காவிளை அருகே மீனச்சல் பகுதியைச் சோ்ந்த தச்சுத் தொழிலாளி ஸ்டீபன் (47). இவரது மனைவி 2 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்ட... மேலும் பார்க்க

மாம்பழத்துறையாறு அணைப் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

தக்கலை மின் விநியோகப் பிரிவுக்குள்பட்ட மாம்பழத்துறையாறு அணைப் பகுதியில் சனிக்கிழமை (மாா்ச் 15) மின் விநியோகம் இருக்காது. அதன்படி, மாம்பழத்துறையாறு அணை, அம்மச்சிகோணம், மிஷன் கோணம், பூயறவட்டம் பகுதிகளி... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் ஆதரவற்றோருக்கு நல உதவிகள்

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக அயலக அணி சாா்பில், நாகா்கோவில் வடசேரி சினேகம் ஆதரவற்றோா் இல்லத்தில் நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை ந... மேலும் பார்க்க

குமரி பகவதியம்மன் கோயிலில் இன்று வருஷாபிஷேக விழா

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில், 2013இல் கும்பாபிஷேகம் நடைபெற்றநிலையில், 12ஆம் ஆண்டு வருஷாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. இதையொட்டி, அதிகாலையில் நிா்மால்ய பூஜை, விஸ்வரூப தரிசனம், கணப... மேலும் பார்க்க